30 Jun 2017

மனக்காற்று,,,/




காய்கறி வாங்கிக்கொண்டிருக்கையில்
எனதருகில் வந்து நின்ற நடுத்தர வயது
பெண்மணி கடைக்காரரிடம்
கொடுத்த ரூபாய் ஐம்பதிற்கு
பை நிறைய காய்கறிகளை
கொடுத்து அனுப்பி விட்டு
எனது காதருகில் வந்து சொல்கிறார்.
அந்தம்மா ஹோட்டலில் வேலை செய்கிறார்
குறைந்த சம்பளத்திற்கு.
வாரம் ஒரு முறை வருவார்,
பையையும் ரூபாவையும் தருவார்,
நானும் வாங்கிக்கொண்டு பை நிறைந்த
காய்கறிகளை கொடுத்து அனுப்புவேன்.
என்ன கொண்டு செல்லப்போகிறேன்
வாழ்க்கையை முடித்துகொண்டு போகிற நாளில்,,,?
இருக்கிற நாளில் என்னால் முடிந்த
உதவி செய்கிறேன் மனதிருப்தியுடன் என்கிறார்/

4 comments:

KILLERGEE Devakottai said...

நல்ல மனம் வாழ்க....
த.ம.1

திண்டுக்கல் தனபாலன் said...

நடமாடும் தெய்வம்...

vimalanperali said...

நன்றியும் அன்புமாய்!

vimalanperali said...

நன்றியும் அன்பமாய்!