18 Jul 2017

புலர் பொழுதில்,,,,,/


புலர் பொழுதில் எழுந்து
இரு சக்கர வாகனத்தில்
பயணிப்பதும் சற்றே
தூரம் காட்டி தூரத்து இருக்கிற
நண்பனது கடையில்
தேநீர் அருந்துவதும்
அங்கு வருகிற போகிற
நண்பர்கள் மற்றும் தோழர்கள் என
இன்னும் இன்னுமான
நிறைந்து காட்சிப்படுகிற
பலரிடம் பேசுவதும் அளாவளாவதும்
மனதுக்கு இதமாகவும் நன்றாகவும்
இருக்கிறதுதான்.


           ******************** 



காலத்தை உள்ளடக்கி
வட்ட வடிவங்களிலும்
சதுரங்களிலும்
சின்ன மற்றும் பெரிய முள்ளின்
துணைகொண்டும்
கூடவே விநாடி முள்ளை கைபிடித்து துணைக்கழைத்துக்கொண்டுமாய்
பயணிக்கிற கடிகாரங்கள்
எப்பொழுதும்
நேரம் உடைத்துக்காட்டுவதில்லை.

4 comments:

KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே
த.ம.1

vimalanperali said...

வணக்கம் கில்லர்ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

K. ASOKAN said...

அருமையான பதிவு

vimalanperali said...

வணக்கம் அசோகன் கருப்பசாமி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/