16 Apr 2016

உடைபடும் நேரம்(பிம்பங்கள்,,,,)

என்னம்மா  வேப்பம்பழம்   பெறக்க வந்தீங்களா? பெறக்கியாச்சா? இன்னும் பெறக்கணுமா?எனக்கேட்டவனாய்நகர்கிறேன்அந்தஇடத்தை விட்டு.

  சின்ன பழங்கள் அவை. மரத்திலிருந்து உதிர்ந்து உருண்டை,உருண்டையாய் முகத்தில் மஞ்சள் பூசிக் கொண்டு உருண்டுஓடி காட்சிப் படுகிறது.
தலையில்பின்னலிட்டுபூவிட்டு,நெற்றியில்பொட்டிட்டு,கண்ணுக்கு மையிட்டு அழகு பூத்திருந்த பெண்ணாய் உலாவருகிற நிலாவாய் அந்த பழங்கள் கண்ணுக்கு காட்சியளிக்கக் கண்டேன்.

மைதானமாய் பூத்து மலர்ந்திருந்த சின்ன இடம்,வீட்டை அமர வைத்தது போக மிச்சமிருக்கிற இடத்தில் எதற்கும் இருக்கட்டும் என வேப்பமரங்கள் இரண்டு நட்டிருந்தோம்,

இப்பொழுது அதற்கு  சீசன்  போலும்,மழைக்கு தன் காலம் மாதிரி/மனம் பிடித்த பொழுதுகளில்,மனம் பிடித்த நாட்களில் ,மனம் பிடித்த வேளைகளில் மனம் பிடித்துபோகிற அளவிற்கு இப்படி பெய்துவிடும் போல/
மொட்டுவிரிந்து பூவாகி,பூ மலர்ந்து பிஞ்சாகி,பிஞ்சு காயாய் உருவெடுத்து,காய் கனியாகி தருகிற கலர் மஞ்சளாய் கண்ணுக்கு புலப்படுகிற நேரங்களில்லேசாகஅடிக்கிறகாற்றுக்கும்,நமது பார்வையின் தலையசை விற் குமாய் உதிர்ந்து விழுகிற பழங்களை பெறக்க தினசரி காலை ஏழு மணிக் கெல்லாம் மிகச்சரியாகஆஜராகி  விடுகிறாள்அந்த  மூதாட்டி,  அவள்   யாரென  எனக்குஇதுவரை தெரியாது,
அவளைஇதுநாள் வரை  என் குடியிருப்பு பகுதியில்  கண்  கொண்டுபார்த்ததில் லை.

யாராக இருக்கக்கூடும் அவள்,ஏன் இங்கு குறிவைத்து வருகிறாள் என்கிற மாதிரியான குதர்க்கங்களையெல்லாம் விட்டு விட்டு “அவள் பெறக்கிவிட்டுப் போகட்டுமேஅந்தபழங்களை,பெறக்கிசேர்த்து,நனைத்து,காயப்போட்டு,முத்தெடுத்துஅதை கிலோ இவ்வளவு என போட்டு பணம் பண்ணுகிற அவளது உழைப்பு பிடித்துப் போகிறது அவள் பழம் சேகரிக்க வருகிற அந்த காலை பொழுதுகளில்/

எனது இளம் வயதிலும்,பள்ளி பிராயங்களிலுமாய் எனது முக்கிய வேலை இதுவாகவே இருந்திருக்கிறது வேப்பம் பழ சீசன்களில்/

 அது காய்த்து உதிர்கிற நேரங்கள் மிகவு  ரம்யமானவை.முதலில்  காய்க்கிற
காய்கள்,அவற்றிலிருந்து உருமாருகிற பழங்கள் பெரியதாகவும் காண புஷ்டியாகவும்/
அதற்கப்புறமாய் காய்க்கிற காய்களிலிருந்து உருமாருகிற பழங்கள் கொஞ்ச மாகஉடல் சுருங்கி தோலில் சுருக்கம் காணப்பட்டு.

அதற்கப்புறமாய்,அதற்கப்புறமாயும்,,,,என காய்க்கிற,உதிர்கிற பழங்கள் சின்ன தாகி,சின்னதாகி உறுமாறி ஊதிர்வது நின்று போகிற கணம் வரை அந்த மூதாட்டி வந்து பழம் பெறக்கிப்போகிறாள்.

  ஒரு நாள் என்னையும்,என் மனைவியையும் கேட்காமல் மொட்டை மாடியில் ஏறி பழங்களை பெறக்கி விட்டாள்,அதை என் மனைவி என்னிடம் ஒரு செய்தியாக சொன்னபோது “விடு நம் இருவரின் அம்மா வயது இருக்கும் அவர்களுக்கு,அவர்களை சொல்லும் ஏதேனும்ஒரு கடும் சொல் அல்லது சுடு சொல் என்பது சங்கடமே,தவிர நம்மிலிருந்து தூரத்து ஊரில் குடியிருக்கிற நம் இருவரதுதாயின்முகத்தைஇவரதுமுகத்தில்தரிசிக்கமுடிகிறதுஅதற்காகவாவதுஅவர்கள்வரட்டும்,பழம்பெறக்கட்டும்,பழம்சேர்க்கட்டும்என்ன குறைந்துவிடப்போகிறதுஇப்போது?”,,,,,,,என்கிற கேள்வியுடன்  சமீப  காலமாக  தினசரி   பழம்  பெறக்க   வருகிறவளை“என்னாம்மாபழம்பெறக்க வந்தீங்களா? ஒங்களுக்காகத்தான்   தரையக்  கூடகூட்டாமவச்சிருக்கோம் கூட்டுனா பழமெல்லாம் மண்ணேறிப் போகும், அப்பறம் பழமும் நசுங்கிப் போகும்,கால் மிதிபட்டு வெட்டியாப் போகும் என்கிற முகமன்பேச்சுடன் வரவேற்கிறேன்/





5 comments:

KILLERGEE Devakottai said...

நன்று நண்பரே அந்த தாய் பெறக்கிக் போகட்டுமே.... ?
தமிழ் மணம் 1

துரை செல்வராஜூ said...

வேப்பம்பழத்துடன் மண்வாசம்..
மனதின் வாசமும்!..

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜ் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

மண்வாசம் அருமையாய் வீசுகிறது
தம =1

vimalanperali said...

வணகம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/