2 Aug 2011

கல் தடுக்கி,,,,,,,,,



தவறில்லாமல்
வேலைபார்த்து வேண்டும்
நினைப்பில்தான்
தினசரி
அலுவலகம் கிளம்புகிறேன்.
எனது சொந்த ஊரிலிருந்து
ஆறாவது மாவட்டத்திற்கு
மாற்றலாகிவந்த  நாளிலிருந்து
இன்றுவரை
பிள்ளைகளின்படிப்பு,
மனைவியின்உடல்நிலை,
சகோதரங்களின் நினைவு,
தாய்,தந்தையின் அந்திமம்,
என்னின் தனிமை,,,,,,,
எல்லாம் ஒன்று சேர
கொஞ்சம் கவனம்
திசை திரும்பிவிடுகிறதுதான்.
என்னையறியாமல் தவறும்
நேர்ந்து விடுகிறதுதான்.
என்ன செய்ய,,,,
அறியாமல் தவறு செய்வதும்
மனித செய்கைகளில் ஒன்றுதானே,,,,,/

8 comments:

சென்னை பித்தன் said...

இதெல்லாம் சகஜம் ஐயா!

vimalanperali said...

வாஸ்தவம்தான்.சகஜம்தான்.சகஜத்தையும் சொல்லும்மனது வாய்க்கப்பெறுவதுதானே?

Rathnavel Natarajan said...

சிரமம் தான். மனசையும் உடம்பையும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

Nice.,
Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேசார்.நலம்தானே?சின்னதுதான் கவிதை எழுதத்தோணியது.உங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

vimalanperali said...

வணக்கம் வேடந்தாங்கல் கருன் சார்.நலம்தானே?மொபைலில் என்ன?எதிலாயினும் கருத்து சொல்ல வந்த உங்களுக்கு நன்றி.

கவியோவியத்தமிழன் said...

வணக்கம் விமலன்.

உங்கள் கவிதைகள் மிகவும் சிறப்பாக உள்ளது. தோசையம்மா தோசையும் அருமை. காசு போட்டு வாங்கியதை கீழ கொட்ட வேண்டாம் நான் இருக்கேன்ல...

கவியோவியதமிழன். பேசும் அய்யா...

vimalanperali said...

வணக்கம் கவியோவியதமிழன் சார்.நலம்தானே?உங்களுடன் பேசாமல் யாருடன் பேச,,,,?நன்றி உங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும்/