ஓடுகிற சைக்கிளுக்கும் மிதித்த கால்களுக்கும் நெசவிடுகிற
இயக்கம் மனம் மாச்சரியமற்றாய்,,,/
________________________
மன மாச்சரியங்கள் ஆரம்பிக்கிற புள்ளிகளிலும் தொடர்கிற விழுமியங்களிலுமாய்
துவக்கம் கொள்கிற வாழ்க்கை,,,/
------------------------------
துவக்கம் கொள்கிறதன் முதல் புள்ளிகள் நீட்சிகொண்டு வேர்விட்டும்
கிளை பரப்பியுமாய்,,,/
--------------------
பரப்பிய கிளைகளும் ஆழமிட்ட வேர்களும் தன் முனைப்பில் கவனம்
கொண்டே,,,
---------------------------
கொண்ட கவனத்தின் சிதறாத முனைகள் மழுங்கிக் காணாமலும் திசை
திரும்பிப் போகாமலுமாய்.,,,/
-------------------------
திரும்பாத திசையின் உள் வகிடுகள் வகித்துக்கொண்ட கோலம்
காலம் அழியாயமலும் அழிக்கப் படாமலு மாய்,,,/
--------------------------
அழிக்கப்படாதவைகளின் சுவடுகள் சுமந்து நின்ற வடுக்கள் நம்
பின் தொடரும் நிழலாய்,,,/
----------------------
தொடரும் நிழல்கள் சுமந்து செல்கிற உரு நீண்டும் சுருங்கியுமாய்
காட்சி கொண்டு,,,/
------------------------
காட்சி கொண்ட உருக்களின் சூழ்கொள்ளல்கள் மனம் தாங்கியும்
அது அல்லாத்தாயும்/
----------------------
அல்லாததும்,அல்லதுமாய் இருக்கிறவைகள் சாஸ்வதப்பட்டா,நிரந்தரம்
சுமந்தா ,,,?
-----------------
சுமந்த நிரந்தரங்களின் கனமும் அது அல்லாதனின் லேசும் உள்ளும்
புறமுமாய்,,,/
------------------
உள்ளும் புறமுமாய் உருக் கொண்ட லேசும் கனமும் நீட்சிகளில்
காட்சி கொண்டும் அது அல்லாததுமாய்,,,/
------------------
இருப்பதும் இல்லாததுமாய் தொட்டுத்தொடர்கிறதான நினைவுகள்
சூழ்க்கொண்ட உறைவிடமாய் வாழ்க்கை.../
--------------
கரிப்பும் இனிப்பும் யார் கொண்டு வந்ததென தெரியவில்லையாயினும்
கூட ஏற்றுக்கொண்டு ஓட்டமிடும் தேட்டம்,,,/
----------------------
ஓடுகிற ஓட்டங்கள் உன்னையும் என்னையும் நம்மையும் நம் மனம்
கொண்டவர்களையும் அரவணைக்கிற கிளைகளாகவும் வேர்களாகவும்...,,,/
------------------
பூமி கொண்ட வேர்களும் வானம் பார்த்த கிளைகளுமாய் தாங்கி
உருபட்ட மரம் கொடை கொண்டதை அள்ளி உருபடுகிறதாய்,,,,/
--------------------
கொடைகொண்டதை கடந்தும் அதனில் சுகித்தும் செல்கிறவைகள்கடக்கிற
தூரம் சற்றே நீண்டதாயும் கொஞ்சம் புள்ளிகாட்டியுமாய்,,/
--------------------
காட்டிய புள்ளிகள் இயங்கியவையையும் இயக்கியவனையும் அடையாளமிட்டும்
சுற்றம் காட்டியும்,,/
2 comments:
உறைவிடமாய் வாழ்க்கை உட்பட அனைத்தும் அருமை...
நன்றியும் அன்புமாய்,,,/
Post a Comment