12 Apr 2017

கீறலோடே,,,,,

கைகீறிய கீரலும் நில்லாது வந்த ரத்தமும்தான் இவனை லேசான மயக்க நிலைக்குகொண்டு சென்றிருக்க வேண்டும்.என நினைக்கிறான்,

வலது கையின் நடுப்பகுதியாக இருந்தது.,அதுதான் எட்டிப் பிடிப்பதற்கு தோ தாக இருந்தது,தரையிலிருந்துகைஎட்டாத உயரமாய் இருந்தது, ஏணி அல்லது ஒரு ஸ்டூல் இருந்தால் கூட போதுமானது,இல்லையேல் இருக்கவே இருக்கி றது பிளாஸ்டிக் நாற்காலி,அதை எடுத்து வந்தால் கூட அதன் மீதேறி கட்டிக் கொண்டிருந்திருக்கலாம்,

இல்லை வேணாம் பிளாஸ்டிக் நாற்காலிக்கும், ஸ்டூலுக்கும் எங்கு போவது, இருப்பதை வைத்து சமாளிப்போம் என கதவின் ஓரமாய் இருந்த சுவரோர மாய் இருந்த திண்டில்ஏறி கட்டிவிடலாம் கையில் இருக்கிறபிளக்ஸ்பேனரை என எண்ணியவனாய் ஏறுகிறான் சுவர் பிடித்து மேலே/

தரையிலிருந்து எட்டடி உயரம் இருக்கலாம்,பக்கவாட்டுத்திண்டிலேறி கட்டி விட்டான் பேனரைக் கட்டிவிட்டு இறங்குகிற போது பிடிமானம் வேண்டி பக்கவாட்டாக இருந்த சுவர்போல் அலங்கரிக்கப்பட்டிருந்த தகரத்தைப்பிடித்து விட்டான்.

பிடித்த பிடியை இருகாமல் பிடித்ததில்தகரத்துடன் சேர்த்து கை இழு பட்டுக் கொண்டு வந்து விட்டது.ரத்தம் ரத்தம் ரத்தம் கையில் வந்த ரத்தம் கீழே வடிந்து இவன் நின்றிருந்த இடம் கொஞ்சம் ரத்தக்காவு கொடுத்த இடம் போல் ஆகிப்போனது,

அப்பொழுதான் கவனித்தவர்களாய் உடனிருந்து பேனர் கட்டியவர்களில் ஒருவர் தண்ணீர் கொடுத்தார், ஒருவர் ஓடிப்போய் டீ வாங்கி வந்தார்,ஒருவர் தோளில் சாய்ந்து கொள்ளுங்கள் ஒன்றும் தெரியாது என்றார், இன்னும் ஒருவர்தான் சரியாகச்சொன்னார் மொகத்துல கொஞ்சம் தண்ணிய அடிங்க இன்னும் ரெண்டு நிமிஷத்துல கண்ணக்கட்டீரும், பக்கத்துல ஆஸ்பத்திரி இருக்கான்னு பாருங்க,ரத்தம் நிக்க மாட்டேங்குது,அங்க போயி ஒரு ஊசியப் போட்டுட்டு வந்துட்டம்ன்னா ரத்தம் நின்னுரும்,அப்புறமா டாக்டர் மருத்துவம் பாத்துக்குருவாரு,வாங்க என டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போ னார்.குடித்த டீயையும் முகத்தில் அடித்த தண்ணீரையும் மீறி ரத்தம் வெளி போனதில் மயக்கம் வந்து விட்டது.

கூட்ட அறையை அலங்கரித்து விட்டு இவனும்மணிகண்டனும் தோழருமாய் அலங்கரித்துவிட்டுஇவனும் மணிகண்டனும் தோழருமாய் கூட்டத்திற்கான அழைப்பு பேனரையும் கூட்ட அறிவிப்பு பேனரையும் கட்டப்போகையில்தான் அவர் வந்திருந்தார்,

அதென்னஆடைஆயத்தம்எனத்தெரியவில்லை.அவர்அணிந்திருக்கிறஆடைகள் எப்பொழுதும் அப்படித்தான் இருத்திருக்க இவன் பார்த்திருக்கிறான். சிவப்புக் கலர் பேண்ட், மஞ்சள் கலர் சட்டையுமாய் வருவார்,அதற்காக சிவப்பும் மஞ்ச ளும் மட்டுமே அவரது நிரந்தரக்கலர் எனச்சொல்லி விட முடியாது.இது போலான கலர்களே அவரது விருப்பத்தேர்வாய் இருந்திருக்கிறது.

அன்றும் அப்படித்தான் வந்திருந்தார்,அப்பொழுதான் வந்து வாசலோரமாக இரு சக்கர வாகனத்தை நிறுத்தியவர் நாங்கள் மூவரு மாய் செய்து கொண்டி ருந்த வேலையில் கையையும் மனதையும் கலக்க விட்டிருந்தார்.அவரது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு,இரு சக்கர வாகனம் நிறுத்த அந்த அங்கு சரியான இடம் இல்லை.பாஜாரின் முடிவு கோ டாய் இருந்த இடம்.

அங்குஇருந்தஹோட்டலின் மாடி அறை மீட்டிங் ஹாலில் தான் ஏற்பாடாகி யிருந்தது கூட்டம்,அப்படி ஒரு அறை அங்கு இருக்கிறது என்பது இவனுக்கு இது நாள்வரை தெரியாது.பெருமாள் சொல்லித்தான் தெரியும்.

கூட்ட ஏற்பாடு இங்கு இந்த நாளில் இடம் பார்க்க வேண்டும் என்கிற கட்டா யம்வருகிற போது இங்கு இடம் இருக்கிறது எனச்சொன்னார்,

ஆயிரம் தடவை அந்தப்பாதை வழியாக போய் வந்திருக்கிறான்.எப்படி கவனி க்கத் தவறினான் எனத் தெரியவில்லை. சரி ஏதோ ஒரு கவனப்பெசகு,

பகலிலேயே பசு மாடு தெரியாத ஆளு என்பார்கள்.இவனை,இவன்தானா போய் அந்த அறையை பார்த்து வைத்திருக்கப்போகிறான்,பெருமாள் தயவில் கூட்ட அறையை பதிவு செய்து விட்டு இன்று நடக்க இருக்கிற கூட்டத்திற் கான ஆயத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது வந்தஅவர் கொண்டு வந்தி ருந்தஇரு சக்கரவாகனமும் அவரைப்போலவே வித்தியாசப்பட்டுத் தெரிந்த தாக/

முன் புறம் ஹேண்டில் பார் பிடிக்கிற இடமும் பின்புறம் ஆள் உட்கார்கிற இடமும் தூக்கிக்கொண்டு தெரிய பள்ளமாக இருந்த இடம்தான் உட்கார்ந்து ஓட்டுகிற சீட் போலத்தெரிகிறது.அதுவும்முழுமைபட்டுத்தெரியாமல்கருப்பாக ஒரு சீட்டை அவரசமாக எடுத்து ஒட வைத்திருந்தது போலிருந்தது. வண்டி யின்விலைஎவ்வளவுஎனக்கேட்டபோதுஒருலட்சத்திற்கும்மேலாய்விலையை ச் சொன்னார்.12500 க்கு வாங்கிய இவனது வண்டியில் இரண்டு பேர் உட்கார் ந்து கொண்டு நூறு கிலோ அரிசி மூடையை வைத்துக்கொண்டு போகலாம்.

அப்படியானால் அது பெரிதா இது பெரிதா என ஒத்துப்பார்க்க நேரமில்லை. வாருங்கள் என வாயகலச்சிரித்து வரவேற்று இவர்கள் மூவரில் ஐக்கியமாக விட்டார்,பரஸ்பரம் ஐக்கியப்பட்டுப்போவதும் பிறரை ஐக்கியப் படுத்துவதும் எதிலும் எப்பொழுதும் நிறைந்திருக்கிற ஒரு நுண்கலை என்பார் பெரியவர்.

அந்தநுண்கலையின்படிஅவரைஇவர்களில் ஐக்கியப்படுத்திக்கொண்டார்களா, எனச்சரியாக தெரியவில்லையாயினும் கூட ஐக்கியப்படு வதும் ஐக்கியப் பட்டுப்போவதும் சமூகத்தின் இடைநிலைச்செயல் பாடு போலிருக்கிறது.

இன்று காலை வீட்டிலிருந்து கிளம்பும் போது அவரது மனைவி சொல்லியி ருக்கிறாள். ,லீவு நாளும் அதுவுமா இப்பிடி மீட்டிங்குன்னு போயிட்டீங்கன்னா நான் ஒத்தையில ஒக்காந்துக்கிட்டு என்ன செய்யட்டும்சொல்லுங்க,,,என்றாள்,

அவள்சொல்வதும் வாஸ்தவமே.வார நாட்களில் இரவும் ஆளுக்கொரு திசை யாய்வேலைக்குச்சென்றுவிட வீட்டில் இருக்கிற இந்த ஞாயிற்றுக்கிழமையும் அரசு விடுமுறை தினங்களும் சொர்க்க புரியாய் பட்டுத் தெரிகிறது.

நானும்கடந்தஆறுமாசமா சொல்லிக்கிட்டு இருக்கேன் ,எங்கிட்டாவது வெளிய போவம்,எங்கிட்டாவதுவெளிய போவம்ன்னு சொல்லி,அதுக்கு வழியக் காணம் ஏதாவது மீட்டிங்க்,கூட்டம் தோழர்களோட நண்பர்களோட வீட்டு விசேஷம் ன்னு போயிர்றீங்க,கூட மாட ஏதாவதுக்கு ஒத்தாசையா இருந்து ஒதவுனாத் தான எனக்கும் கொஞ்சம் மன ஆறுதலா இருக்கும்,இல்ல வீட்ல கூட இருந்தாவே போதும்,நானும் போன மூணு மாசமா சொல்லிக்கிட்டு இருக் கேன் ,பாய் கடையில் பிரியாணிவாங்கீட்டு வாங்க,வாங்கீட்டு வாங்க ன்னு, சொல்லி அலுத்துப்போயிட்டேன்,நீங்களும் அந்தா இந்தான்றீங்களே தவிர பிரியாணி வாங்கீட்டு வர்ற வழியக் காணம்,

இப்பத்தான் எனக்கு ஆக்ஸிடெண்ட் நடந்து முடிஞ்சிருக்குது, அப்ப பக்கத்துல இருந்தவருதான் நீங்க,இப்பயெல்லாம் பக்கத்துலேயே இருக்குறதே இல்லை ங்குறது கொஞ்சம் மனம் வருத்தமா இருக்கு,என்றாள்,

அந்த வார்த்தைகளை கேட்டுக் கொண்டே வந்த அவரும் இவனின் கைகிழிக் கப்பட்ட போது ஆஸ்பத்திரிக்குபோன இவனுடன் அவரும் சேர்ந்துவருகிறார்.

5 comments:

Kasthuri Rengan said...

தொடர்கிறேன் தோழர்
தம +

கரந்தை ஜெயக்குமார் said...

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும்
அன்பு பாராட்டுதலும்தானே வாழ்க்கை
அருமை

vimalanperali said...

பிரியங்களின் விதைப்பு.

vimalanperali said...

நன்றி.ததும்பிய மனமும் அன்பான சொல்லாக்கமும்!

vimalanperali said...

வணக்கம்.சார் அன்பின் கருத்திற்கு!