2 Oct 2010

ரயிலுவண்டி



           சுற்றுலா  செல்வதென்பது  எல்லோருக்கும்  பிடித்தமானதாகவே. /
அதுவும்  மிகவும் பிடித்த இடங்களுக்கு பிடித்த மனிதர்களுடன் செல்வதென்பது மன
இசைவுடன் நடைபெறும் குதூகல விசயமாகவே.

        பெற்றோர்களுடனும் சுற்றத்தார்களுடனும் சூழ கோவில், குளம் என போய் வந்த
காலங்கள் போய் அவரவர்களின் பணிநிமித்தமாயும் பிழைப்பு கருதியும் வெளியூர்களில்
தனித் தனி குடும்பங்களாய் தங்கிவிட நேர்ந்த பிறகு எங்கும் எதற்கும் தனியாகவே

சென்றுவரும் நிலையும் அவசியமும் உருவாகிப்போகிறது.         அந்த உருவாக்கம் தமிழ்நாட்டில் இருக்கிற ஆயிரக்கணக்கான கூலி வேலைக்
காரர்களின் அன்றாடப்  பாடுகளில் இல்லாமல் இல்லை. அவர்களுக்கெல்லாம்

 " ப்ளாக்இயர்கிடையாது. "லீவ் சரண்டர், ட்ரிப் ஷீட், பெட்ரோல்பில் , ரூட் மேப்"
இத்தியாதி, இத்தியாதி
என்கிற எந்த வரையரையும் நியதியும் கிடையாது.
       அதையெல்லாம் தாண்டியவர்களாகவும், அதற்கு அப்பாற்ப்ட்டவர்களாகவுமே
இருந்துள்ளார்கள் எப்பொழுதும். அதையும் மீறி அவர்கள் மேற்ச் சொன்னவற்றிக்கெல்லாம்
பிரியப் பட்டாலோ ஆசைப் பட்டாலோ நஷ்டமே ஏற்படும். அதனால் அந்த
பிளானிங்க்கிற்குள்ளாகவெல்லாம் வரமாட்டார்கள் அவர்கள். ஆனால் அவர்களது
பிளானிங்குகளின் முன் எப்போதுமே தோற்றுப் போகிறவகளாகநாம்.

        ஒரு வீட்டில் கணவன், மனைவி, பிள்ளைகள் இரண்டு பேர் அல்லது ஒருவர் என
வைத்துக் கொண்டாலும் அவர்கள் மூவருமாக அல்லது நால்வருமாக வேலைக்குச்
சென்று சம்பாதித்து வருவதில் ஒரு பகுதியை சேமிப்ப்புக்கென ஒதுக்கி விடுகிறார்கள்.
         தீப்பெட்டி ஆபீஸ், பயர் பீஸ் , கட்டிட வேலை என பலதரப்பட்ட வேலைக்கு
சென்று வாரச் சம்பளம் வாங்கும் அவர்கள் சேமிப்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, சென்செக்ஸ் புள்ளிகளை அறிவிக்கும் தனியார் நிறுவனங்களிலோ இல்லை.
         பெரிய கம்பு கொண்டு ஓடிவந்து மூச்சடக்கி "ஹைஜம்ப்" தாவி வங்கிக்குள்
நுழைந்து , அங்கிருக்கிற தடைகளையும் பார்மாலிட்டிகளையும் உடுருவிச் சென்று
கணக்கு ஆரமிப்பதற்குள்அலுத்துப் போகிறார்கள்பாவம். அதுவும் பேங்க் ஸ்டாப் என்றாலே
கெத்தாக இருக்க வேண்டும் என்கிற மனோநிலையுடன் வேலை பார்ப்பவர்கள் முன் போய்
நிற்பதற்கு அய்யரவுப் பட்டுக் கொண்டே ஒதுங்கி விடுகிறார்கள். பின் எப்படி அவர்களது
சேமிப்பும், சுற்றுலாவும்?

        கணவன், மனைவி, பிள்ளைகள் எனத் தனியே வேலை கிடைத்து சம்பாதிக்கும் சராசரியான சம்பளமான 3500ரூபாயில் (25நாட்கள் வீதம் ரூ.100)வாரம்
ஒருமுறை குடும்பச்  செலவிற்கென  ஒருசீட்டும், பலகாரச்சீட்டு, ஜவுளிச்சீட்டு, பாத்திரச்சீட்டு என்கிற வரிசையில் சுற்றுலாச்சீட்டும் கட்த் தவறுவதில்லை. அதுவும்
தனித்தனி நபர்களின்பெயரில்.
     அம்மாதிரியான தனித்தனி சீட்டுகளில் இடம் பெறுகிற ஜவுளியும், பலகாரமும்
அவர்களது பண்டிகை நாட்களை ஈடு செய்து விடுகிறது.
      மற்றவைகள் அவர்களது குடும்பத்தேவைகளையும் இப்படியான சுற்றுலா ஆசையையும்
போக்கவல்ல நிவாரணியாக அமைந்து போகிறது என்பதில்
எந்த ஐயமும் இல்லைதான்.   
       என்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர் கூடச் சொல்வார் அவர்களைக் கண்டவுடன் . "இது லேபர் ஏரியா,".......... ன்கிற முகச் சுளிப்புடன். லேபர் எனச் சொல்லும் போதே
வருகிற முகசுளிப்பு அவருடைய " உயர்ந்த மனோநிலையை"...,,,?/ காட்டும்.
      லேபர் என்றவுடன் தெரிகிற சக மனித உருவமும், நேயமும் மறைந்து முகச் சுளிப்பு
மட்டுமே ஏற்படுகிறதாயின் அவருடைய உயரிய எண்ணங்கள் லேபரைப் பற்றி என்னவாக
இருக்கும் ? அந்த உயரிய எண்ணமே முடை நாற்றமெடுத்துப் போய் அவர்களின்பெண்டு, பிள்ளைகள், குடும்பம் பற்றியதான தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவைப்பதில்
கொண்டு போய் விட்டு விடுகிறது.

        அப்படியெல்லாம் ஏளனமாக நினைப்பவர்களையும், முகம்  சுளிப்பவர்களையும் செ.......................தான்.   எனவும் தோன்றுகிற அதே நேரத்தில் அந்த லேபர் ஏரியாவிலும், அதை ஒட்டிய நிலையில் இருக்கும் மிகப் பெரிய மக்கள் திரளினது கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு என சகலத்தையும் யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதைப்
பற்றி சரியான நிலைபாடு எடுக்கும் போது "லேபர் ஏரியா " முன்னேறிய ஏரியாவாக இருக்கும்
என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
        அங்கிருந்த இளைய தலைமுறையினரும் முன்னேறி வருவார்கள்என்பது திண்ணம். இப்போதைக்கு தடைபட்டு நிற்கிற அவர்களின் முன்னேற்றத்தைப்  பற்றி சிந்திக்கவும்
முடிவெடுக்கவுமான நிலையில் உள்ளவர்கள் அவர்களின் வோட்டுக்களைப் பற்றிமட்டுமே
யோசிக்கிற அவலநிலையில் .

        எந்தவிதமானமிடில்க் கிளாஸ்த் தனத்துடனும் மிகை கொண்டுவாழாமல்
வாயைக்கட்டி,வயிற்றைக் கட்டி,அரை வயிறு, கால் வயிறாயும், நல்லதாக உடுத்தியும்
உடுத்தாமலும் தன் வாழ்க்கை, தன் சம்பளம் தன் சேமிப்பு என வாழ்கிற அவர்களுக்கு
சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்தமான விஷயமாகவும், மிகப் பெரிய
ரிலாக்ஸாகவும்  இருக்கிறது.
       அப்படியான ரிலாக்ஸ் "லேபர்" என்றதும் முகம் சுளிப்பவரிடம்உள்ளதா?இல்லையா ?என்பதே இந்த நேரத்து கேள்வியாகவும், தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமாகவும்
உள்ளது.












No comments: