22 Jan 2017

விழிப்பு,,,,,,,





தூக்கம் வரவில்லை என மருத்துவரிடம் சென்றேன்.
அவர் கேட்டார்,எத்தனை நாளாய் இப்படி என/
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில்
இளைஞர்களும் மாணவர்களும்
இன்னும் பலருமாக கைகோர்த்த
நாளிலிருந்து என்றேன்.
கலந்து கொண்டீர்களா போராட்டத்தில்
நீங்கள்,,,,,என்றார்,
இல்லை வெறும் உணர்வும்
உளப்பூர்வமான உவகையும் மட்டுமே
என்னை தூங்கவிடவில்லை என்ற என்னை
சிறிது நேரம் உற்றுப்பார்த்த மருத்துவர்
போராட்டம் முடியும் வரை நீங்கள்
இப்படியே இருங்கள் விழிப்புடன்.
உங்களைப்பின் பற்றியும் ஆதரவளித்தும்
விழிப்புடனுமாய் நானும் இருக்கிறேன் என்றார்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
விழிப்புடன் இருப்போம்

Thulasidharan V Thillaiakathu said...

அட! அருமை! ஆம் கலந்து கொள்ளவில்லை என்றாலும் உணர்வு பூர்வமாக விழிப்புடன் ஆதரவுடன் ...

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/