28 Oct 2017

விழுதொட்டு,,,,,

திருச்சி முக்கு ரோட்டிலிருக்கிற வங்கியில்தான் நகையை திருப்ப வேண்டும்.

நகையை அடகு வைத்து இன்றுடன் ஒரு வருடத்திற்கும் மேலாகிப் போனது. அடகு வைக்கிற அன்றே சொன்னார்,ஒருவருடம்தான் தவணை ,அதற்கு மேல் போனால் ஏலம் விட்டு விடுவோம் ,பார்த்துக் கொள்ளுங்கள் என்கிற எச்சரிக் கை வாசகத்துடன்தான் அடகுக்கு வாங்கினார்கள்.

நோட்டீஸ் விட்டிருந்தார்கள் வங்கியிலிருந்து.சாதாரண நோட்டீஸ் இல்லை ரிஜிஸ்டர் போஸ்டரில் வந்திருந்தது.போஸ்ட் மேன் கூடக்கேட்டார் ”என்ன இது என்னைக்கும் இல்லாத விசேசமா இன்னைக்கி ரிஜிஸ்டர் தபால் வந்து ருக்கு,அதுவும் பேங்குல இருந்து” என/”

“என்ன வந்துருக்கும்ன்னு ஒங்களுக்குத் தெரியாதா போஸ்ட்மேன் சார்., இருக்க மாட்டாமநகையக்கொண்டு போயி பேங்குலஅடகுவச்சிட்டேன்.அது இன்னிக்கு வட்டியும் அசலுமா சேந்து விஸ்வரூபம் எடுத்து நிக்குது,என்ன செய்யன்னு தெரியல,அந்த சேதிதாங்கி வந்த தபாலாத்தான் இருக்கும். மொதல்ல தபாலக் குடுங்க,பிரிச்சி ஒங்ககிட்டயே காம்பிச்சிருறேன்” எனச் சொன்ன இவனின் மனைவியிடம் கொடுக்கப்பட்ட தபாலை பிரித்து போஸ்ட் மேனிடம் காண்பி த்து விட்டு ”என்ன நான் சொன்னது சரியாப்போச்சா,,,” எனக்கேட்டு விட்டு ”சரி சரி அதெல்லாம் இருக்கட்டும், எனக்கு தபால் வந்த சேதிய நீங்க வாட்டுக்கு பேச்சு வாக்குல இந்ததெருவுல யாருகிட்டயும் சொல்லீறாதீங்க”என இவனின் மனைவி போஸ்ட் மேனிடம் வைத்த கோரிக்கையை பின் தள்ளிவிட்டுவராய் சொல்கிறார் போஸ்ட்மேன்,

”அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா,போனவாரம் தபால் குடுத்துட்டு பேசிக் கிட்டு இருக்கும் போது தற்செயலா ஒங்க சொந்தக்காரம்மா கேட்டாங்க, ஒங்க ளப்பத்தி என்ன எப்படி இருக்கா ஏங் சொந்தக்காரின்னு,நானும் நல்லாத்தான் இருக்காங்க,ஏன்இப்பிடிஎதுனாலும்தூதுவன் மாதிரி ஏங்கிட்டயெ கேக்காட்டி நேர்ல போயி பேச வேண்டியதுதானன்னு கூட கேட்டுப்பாத்துட்டேன்,அதுக்கு அந்தம்மா சொல்லுது அது நம்ம கூடயெல்லாம் பேசுமா என்னன்னு தெரியல ப்பா, இருந் தாலும் எனக்கு அது மேல இருக்குற அக்கறையிலதான் கேக்கு றேன்,என்ன ஏதுன்னு இஷ்டமிருந்தா சொல்லு இல்லைன்னா நான் யாரு மூலமாவது கேட்டுத் தெரிஞ்சிக்கிறேன்னு அவுங்க சொன்ன சொல்லுக்கு ஆத்த மாட்டாம ஒங்க வீட்டுக்கு பேங்குல இருந்து ஒரு தபால் வந்துருக் குன்னுபேச்சுவாக்குலசொல்லீட்டேன்,அதஇன்னைவரைக்கும் மனசுல வச்சிக் கிட்டு நீங்க கேக்குறீங்களேம்மா,,” என்பார் போஸ்ட் மேன் பதிலுக்கு/ அது இது என கதை கதையாகப்பேசினாலும் கூட பேச்சின் முடிவாய் வைக்கிற முற்றுப் புள்ளியின் போது சிரித்துக்கொண்டே விடை பெறுபவறாக இருப்பார் போஸ்ட் மேன்/

அவரும் பாவம் மனிதன்தானே,அவருத்தெருவோடு சேர்த்து நான்கு ஏரியா, கிடைக்கிறநேரத்தில்பார்க்கிறமனிதர்களுடன்இப்படியாய் நட்புடனும் ஸ்னேகம் சுமந்தும் பேசினால்தான் உண்டு.

அந்தவகையில்இவனது வீடும் இவன் மனைவினது சொந்தக்கார்களின் வீடும் போலும்.

சொல்லி சந்தோசப்பட்டுக்கொள்வார் போஸ்ட்மேன்,”பரவாயில்லம்மா இந்தத் தெருவுல ஒங்க ரெண்டு குடும்பமும் என்னைய மனுசனா நெனைச்சி பழகு றீங்களே,அது நான் செஞ்ச புண்ணியம்.”

“மொதத் தெருவுல ஒரு புண்ணியவதி வீட்டு நடையேறி தபால் குடித்ததுக்கு சண்டைக்கு வந்துட்டா,,,பேசுறா பேச்சு அந்தப் பேச்சு கடைசியில கடைசியில ஓந்தராதரம் தெரியாம சாக்கடையில மிதிச்ச மாதிரி ஓங் வீட்டு வாசல் படியேறி வந்தது ஏந்தப்புதான் மன்னிச்சிக்கன்னு சொன்னப்பக் கூட,அப்ப ஏங் வீட்டுப்படிய சாக்கடைன்னு எப்பிடி சொல்லப்போச்சின்னு பிலு பிலுன்னு புடிச்சிக் கிட்டா,அப்ப்புறம் என்ன செய்ய பொறுத்துப்[பொறுத்து பாத்த நானு சரித்தான் போடின்னு சொல்லீட்டுவந்துட்டேன்”,என்பார் அவர்களிடம்/

போன மாதம் தான் பேங்கிற்கு சென்று தவனை கேட்டு வந்திருந்தாள். அவர்க ளும் சீக்கிரம் திருப்புங்கள் .இல்லையென்றால் ஏலம் போய் விடும் என்றார் கள், போதாதற்கு நகை வைக்கும் போது சொன்ன அதே வாசகத்தை அச்சுப் பிசகாமல் ஒப்பித்தார்கள்.அதையும் சிரித்துக்கொண்டேதான் சொன்னார்கள்.

“ஏன் சார் ஏலம் விடுறதக்கூட சிரிச்சிக்கிட்டேசொல்லாட்டிகொஞ்சம்சாதாரண மாத்தான் சொன்னா என்ன எனக் கேட்ட போது வங்கியின் நகை மதிப்பீட்டா ளர் சொன்னார்,

”அப்படியில்லாம்சிரிச்சிக்கிட்டேசொன்னாப்புலஒங்கநகைய ஏலம் விடப் போற தொனா வெட்டுல பேசுறேன்னு அர்த்தம் இல்லம்மா,நாங்க ஒரு நாளைக்கி ஒங்களப்போலஇங்க வந்து போற பலபேர்கிட்ட சொல்றோம்.அது போல ஒங்க கிட்டயும் சொல்றோம், தப்பா எடுத்துக்காதீங்கஎல்லார்கிட்டயும் பேசிப்பேசி வார்த்தை அப்பிடியே பாடம் பண்ணுனது மாதிரி வாயில இருந்து வந்திருச்சி. அது போலத் தான் ஒங்ககிட்டயும் சொன்னேன்,மத்தபடி சிரிச்சது வேணுமின் னே இல்லை, அது ஏங் பழக்கம்,தொழில்க்காரங்குறதுனால அந்த மாதிரியான சிரிப்ப தக்க வச்சிக்கிறவேண்டியதிருக்கு,,, ”என்பார்நகைமதிப் பீட்டாளர்பேச்சின் பதில் பேச்சிற்கு.

என்னமோ போங்க சார்,வைக்கிறது எங்க நகையத்தான் கொடு வந்து வைக்கி றோம்,அதுக்கு வட்டியும் சேத்து கட்டீறுறோம்,அப்பறம் எதுக்கு போயி இத்த னை நாளைக்குள்ள திருப்பணும்ன்னு கண்டிசன் போடுறீங்க,என்கிற இவரது பேச்சிற்கு பதில் பேச்சு அவரிடமிருந்து உடனே வராது,

அப்படிவருகிறசமயங்களில்அவரதுபேச்சுஆயிரம்வெள்ளைமுடிக்குள்ஒளிந்து கொண்டிருக்கும்ஒரு கருப்பு முடி போலவும் நிறைந்து கிடக்கிற கருப்பு முடிக் குள் இருக்கிற வெள்ளை முடி போலவும் இருக்கும்.

அவ்வளவு அனுபவமா எனக்கேட்கத் தோணும் அவர் பேசுகிற சமயங்களில்/ பொதுவாக இது மாதிரி பேசுபவர்கள் ஏதாவது சிறப்பு தன்மை கொண்டவர்க ளாக இருப்பார்கள் என சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் நேரில் பார்த்ததில்லை.இப்பொழுதுதான் பார்க்கிறாள்,

இவரைப்போலவே அவள் பிறந்த ஊரில் ஒருவர் இருந்தார்,அவருக்கும் இவரு க்கும் இருக்கிற ஒரே வித்தியாசம்,அவர் வயதானவர்,இவர் வயது குறைந் த வர் அவ்வளவே,,,

சின்னக்குழந்தைiகளுக்குகாய்ச்சல் என்றால் மந்திரிப்பார்,திருநீறுகொடுப்பார், வீட்டில்ஏதாவது நல்லது கெட்டது என்றால் மந்திரித்து தாயத்துக் கொடுப்பார். குடும்பங்களில்வருகிற குழப்பம் அமைதியின்மை சண்டைஎல்லாவற்றிற்கும் தீர்வு சொல்லுவார்.சாமியாடுவார் குறி சொல்லுவார்,கல்யாணம் சடங்கு வீடு நல்லதுகெட்டதுக்குநேரம் குறித்துக் கொடுப்பார்,ஊரில் அவருக்கென இருக்கிற நல்லபெயர் ஊரில் அவரை திரு உருவாக இருத்தி வைத்திருந்தது,

அதுபோல இவருக்கும் பழக்கம் இருக்குமோ என இவளை நினைக்க வைத்தி ருக்கிறது பல சமயங்களில்/அவரிடம் கேட்டு விடலாமா எனக்கூட நினைத்தி ருக்கிறாள்.ஆனால் இது நாள் வரை அவரிடம் கேட்டு விடும் சந்தர்ப்பம் வாய் த்ததில்லை.

வரும் போது ரயில்வே லைன் வழியாகத்தான் வந்தான்.வேறு வழியில்லை, இப்போதைக்கு இதுதான் வழிஎனஆகிப்போனது,

பாலம் வேலை ஆரம்பித்த நாளிலிருந்து இவ்வழியாகத்தான் போக்குவரத்து இரண்டாவதுகேட்வழியாகப்போகலாம்.ஆனால்ஏதாவதுரயிலுக்காககேட்மூடித்திறந்தார்களானால்தொலைந்தோம், குறுகலான தெருவை அடைகொண்டு வைத் திருக்கிறகேட்திறந்தவுடன் இருபக்கமுமாய் இருந்து வருகிற கூட்டம் அள்ளிக் கொள்ளும், காலை நேரமும் மாலை நேரமுமாய்,,/

போக வேண்டிய இடத்திற்கும் போவதற்கு உறுதியாய் ஒரு மணி அல்லது அரை மணி தாமதமாகிப் போகும்,

அதைதவிர்க்கவேஇந்தவழிப்பயணமாய் பல பேர் பயணப்பட்டு விடுவதுண்டு.

போன மாதத்தின் ஒரு மழை நாளன்றின் மாலையில் ரயில்வே இந்த வழி யாகப் போகும் போது கையில் குழந்தையுடன் கணவன் மனைவி இருவரும் வந்து கொண்டிருந்தார்கள்.கையில் குழந்தையை வைத்துக்கொண்டு மனைவி பின்சீட்டில்உட்கார்ந்திருந்தாள்.இவனுக்கு எதிராகத்தான் வந்து கொண்டிருந் தார்கள்.

