அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது
அதிகாலை எழுந்து விட்ட மனைவி.
#####
காத்திருக்கும் காதலன்.
அவனை கடக்கும் பட்டாம் பூச்சி
#####
உடல் நனைத்த வேர்வை.
வண்டி நிறைந்த பூமூட்டைகள்.
#####
ரத்தம் உறிஞ்சிகிற மூட்டை பூச்சி.
தொழிற்சாலையில் தொழிலாளி.
#####
பாட்டி காது குடைகிறாள்
இறகுதிர்கும் கோழி.
#####
வரிசைதப்பி மேயும் பன்றிகள்.
பசியுடன் பேப்பர் பொறுக்கும் சிறுவன்.
#####
வெள்ளிக்கிழமைபிச்சைக்காரர்கள்.
சாலையோரத்தில் டீக்கடை.
#####
ஆதரவற்ற தாய்
.பிச்சைக்காரர்கள் வரிசையில்.
கோவிலுக்குள் காவல் தெய்வம்.
#####
கூடி விளையாடும் குழந்தை
வாசலில் எட்டுப்புள்ளிக்கோலம்,
#####
மரத்தடியில் இலைகள்.
வேர்கள் விசாரிக்கின்றன.
#####
சிரித்து விளையாடும் சிறுவர்கள்
பக்கத்தில் கட்டப்பட்டிருக்கிற ஆட்டுக்குட்டிகள்.
#####
சாலையோரத்தில் செருப்புக்கடை.
சுட்டெரிக்கும் வெயில்.
வெற்றுக்கால்களுடன் பாதசாரி.
#####
புரியவில்லை பாஷை.
புடிபடுகிறாது மொழி.
வேற்று மாநிலத்தவர்களுடன்
பேசிக்கொண்டிருக்கிறேன்.
#####
சிதறிக்கிடந்த பேப்பர்கள்.
முளைத்துதெரிந்த கவிதைகள்.
#####
2 comments:
அடடே... ஆச்சர்யக்குறி...
ஆச்சரியங்களை ஏற்படுத்துவதும் எழுத்தின் பணிதானே.
Post a Comment