24 May 2011

விதைப்பு உழவு,,,,,,,


                              

       முன்இரவுவரும்நேரம்மறைந்தசூரியன்ஒவ்வொன்றாய் காட்சிப்
படுத்துக்கிறான் சைக்கிளில்விரைந்துகொண்டிருந்தவனின்முன்னே.
       காட்சிகள்வீதிகளாக,கடைகளாக,அலுவகங்களாக கோயில்களாக,
டீக்கடைகளாக,ஹோட்டல்களாக நகர்ந்து, நகர்ந்து கொண்டு வந்து சேர்த்த
இடம் டுடோரியல் கல்லூரியாய் இருந்தது.இடதுபுறம் நூலகம், வலதுபுறம்
அலுவலகம் உறவினர்கள்,தோழர்கள்,நண்பர்கள் என நெசவோடியிருந்த கட்டிடத்தில் கே.பியும், நானும்,பின்மணியனுமாய் பேசிக்கொண்டிருந்தோம்.
      தச்சரும்,கொல்லரும்,கொத்தனாரும்,சித்தாளுமாய்வியர்வையைவழியவிட்ட
ஆயிரத்து சொச்சசதுர அடிகட்டிடத்தில் ரொம்பவே நாள் கழித்த எங்களது பேச்சின் பதிவில் வேறொன்றும் பிரமாதமாய் இடம் பெற்று விடவில்லை என்ற
போதும் கூட வாழ்வின் அடிப்படை பற்றியும் அங்கலாய்ப்பு பற்றியும் பேச தவறவில்லை.
      வீடு,வாசல்,அலுவலகம்பிள்ளைகள்,சேலைதுணிமணிகள்,பட்ஜெட்,
தொழிற்சங்கம்,சகஊழியர்கள் அக்கம்பக்கம்,கல்லூரி கல்லூரி படிப்பு,விலைவாசி
வீட்டுவாடகை,1ரூபாய் அரிசி என இதரஇதரவாய் இருந்ததில் ஆச்சரியம் இல்லை.
     இறந்து போன நண்பனின் நினைவாக பெயர் வைத்திருந்த மகனை அழைத்து வந்திருந்த கே.பி இரவு தான் வர நேரமாகும் என சொல்லி அனுப்பி வைத்தான்.
     கருப்புபேண்ட்,வெள்ளைச்சட்டை அணிந்திருந்த அவன் ஐந்தடிக்குள்ளான உயரத்திற்கு உட்பட்டவனாய் காட்சியளித்தான்.
    கருப்பு,வெள்ளை திரும்பவுமாய் ஒரு ரவுண்ட் வருகிறது.கோடுபோட்ட சட்டைகளும்,எம்ப்ராய்டரி,பூவேலைப்பாடுசேலைகளும்,சட்டைகளுமாய் திரும்பவும் வலம் வருவதைபார்க்க முடிகிறது.இந்த பண்டிகைக்கு இதுதான் முன்னனியில் நின்றது..இடையில் காணாமல் போயிருந்த சதுர டைப் கண்கண்ணாடிப்ரேமும்திரும்பவும்வருகிறது.பாபிக்காலர்சட்டையும்,­_
பெல்பாட்டம் ஃபேண்டும் அகல பெல்ட்டும்,கர்லிங் கட்டிங்குமாய் அலைந்த காலங்களிலும்,அடுத்தடுத்துமாய் வந்த நாட்களும் இருந்த ஆடை வடிவமைப்பின் வேகமும்,உடைநாகரீகத்தில் ஏற்பட்ட மாற்றமும் காணாமல் போய்விட்டதே இந்த கம்யூட்டர் காலத்தில்.
     ப்ள்ஸ் ஒன் படிக்கிறனாம் அவன்.பத்தாவது வரை படித்த பள்ளி சரியில்லை எனஅங்கிருந்து பெயர்த்தெடுத்து வேறொருபள்ளியில் சேர்த்திருந்தார்கள்.எங்கு படித்தால்என்ன?படிக்கும்இடமும்,சூழ்நிலையும்கல்வியும்தானே_
முக்கியமாகிறது.அந்த மனோ நிலை வந்து விட்டதா இந்த பள்ளியில்சேர்த்ததும்
என கேட்டதற்கு கொஞ்சம் வெடிப்பாகவே பேசிய “ப்ளஸ் ஒன்”முன்னிலிருந்து இப்பொழுது கொஞ்சம் மாறியிருப்பதாய் சொன்னான்.ஒரு மனிதனை
தீர்மானிப்பது வாழ்நிலை சூழல்தானே?அதில் சின்னவன் என்ன,பெரியவர் என்ன?
    “நீங்கள் கர்நாடகக்காரரா?என கர்நாடகாவில் வசிக்கும் ஒருவரை பார்த்து கேட்கப் போக அவர் வைத வசவும், கோபித்துக் கொண்ட கோபமும்,
பட்டுக் கொண்ட வருத்தமும் ஜென்மத்துக்கும் தீராது  போலிருக்கிறது.
அதையெல்லாம் எப்படி மறக்க,என்ன செய்து சாதானம் சொல்ல? நாலாம் பேருக்குத் தெரியாமல் என்னை நானே செருப்பால் நாலு போட்டுக்கொண்டு விட்டுவிட்டேன் பேசாமல்.
    “தீதும் நன்றும் பிறர் தர வாரா”அவரை பார்த்ததும் தவறு, கேட்டதும் தவறு.பேசியஅன்றுஇரவுசற்று கூட இமை மூடவில்லை.அவர்மாதிரியானவர்கள் நீந்தி வந்த தூரமும் கடந்து வந்த பாதையும்,அவர்களின் வாழ்பனுபவமும் மிகவும் கடினமானதன்றோ?அப்படியிருக்கையில் அவரது இந்த கோபம் சரிதானா என்பதுவும் புரியவில்லை.
     எதையாவது ஒன்றை கேட்டால் எதையாவது ஒன்றை பேசும்  “அதி மேதாவிகள்” லிஸ்டில் உள்ளவர் போலும்.இதுதான் இப்படியென்றால் தன் உயரம் காட்டவும், தன்னை முன்னிலை படுத்தவுமாய் வேண்டி ஒன்றாய் கூடி,பேசி,உறவாடித்திரிந்த நண்பனை பலர் பார்க்க மன நோயாளி என கத்தி கூக்குரலிட்டு பெருமைபட்டுக்கொள்கிற கேடுகெட்ட தனமும் ந்ம்மில் இல்லாமல் இல்லை என்கிற பேச்சின் ஊடாக நண்பர் தினேஷீம் கலந்து கொள்கிறார்.
     மனைவிக்கு மாறுதலானதால் அவர்கள் சென்று விட்ட பெரு நகரத்தைபற்றி சொன்னார். வீடு வாடைக்கு கிடைப்பதும்,வீடு கிடைக்கும் தெருவில் பார்க்கும்,கேட்கும்,ஊடுருவும் ஜாதி வித்தியாசமும் இன்னும் கூட அமலில் இருக்கிறது என்றார்.பார்க்கும்,பேசும் ,எதிர்படும் மனிதரிகள் யாவரும் அவ்விதமே உள்ள கொடுமை ஒருபக்கம் என்றால் வீட்டின் வாடைகையும் அதற்கான அட்வான்ஸீம் யப்பாப்பா,,,,,,சாதாரண ஜனங்கள் அந்த ஊரில் நடத்துவது கஷ்ட ஜீவனமே/
      வீடு,வீடு கடந்த தெரு,தெரு கடந்த ஊர்,ஊரினது  படர்ந்து பரந்தவிலாசம்,
யாவிலும் வேலைநிமித்தமாய் பிழைப்பின் அவசியம் கருதி குடியேறுபவர்களது அவலம்வார்த்தைகளில்அடங்கமறுக்கிறசோகம்என்றும் சொன்னார்.அந்த_
சோகம்எழுந்துபற்றிபடர்ந்துஊரைபோர்த்திய விதமாய்.
   திருநெல்வேலி பக்கமிருந்து டாக்சி ஓட்டி பிழைப்பு நடத்த வந்த டிரைவர்களின் பிழைப்பு இதைவிட மோசம் என்றார்.இரவு நேரங்களில் அவர்கள் டாக்சியிலேயே தூங்குவதும்,காலை நேரங்களில் கட்டணக்கழிப்பறைகளில் தங்களதுகாலைகடன்களைமுடித்துகுளித்துவிட்டுதங்களதுஅன்றாடபிழைப்பை
ஆரம்பிக்கும் அவலமும் தொடர்கதையாகவே இருக்கிறது என்கிறார். 5000 ஐ
தாண்டாத அவர்களது மாத வருமானம் எவ்வளவுதான் தாங்கும் என்கிறார் மேலும்.
     




      






          இப்படியெல்லாமுமாகவும்,இன்னும்பலவற்றையும் பற்றி பேசிக்கொண்டிருந்த நண்பர் தினேஷ் “கரண்ட் போகிற நேரமிது,அதற்குள்ளாக நான் வீடு போக வேண்டும்” என எழுந்து விட்டார்.அவர் எழுந்த சிறிது நேரத்தில் கரண்ட் போய்விடுகிறது.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எங்களின் பேச்சு தொடர்கிறது. 

5 comments:

குணசேகரன்... said...

nice post. pls change the color of backdrop..

http://zenguna.blogspot.com

vidivelli said...

நல்லாயிருக்குங்க........................நம்ம பக்கமும் வாங்க..............

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் சார்.நலம்தானே?வாழ்த்துக்ககுளு உரியவனாக நல்ல பதிவுகளாய் தொடர்ந்து எழுதுவேன் உங்களது வாழ்த்துக்களும்,ஊக்கமும் தொடரும்போது.

vimalanperali said...

வணக்கம் குணசேகரன் சார்.பேக் ட்ராப்பை சேஞ்ச் பண்ண முயற்சிக்கிறேன்.

vimalanperali said...

கண்டிப்பாக உங்களது பக்கம் வருகிறேன் விடிவெள்ளி சார்.வாழ்த்துக்களுக்கு நன்றி.