இவன் ரயில்வே லைன் மீது ஏறி இறங்கும் போது இவனுக்கு எதிர்தாற்ப் போல் அவர்களும் ஏறி இறங்க போனார்கள்,

ஏறி இறங்கப்போன நேரம்பார்த்தா சறுக்கி விட வேண்டும்.சறுக்கி விழுந்து விட்டார்கள்.தண்டவாளம் சறுக்கி விழுந்த வேகத்தில் கையிலிருந்த அந்தப் பெண்ணின் கையிலிருந்த குழந்தை பிடி நழுவி கீழே விழுந்து விடுகிறது. கீழே விழுந்த அதிர்ச்சி தாளாமல் வண்டியும் விழுந்து விட வண்டியின் பின் சக்கரத்தின் பக்கமாய் விழுந்து கிடந்த அந்தப் பெண் ”அய்யோ ஏங்கொழந்த ஏங்கொழந்த,”,,,எனக் கத்தியவாறே எழுந்த வேளையாய் இதுவரை அடை கொண்டிருந்த மழை தன் பலம் காட்டி பெய்ய ஆரம்பித்தது,

”அய்யோஏங்கொழந்த,ஏங்கொழந்த,,,,”எனக்கத்தியவளாய்அவள்குழந்தையின் தலையை சுரிதாரின் துப்பட்டா கொண்டு போர்த்தியவளாய் அங்கும் இங்கு மாய் ஓடியவளாய் திரிந்தாள்.

இவன் ”அம்மா பதறாதீங்க,மொதல்ல அங்கிட்டும் இங்கிட்டும் ஓடாம நில்லுங் கம்மா, திரும்ப ஒருதடவை விழுந்துறாதீங்க, எனச் சொல்லிவிட்டு கொழந் தைக்கு நீங்க நெனைக்கிற மாதிரி அடிகிடி ஒண்ணும் படல,மழைக்கு ஒதுங்கி நிக்க அந்தா இருக்கு பாருங்க தெருவுக்குள்ள ஒரு கோயிலு,அங்க போயி ஒதுக்கிக்கங்க….”,எனச்சொல்லிக்கொண்டிருக்கும்போதேஅவள்ஓடிக்கொண்டி ருந்தாள் கோயில் நோக்கி/

கீழேகிடந்த வண்டியை தூக்கி நிறுத்திய கணவன் அவளது பின்னால் போய்க் கொண்டிருந்தான்.

அவன் போவதற்கு முன்பாக அவள் போய் சேர்ந்து விடுவாள் போலிருந்தது கோயிலுக்கு/மனைவியின்ஓட்டத்தில்குழந்தையைக்காக்கும்நோக்கம் இருந்தது,கணவனதுஓட்டத்தில் மனைவியை எட்டிப்பிடிக்கும் நோக்கம் இருந் தது.

கோயில் ரயில்வே லைனிலிருந்து எப்படியும் அரை பர்லாங் தூரமாவது இரு க்கும்.

இவனும் மழைக்கு ஒதுங்க அந்தக்கோயிலுக்குத்தான் போகவேண்டும்.

இதற்கு முன்பாக அந்த வங்கிக்கு இவன் போனதில்லை,வங்கிபார்க்க கலர் புல்லாகஇருந்தது,முன்புறமாய் போடப்பட்டிருந்த கண்ணாடிக்கதவை திறக் கும் போதே கைகூசியது,

இது போலாய் கண்ணாடிக்கதவு போட்ட அலுவலகங்களை பார்த்தது கூட இல் லை.யார்செய்தபுண்ணியமோ,வெள்ளையும்சொள்ளையுமாகத்திரிகிறான்  கொஞ்சம் கௌரவம் சுமந்து/

அள்ளிச்சாப்புடுகிறசோற்றுக்கும்துள்ளிஓடித்திரிகிறவெளிக்கும்பஞ்சமில்லை, நினைத்தால்இருசக்கரவாகனம்தான்,சைக்கிள்தான்.ஹோட்டல்சாப்பாடுதான்,
சிக்கன்தான் மட்டன்தான்,பிரியாணிதான்,என எல்லாம் ஆகிவிட்ட பின்னும் கூட இந்த நிலத்தில் நடமாட முழு உரிமை எடுத்துக்கொண்ட மனிதனாய் அங்கு மிங்குமாய்திரிந்துதன்தொழில்தான் குடும்பம் வாழ்க்கை என நிலை கொண்ட நாட்களின் நகர்வுகளில் இது போலான இடத்திற்கு இப்பொழுது தான் வருகி றான்,

பல பேருடன் பழகுறான்,பல பேருக்கு உதவி செய்து கொடுத்திருக்கிறான். பலபேருக்குவழிகாட்டியிருக்கிறான்,ஆனாலும் இவனுக்கு இது போல ஒரு இடம்இருக்கிறது என யாரும் இதுவரை சொன்னதாகவோ இல்லைஇவனாய் உணர்ந்ததாகவோ தெரியவில்லை,

மனைவியின் பெயரில் தான் நகையை வைக்க வேண்டும். இவனானால் தொழில்,தொழில் என அலைபவன் எந்நேரம் எங்கிருப்பான் எனச் சொல்வத ற்கில்லை.தொழில் எங்கு கைபிடித்து இழுத்துப்போகிறதோ அதன் வழி செல்பவன்.இவனை நம்பி ஒரு வேலை ஆவதென்றால் அது இப்போதைக்கு ஆகாது,

தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என நினைத்து அது சம்பந்தமாய் அந்த வங்கிக்குப்போய் விபரம் கேட்டு போட்டோ எடுத்து ஆதார் ஜெராக்ஸ் ரேஷன் கார்ட்,வோட்டர் ஐ டி என அனைத்தையும் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக பைக்குள் வைத்துக்கொண்டு அலைபவ னை நம்பி எப்படி அவசரத்திற்கு ஆகும் என ஒரு வேலையை ஒப்படைக்க சொல்லுங்கள் என சொல்லுவார்கள் அக்கம் பக்கத்தார்களும் இவன் சொந்த ங்களும் இவனைப்பற்றி நன்கு தெரிந்த நட்புகளும் தோழமைகளும்/

இப்படியாய் இருக்கிறவனை நம்பி எப்படி ஒரு வேளையை ஒப்படைப்பது சொல்லுங்கள் என எண்ணிதான் இவனின் மனைவி அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.அதுவே இப்போது வங்கி வரை அவனையும் அவளையும் கை கோர்த்து வரவழைத்திருக்கிறது.

அவளது பெயரில் வைத்து விட்டால் அவளுக்கு தோதுப்படுகிற வேளையில் போய்திருப்பிக்கொள்வாள்,கையில்காசுஇருக்கிறவேளையாய்பார்த்துகொஞ்சம் கொஞ்சமாய் பணத்தை கட்டிக் கொள்வாள்.

எப்பொழுதோ ஒரு தடவை போய் வாங்கிய நகைக் கடனுக்கு வட்டி கட்ட வேண்டும் என அவள் போய் நின்ற போது ”நீங்க இப்ப வட்டி கட்ட வந்துருக் குறதுசந்தோஷம்தான்,ஆனா வட்டின்னு மட்டும் கட்டுனீங்கன்னு வச்சிக்கங்க , அசல் அப்பிடியே நின்னுக்கிட்டே இருக்கும்,அப்பிடியே நிக்குற அசலுக்கு வட்டி போட்டுக்குட்டு இருக்கும் பேங்கு, அதுனால கையில எவ்வளவு பணம் இருக்குதோ அத மொத்தமா கட்டீட்டு போனீங்கன்னா அசல் கொஞ்சம் கொற ஞ்சிக்கிரும்,அப்பிடி கொறஞ்சி நிக்குற அசலுக்குதான் வட்டி போடும் அதுக்க டுத்த நாளையிலயிருந்து,,,அதுதான் ஒங்களுக்கு லாபம்”என அங்கு வேலை பார்க்கிற ஒருவர் விபரம் சொல்ல அதற்கடுத்தடுத்தாய் வங்கிக்குப் போன தினங்களில் அவள் வங்கியின் பணியாளர் சொன்னபடியே செய்தாள்,

”இத்தனவருசங்கள்லஇதுவரை யாரும் சொல்லாதவிபரத்தை அவரு சொல்லி யிருக்குறாரு,ஏங்கிட்ட மட்டும் இல்லை, பேங்குக்கு வந்து போற எல்லார் கிட் டயும்எளிமையா பேசவும் பழகவுமா தெரியுறாரு/ லேசா அவர் கிட்டப் போயி விவரம் கேட்டுற முடியுது, யாரோ எவரோ எவர் பெத்த புள்ளையோ பேங்குல இதுவரைக்கும் யாரும் செய்யாத உதவிய செய்யுது,அவரோட தங்கமான கொணத்துக்கு நல்லா இருக்கணும் அவரு” என இவனின் மனைவி வங்கிப் பணியாளரைப் பற்றி சொல்லும் போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

இவனுக்கு,பரவாயில்லை அரசு அலுவலகங்களில் இவன் போகிற இடங்களில் கிடைக்கிற வரவேற்பும் மரியாதையும் எப்படி இருக்கும் என்பது தெரியும். அதைஎண்ணிப்பார்க்கிறபோதுஇதெல்லாம்எவ்வளவோஉயர்வானசெயலாகத் தெரிகிறது. கொஞ்சம் சந்தோஷமாகக் கூட இருக்கிறது மனதிற்கு/

இவன்பாக்குறகொத்தனாரு வேலைக்கு எந்த நேரமானாலும் எந்த தெசையா னாலும் கூப்புட்ட கொரலுக்கு எந்த சொணக்கமும் காட்டாம ஓடுற ஆளு. ”அவனாஅவன்தங்கமானஆளு,குடுக்குறதுசின்னவேலையாபெரியவேலையான் னு பாக்காம செய்யிற ஆளு ,அப்பிடியாப்பட்டவனுக்கு தகுந்தாப் புலதான் அமைஞ்சிருக்கா பொண்டாட்டியும்,,,,” என சொல்லாதவர்கள் பாக்கியில்லை,

“பின்னஅவன்வேலைக்குப்போறதுக்குமுன்னாடிஇவ ரெடியாகிருறா, சாப்பாடு எல்லாம்ரெடி பண்ணி,குளிச்சி முடிச்சி மங்களகரமா முன்னாடி வந்து நிக்குறா கேட்டா வெளியில போற புருசன் கொஞ்சம் சந்தோஷமா போகட்டும் மனசு குளுந்து இருந்தா போற வேலை கைகூடும்.நல்லாவும் இருக்கும் “என்பாள்.

அவள் ரெடியாகி நிற்பது கண்டு இவன் குசியாகிறான்,இவன் குசியானது கண்டு பிள்ளைகளும் சந்தோஷமாகிப்போவார்கள். குவிந்து போன குஷிகள் வீடு நிறைந்துஎல்லோரையுமாய் நிறைக்க முழுவதுமாய் உயிர்பெற்றுப் போகும் வீடு,

“அப்படிக்கிடக்கிறநாட்களில்சொல்வான் இவன்,”வீட்டோரமா உதுந்து கெடந்த மரம் ஒன்னு உழுத்து மண்ணோடு மண்ணாயி மக்கி ஒன்றுமில்லாம போனது போல ஆயிருப்பேன் அவ மட்டும் ஏங்வாழ்க்கையில குறுக்கிடலைன்னா என/

அப்படியா என்றால் ”மண்ணோட மண்ணா தூர்ந்து உழுத்து உதிர்ந்து போயி கெடந்த என்னைதிரும்ப தூசிதட்டி எடுத்து மண்ணக்கீறி பதியம் போட்டு மொளைக்க வச்சதும் இல்லாம துளிர்த்து யெலையும் கெளையுமா நிக்கப் பண்ணீட்டா, அதுக்கு அவ பட்ட பாடும் சந்திச்ச அவமானமும் கொஞ்சமா நஞ்சமா .
"குடிச்சிட்டுநடுரோட்டுல,இல்லஏதாவதுகுப்பைத்தொட்டிஓரமாவிழுந்துகெடப்
பேன்.  கைகொழந்தைய வீட்ல தொட்டில்ல கதறவிட்டுட்டு ஓடிவருவா, அப்ப வும் கூட நான் வஞ்சி அவமானப்படுத்தீருக்கேன் அவள/இது போலான சமயங் கள்ல அவ மேல சாணியக்கறைச்சி ஊத்தாத கொறையா நடத்தி யிருக்கேன், ஆனாலும்அவஎன்னையகையிலவச்சிதாங்கியிருக்குறா,,,,,இதுமட்டும் இல்ல  ,,, இது போல நெறைய நெறைய சம்பவம் நடந்துருக்கு,நெறஞ்சி போன அந்த சம்பவங்க மூலமா என்னைய மெல்ல செதுக்கி தூக்கி ஊண்டுனா அந்த ஊண்டலேஎன்னைய இந்த மண்ணுல நல்லவனா பதியம் போட்டுருச்சி/ அப்பி டி என்னய பதியனிட்டவளுக்கு நா ஆயுசு பூரா கடைப்பட்டுருக்கேன், அதுக் கே ஏங் ஜென்மம் போதாதுன்னு நெனைக்கிறேன்”.என அடிக்கடி சொல்பவன் கண்ணாடிக் கதவை திறந்து பேங்கிற்குள்ளாக அடிக்கடி நுழைகிறான். மனை வியுடன்,,,/

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அனுபவ வார்த்தைகள் நண்பரே
தம +1

vimalanperali said...

அன்பும் பிரியமுமாய்....!

'பரிவை' சே.குமார் said...

மிகச் சிறப்பு...
அனுபவம் மிளிரும் கதை.

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/