17 Aug 2011

கருப்புதினம்,,,,,,,,






யாரிடமும் எதுவும் சொல்வதற்கு
தயாராக இல்லை.
சொன்னால் வெட்டிப்பேச்சு,
வீண் புலம்பல் என்கிறார்கள்.
எந்நேரமும்
உடல் பற்றிய பேச்சுதானா,
வேறு இல்லையா?
என்பதாயும்/
சுவர் இருந்தால்தானேசித்திரம்
என்கிற பேச்சிற்கு
சுவர் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்பது
பெரும் தவறு என்றும்,
மாபெரும் மன பீதியில் இருப்பதாயும்,
சுய கழிவிரக்கப் பேச்சு
என்பதாயும் பதில் சொல் வருகிறது.
தொலை தூர ஊருக்கு
வேலை நிமித்தமாய் செல்லும் போது
உடல் தொந்தரவு காரணமாக
பெயர் தெரியாத ஏதோ
ஒரு ஊரில் இறங்கி
திரும்பவுமாய் வீட்டுக்கே வந்து
ஆட்டோ,டாக்டர்,மருந்து,
மாத்திரை,பரிசோதனை
என்கிற துயர் உலகிற்குள்
பயணிக்கிற அவலத்தை
அவர்கள் அறிய வாய்ப்பில்லைதான்.
என்ன செய்ய,,,,
யாரிடமும் எதுவும்
சொல்லத் தோன்றாதவனாய்
சம்மணம் கூட்டி அமர்ந்திருக்கிறேன்,
சுற்றுப்புறத்தை ஏறிட்டவனாய்,,,,,,/

No comments: