அகலப்படுத்தப்படும்
சாலையின் ஓரங்களில்
வெட்டப்படும் மரங்களின்
ஓலமும்,முனகலும் கால நேரமில்லாமல்
தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
வெட்டுப்படும் மரங்களும்,
வெட்டுபவனின் கை அரிவாளும்,
குழி பறிக்கும்
கனத்த பொக்லைன் இயந்திரமும்,
மரம் அறுக்கும் மின்சார ரம்பமும்
சொல்கிற கதைகள் நிறைந்து
தெரிந்த போதும் கூட
அந்த சாலையை கடக்கும் போது
மனதில் மெல்லிய சங்கடம் நெளியாமல் இல்லை/
2 comments:
அருமை.
வணக்கம் சென்னை பித்தன் சார்,நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/
Post a Comment