4 Dec 2017

ட்ரிம்மர்,,,,,

கடைசி முடியை தேடி வெட்டிக்கொண்டிருக்கும் போதுதான் சலூன் கடைக்கா ரரிடம் கேட்கிறான், டீக்கடை இந்நேரம் திறந்திருக்குமா என,

அதற்கு அவர் கொஞ்சம் இருங்க சார் சொல்றேன் இந்தா ஒங்க தலையில மத்த முடிகளுக்கு ஊடால அங்கங்க நீட்டிக்கிட்டு இருக்கு பாருங்க, வெள்ளை முடிக,அதுகளதேடித்தேடி கட் பண்ணிக்கிட்டு இருக்கேன்,இந்நேரம் ஒங்க பேச் சுக்கு காது குடுத்தேன்னு வையிங்க,அப்புறம் முடி தப்பீரும். தப்புனது மட்டும் வெள்ளையாவே நீட்டிக்கிட்டு இருக்கும்.

அது ஆயிரம் கறுப்பு முடிகளுக்கு மத்தியில இருக்குற ஒரு வெள்ளை முடி போலவும்,ஆயிரம் வெள்ளைமுடிகளுக்குமத்தியில் இருக்குற ஒரு வெள்ளை முடி போலவும் நீட்டிக்கிட்டு வித்தியாசப்பட்டுத்தெரியும் நெறஞ்சி நிக்குற பச் சைகளுக்கு மத்தியில வாடிப்போயி பயிர் போல காட்சிப்பட்டுத்தெரியும்,அது நல்லாவா இருக்கும்,

மண்ணும் மணமும் அது குடுக்குற பலனும் எவ்வளவு தூரம் நமக்கு நல்லதாகி நிக்குதோ அவ்வளவு தூரம் அது குடுக்குற பலனும் நமக்கு கெடைக்குது ங்குறது வாஸ்தவமான சொல்லு ஆமாம்,

முந்தா நாளு பருத்தி நேத்து நெல்லு இன்னைக்கி கடலைன்னு வருசத்துல வர்ற நாட்கல சம்பங்கீடா பிரிச்சி அந்தந்த பருவத்துக்கு ஏத்தாப்புல விவசா யம் பண்ணி ஊருக்கே சோறு போட்டவுங்க பாடு இன்னைக்கி வீதியில கெட க்கு,

நெலத்த உழுது பண்படுத்தி ஒரம் போட்டு பாத்தி கட்டி விதைச்சி அதுக்கு தண்ணி பாய்ச்சி களை எடுத்து பூச்சி மருந்து அடிச்சி வேலையாட்களோட வேலையாட்களா தோட்டம் காடுகள்ல நின்னு வேகாத வெயில்லயும் மழை யிலயும்வேலைபாத்து தான் ரத்தத்த வேர்வையா சிந்தி ஒழைச்சி அறுவடை செஞ்சி எடுத்துட்டு வர்ற பொருளுக்கு நல்ல வெலை கெடைக்குறது இல்லை. அப்புறம் எங்கிட்டு இருந்து சார்,விவசாயம் பண்ணுறது ,சொல்லுங்க,

இப்ப அவ்வளவு ஏக்கர் கணக்குல வச்சி விவசாயம் பண்ணுறவுங்களும் சரி. ஒரு நாளைக்கி வெளியேறி வேலைக்குப் போனாமுன்னூறு ரூபாயில இருந்து நானூரு ரூபாய் வரைக்கும் கெடைக்கிறது உறுதியாகிப்போகுது,அந்த உறுதி நெலத்துல பாடு படுற அவுங்களுக்கு கெடைக்கும்ங்குற உத்தரவாதம் கெடைக் கட்டும்,

அவுங்க எதுக்கு விவசாயத்த கைவிடப்போறாங்க சொல்லுங்க, வேற வழியி ல்லாமயும் மனச கல்லாக்கிட்டும்தான கூலி வேலைக்கு ப்போறாங்க,இதுல மழைக்கும் அவுங்களுக்கு நடக்குற போட்டி வேற,இயற்கை சீற்றங்களோட தாண்டவம் வேற,அவுங்க எதுக்குன்னுதான் ஆளாகியும் பலி யாகியும் நிப்பா ங்க சொல்லுங்க அவுங்க பிரியப்பட்டு போறதில்ல,மேலும் அப் பிடியெல் லாம் ஆகுறப்ப பொழப்ப நடத்தனுமில்ல,இவுகளயே நம்பி பூமிக்கு வந்துட்ட ஜீவன்கள கவனிக்கணுமில்ல,தவுர அன் றாடம்நெலத்துல பாடுபட்ட ஜீவன்க ளாலசும்மாஇருக்க முடியாதுதான அப்பிடி சும்மாஇருக்கமனசு வராமயும் இரு ப்புக் கொள்ளாமயும் அவுங்க செஞ்சி வச்ச வேலைதான் மண்ன பச்சையாகி வச்சிருக்குறது.

ஆனா அப்பிடியாபட்ட வேலை செஞ்சி மண்ண பொண்ணாக்குரவுங்களுக்கு இங்க எங்க சார் மதிப்பு இருக்கு,அவுங்கள மதிக்க கத்துக்குடுக்க வேண்டியவு ங்களே மௌனமாகி நிக்கும் போது எங்கிட்டு வந்து அவுங்கள மதிக்க ஆளு வந்து தனியா வரிசை கட்டி நிக்கப்போகுது, ஏதோ ஒங்களப்போல என்னை யப் போல ரெண்டென்னு ஆளு அவுங்கள மனசார மதிக்கிறோம்,இல்லைன்னு சொல்லல,அது எப்பிடி போதும்,பெரும் பாலுமா இருக்குற மதிக்காத தன்மை சிறு பான்மையா இருக்குற மதிக்கிற தன்மைய ஏறி மிதிச்சிட்டு போயிருதில் ல, என கொஞ்சமாய் பேசுவார்,சமயங்களில் நிறைய பேசுவார்,

அவரது பேச்சு போலவே தலையில் இருந்த முடியும் ஆங்காங்கே நீட்டிக் கொண்டு தெரிந்தது,அதைத்தான் தேடி வெட்டிக்கொண்டு இருக்கிறேன் என்ற வர் பேச்சில் கொஞ்சம் ஒட்டுதலை கலந்து விட்டார்.

அப்புறம் அது மட்டும் விட்டுத் தெரியும். நீங்க சிலரப் போல தலைக்கு டை அடிக்கிற ஆளும் கெடையாது.கேட்டா அது பாட்டுக்கு இயல்பா இருக்க ட்டு முன்னு சொல்வீங்க, ஆனா இங்க கடைக்கி வர்றவுன்கள்ல பாதிப்பேரு என்ன டைஅடிச்சுக்கத்தான் வர்றாங்க,என்னன்னு கேட்டப்பமுன்னா ஆள் பாதி அழகு பாதின்னு சொல்றாங்க, சரி இருந்துட்டு போகட்டும் தலையில இருக்குற வரைக்கும் தலைக்கு அதுதான அழகு குடுக்குது,அப்பிடி அழகு குடுக்குற முடி க்கு நாம நம்மாலான அளவு செய்வோம்ன்னு சொல்றாங்க,அவுங்க சொல் றதும் ஒரு வகையில ஞாயமாத்தான் தெரியுது,

முடி தலையில இருக்குற வரைக்கும்தான் அதுக்கு மதிப்பு,கீழ விழுந்துருச் சின்னா அது மண்ணுக்கு போன ஒண்ணுதான, அது தலையில இருக்கும் போது ஏயப்பா,அத அழகு படுத்த என்னென்ன செய்யிறோம்.அதுக்கு தேய்க்க தேங்காய்எண்ணெயில இருந்து வாசனைப்பொருள் வரைக்கும் எத்தனை எத்த னை வாங்கி வீட்ல வைக்கிறோம்.தலை முடிய எப்பிடி எப்பிடிஅயெல்லாம் ஸ்டைலா வாரிக்கிறுறோம்,வழிச்சி விட்டுக்கிறோம், அழகு படுத்திக்கிறோம், எத்தனை எத்தனை விதமா கலரிங் பண்ணிக்கிறோம், முடிவெட்டிக்கிற எத்த னை எத்தனை சலூன்களா தேடித்தேடி அலையுறோம், அது காணாதுன்னு பியூட்டி பார்லருக்கும் வேற போயிக்கிறோம்.இத்தனையும் செஞ்சி முடிச்ச துக்கப்புறம் முடிவளந்துருச்சின்னு என்னைய மாதிரி சலூன் காரர்கிட்ட வந்து தான் நிக்குறீங்க,

அப்பிடி வந்து நிக்கலைன்னாலும் முடி பொதறா வளந்து நிக்கும் அநியாயத் துக்கு, பின்ன அதுல பாம்பு பல்லி அடைஞ்சிருமுன்னு ஏங்கிட்ட வந்து நிக்கும் போது நான் வேற வழியில்லாம வெட்டிவிடத்தான் வேண்டியிருக்கு முடிய,

எனக்கு அதுதான் வேலைன்னாலும் கூட நீங்க வர்ற அவசரம்,நீங்க சுமந்து வர்ற மனோ நிலை,வீட்ல ,ஆபீசுல நடக்குறத மனசுல அடக்கிட்டு வர்றது, , , ,,எல்லாத்தையும் நாங்க ஒங்கள சேர்ல ஒக்கார வச்சிட்டு எதிர் கொள்ள வே ண்டியதா இருக்கு பாத்துக்கங்க, என்பார்.ஆனா அப்பிடி பல மனோநிலையில வர்ற ஒங்களயெல்லாம் ஏத்துக்கிட்டு சிரிச்ச மொகத்தோடவோ இல்லை உம்மனா மூஞ்சியோடயோ சர்வீஸ் பண்ணுற எங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க இங்க கடையில நிக்கிற வேலை யிலயும்ஒங்களுக்குமுடி வெட்டிக்கி ட்டு இருக்கும் போதும்தான் செய்ய வேண்டியதிருக்கு,

அன்னைக்கி ஒரு நா அப்பிடித்தான் போன் வந்துருச்சி.போன் வந்த நேரம் ஒங்களப் போல ஒருத்தருக்கு முடி வெட்டிக்கிட்டு இருந்தேன்,முடி வெட்றத நிறுத்தீட்டு கொஞ்ச நேரம் போன் பேசுனேன்,அதுக்கு முடி வெட்ட வந்தவரு ரொம்பகோவிச்சிக்கிட்டாரு.இந்த மாதிரி பாதியிலயே விட்டுட்டு போன் பேசிக் கிட்டு இருந்தா என்ன அர்த்தம்,இதுதான் நா ஒங்ககிட்ட முடிவெட்டிக்க வர்ற கடைசி தடவை,இனிம வரமாட்டேன் எனச் சொன்னவராய் போய் விட்டார்,

வாஸ்தவம்தான் அவர் சொல்வதும் இவன் முடி வெட்டிக் கொண்டிருக்கும் போது கூட அது போலான அனுபவம் இவனுக்கு நேர்ந்திருக்கிறது,

போன வாரத்தின் லீவு நாளன்றின் போது ஒரு நாளில் முடி வெட்டிக் கொண் டிருக்கும் போது அவருக்கு வட்டிக்கு கடன் கொடுத்தவர் வந்து விட்டார்.முடி வெட்டிக்கொண்டிருந்த அவரது செய்கையிலேயே அது தெரிந்தது,

கடன் கொடுத்தவர் கடைக்குள் நுழையும் முன்னாய் இவன் உட்கார்ந்திருந்த சேரின் முன் இருந்த ட்ராயரைத் திறந்து ஐம்பது நூறு என நோட்டுக்களை அள்ளி மேஜையில் போட்டார்,

அப்புறமாய்அந்தகுட்டிப்புத்தகங்களைஎடுத்துப்போய்பணத்தையும்புத்தகங்களையும் சேர்த்து கொண்டு போய் கடையின் ஒரு மூலையில் வைத்தார்.கடன் கொடுத் தவர் வந்ததும் இவர் அவருக்கு ரூபாயை கொடுத்துவிட்டுப் போயிருந்த இடத் திலிருந்து தொழிலைத் தொடர்கிறார்.

வந்தவரும் பணத்தை வரவு வைத்தவாறே என்ன இது நீங்க சொன்னீங்கன் னுதான குடுத்தேன்,இப்ப ஒழுங்க ரெண்டு பேரு கிட்டயிருந்து பணம் வரல, ஆமாம் தெரிஞ்சிக்கங்க, ஒரு நாளைக்கு நாலு தடவை ஒயின் ஷாப்புக்கு நடக்கத்தெரியுது.வாங்குன காச குடுக்கத் தெரியலையா என சப்தம் போட்டார், சலூன் கடைக்காரரிடம்,

அவர் என்ன செய்வார் பாவம் ,சரிண்ணே,இனிம ஒழுங்கா கட்ட சொல்லீரு றேண்ணே என்றார், கடன்காரர் போனதும் சார் இவுங்க எனக்கு வட்டிக்கு கடன் குடுத்தவுங்க,இவுங்க கிட்ட எனக்கு மட்டும் இல்லாம நன் ஏத்துக்கிட்டு நாலைஞ்சி பேருக்கு கடன் வாங் கிக் குடுத்துருக்கேன்.என்ன செய்யிறது சார், சோத்துக்கு இல்ல,கொழம்புக்கு இல்லைன்னு வந்து நிக்குறாங்க, வாங்கிக் குடுக்கத்தான் வேண்டியதிருக்கு,

சரின்னு நான் ஏத்துக்கிட்டு வாங்கிக்குடுத்தது இப்ப அவுங்க நேரத்துக்கு குடுக் காததுனால என்னைய புடிச்சிக்கிட்டு வையிறாங்க,தினசரி வசூலு,என்ன செய் ய சொல்லுங்க,அவுங்களுக்கும் என்னைய மாதிரி ஆள்க வேண்டியதிருக்கு, எங்களுக்கும் அவுங்களப் போல ஆள்க வேண்டியதிருக்கு,அவுங்க ரெண்டு சொல்ல வேண்டியதுதா,நாங்க ரெண்டு கேட்டுக்க வேண்டியதுதா,ஓடுது வண்டி. என கடைக்கு போகிற ஒவ்வொரு தடவையுமாய் சொல்லுவார்.

இவன் அதற்கு பதில் சொல்கிறவனாய் மெல்லிய சிரிப்பு காட்டி சமாளிப்பான். அதற்கு அர்த்தத்தை அவர் புரிந்து கொள்வார்,

இந்நேரம் டீக்கடை தெறந்திருக்குமான்னு தெரியல சார்,மணி பண்ணெண்டு ஆச்சு,இன்னைக்கி ஞாயித்துக்கெழமை வேற,,கடை தெறந்துருந்தா ஒங்களு க்கு யோகம்தான் சார் போய்ப்பாருங்க என வழியனுப்பி வைத்தார்.

இவ்வளவுதான் மெலிந்து இருப்பு காட்ட முடியுமோ அவரது உடல் என்கிற அளவிற்காய் மெலிந்து போய் காணப்பட்ட அவரின் தலை முடி முழுவதும் வெளித்து இடையிடையே போனால் போகிறது என்பது போல் கறுப்பு முடிக ளை காட்சிப்படுத்திக்கொண்டுவாறாய் அலை பாய்ந்து கொண்டு இருந்தது, தலை நிறைய இல்லாவிட்டாலும் கொஞ்சமாய் ஒட்ட வெட்டப்பட்டு காணப் பட்டமுடிகள் தலை மேல் ஒன்று போல படர்ந்து துணி டிசைன் துணி போர்த் தியது போல் காணப்பட்டது,

ஒரு பக்கம் பார்க்கையில் தலை மேல் வரைந்து வைத்த நவீன ஓவியம் போலவுமாய் இருந்தது. ஒருபக்கம் அதை பார்க்கும் போது அழகாவும் கொஞ் சம் பொறாமையாகவும் இருக்கிறது,

எப்பொழுது பார்த்தாலும் இப்படி ஒன்று போல் தலை முடியை வைத்திருக்க எப்படிமுடிகிறது இவரால் என ஆச்சரியமும் வரத்தான் செய் கிறது கூடவே,,,/ இவனுக்கானால் தலையில் கொஞ்சம் முடி கூடிப்போனால் அசிங்கமாக இருக்கிறது பார்க்க,கொஞ்சம் குறைவாக இருந்தால் எப்படியோ இருக்கிறது பார்க்க,இரண்டு நாட்களாய் விட்டு விட்டு தூறிக்கொண் டிருந்ததாலும் மேகம் மூடிக்கொண்டிருந்ததாலும் முடி வெட்டிக்கொள்ள முடியவில்லை,

தவிர்த்து போன் பண்ணி கேட்டு விட்டுத்தான் வந்தான்.கடையின் நம்பரை அவரது கடை சுவற்றில் எழுதி வைத்திருக்கிறார்,

தேவைப்படுகிற சமயங்களில் கடைக்கு வந்து கடை மூடியிருக்கிறது எனத் திரும்பிப் போகாமல் போன் பண்ணி கேட்டு விட்டு கடைக்குப் போகலாம் என்கிற முடிவில் எழுதி வைத்திருக்கிறார்,

போன தடவை கடைக்கு சென்றிருந்த போது நான் கைந்துதடவைகள்கடைக்கு வந்து திரும்பிப்போனதைச்சொல்லி கொஞ்சமாய் குறைபட்டுக்கொண்ட போது தனதுசெல்நம்பரைகடை சுவற்றில்எழுதி வைத்திருப்பதை காட்டினார்,

இத்தனை நாட்களாய் கடைக்கு வருகிறவன் எப்படி இந்த விஷயத்தை கவனி க்காமல் இருந்தான் என்பது ஆச்சரியமாகவே,,,,,,/

பொதுவாகவே இவன் அலுவலகம் விட்டு வருகிற மாலை நேரங்களில் முடி வெட்டிக்கொள்வதுண்டு.அதனால் போன் நம்பர் எல்லாம் குறித்தும் வைத்துக் கொள்வதில்லை,அதுஅவசியமாயும்இருந்திருக்கவில்லை. இவனுக்கு,

ஆனால் இன்று அப்படியில்லை,நேற்று அலுவலகம் விட்டுவரும்பொழுது கடை பூட்டியிருந்தது.

அதுதான் இன்று போன் பண்ணிகேட்டுவிட்டுப் போனான்,இவன்போகும் போது ஒருவருக்கு முடி வெட்டிக்கொண்டிருந்தார்,

என்ன சார் போன் பண்ணியிருந்தேனே, கெடைச்சதா என்றவாறு கடைக்குள்ள வாங்க சார் என்றார்,கடைக்காரர்.

இவன் சென்ற சிறிது நேரத்திலெல்லாம் இவனுக்கு முன் முடி வெட்டிக் கொண்டிருந்தவர் எழுந்து விடவும் இவன் உள்ளே சென்று சேரில் அமரவும் சரியாக  இருந்தது.

1 comment:

vimalanperali said...

அன்பும் நன்றியும்!