18 Mar 2012

முள்ளுச்செடி,,,,,,,,,,


                 
  வியர்வைத் துளிகள் உடலில் மின்ன உழைப்பவரைப் பார்க்கிற போது மிகவும் பிடித்துப்போகிறது.
 உடலெங்கும் வரிவரியாய் இறங்கும் வியர்வையின் கோடுகளிலிருந்து எழுகிற வாசத்திற்கும்,வலிமைக்கும் இணை வேறெதுவும் இல்லை என சொல்லத்தோனுகிறது அப்படியான காட்சிகளை கண்ணுற நேர்கையில்/
  அன்றுகாலைபாலவனத்தம்toமெட்டுக்குண்டு சாலையில் பயணித்துக்கொண்டிருந்த காலை நேரத்தில் ஓங்கி வளர்ந்தமுட்சசெடிகளுக்குள் நின்று உருவங்கள் இரண்டு முள் வெட்டி அப்புறப்படுத்திக்கொண்டிருந்தது.
   சடுதியில் இவைகளை கடந்து வந்து விட்ட நான் கண்ட காட்சிகளை ரீவைண்ட் செய்துபார்க்கையில் அதில் கோட்டையின் முகமும்,வீரநாகுவின் சிரிப்பும்/
   ஆகா கனத்த முட்டாள்தனம் செய்து விட்டோமே,இருவரையும் பார்த்து ஒரு வார்த்தை அல்லதுஒருசின்னசிரிப்பாவது சிரித்து விட்டு வந்திருக்கலாமே?
   இனி திரும்பிப்போய் பார்த்தும்,பேசியும் விட்டு வருவதற்கு எனது  அலுவலக நேரம் என்னை அனுமதிக்காது.காலம் பொன்போன்றது என்கிற பேச்சுகளுக்காகவெல்லாம் இல்லாவிட்டாலும் கூட பிறகுபார்த்துக்கொள்ளலாம்எனகிளம்பிவிடுகிறேன்.
   இருவரும் சாலைப்பணியாளர்கள்,அன்பின் மனிதர்கள்,வாழ்க்கையின் உக்கிரத்தை தன்னில் தாங்கி வீதிகளிலின்  அடர்ந்த  புழுதியிலிருந்து  துளைதெழுந்து  வெளிவந்து
தன்னைஇருத்திகொண்ட உருக்கு உள்ளங்கள்.
   ஒற்றை விரலின் கனத்தால் தட்டி விடப்பட்ட அவர்கள் தாங்கள் சார்ந்திருந்த சங்கத்தின்துணையால்வீறுகொண்டெழுந்தும்,கைதூக்கிநிறுத்தப்பட்டுமாய் தூசி
தட்டிக்கொண்டுநிற்கிறவர்கள் வெகு திடமாக.
    முன்னவர்தோழர்,பின்னவர்அண்ணன்.என்ன வீரநாகுண்ணே நல்லாயிருக்கீங்களா? என அவரைப்பார்த்து கேட்கையில்  என்ன கோட்டைத்தோழர்  எப்பிடியிருக்கீங்க? என இவர் தோள் தொடவும் மறப்பதில்லை.
   இப்படி தவறாத ,முறைபிரகாரம் நலம் விசாரிக்கிற பொழுதுகளில் என்னில் பிரியமாக உள்நுழைந்துவிட்ட இருவருமாய் இன்று இந்தப்பக்கம் வேலை செய்கிறார்கள்.
   மாதாந்திர  நாட்களின்  நகர்வுகளில்  அவர்களை  எங்கு  போகச்  சொல்லி நிர்வாகம்
பணிக்கிறதோ,அங்கு சென்றுவேலை செய்கிறார்கள்.
   சாலையோரங்களில் அடர்ந்து கிடக்கிற முட்செடிகளை,அவைகளுடன் பிணைந்து கொண்டிருக்கிற புதர்களை பள்ளம் மேடுகளை சீர்செய்தும்,சாலைகளில் தெரிகிற பள்ளங்களுக்கு பஞ்சர் ஒட்டுவதும்,சாலை மற்றும் சாலை யோரங்களை பராமரிக்கிற பணிஅவர்களுடையதாய்இருக்கிறது.
   அந்த  வகையில்  அவர்கள்  பராமரிப்  பணியாளர்களாய்  உயர்ந்து   தெரிகிறார்கள்.
உடலெங்கும் ஓடித்திரிகிற நரம்புகளையும்,எலும்புகளையும்,சதையையும்,ரத்தத்தையும் பராமரிக்கிற ஒரு இனிய மருத்துவராக அல்லது பராமரிப்பாளராக அவர்கள்து பணி இந்தசாலையிலெங்கும் நிறைந்து,பரவியும்,விரவியுமாய் தெரிகிறது.
   கொஞ்சம்உள்ளீடாகநினைத்துப்பார்க்கையில்விஷயத்தின்வீரியம் புரிகிறது.அவர்கள் மட்டும்இல்லாவிட்டால்இந்நேரம்கிராமத்து சாலைகள் முள் மூடியல்லவா போயிருக்கும்?    
   சில வருடங்களுக்கு முன்பாக இதே பாலவனத்தம்toமெட்டுக்குண்டு சாலையில் பயணித்துக்கொண்டிருந்தேன்.அந்த சாலையில்நான்சென்ற 5 கிலோ தூரமும் முள்ளை பிளந்துகொண்டு போனதாகவே நினைவெனக்கு.
   முட்செடிகளின்  வளைந்த  முனைகள்  சாலைகளின்  விளிம்புகளில்   முத்தமிட்டுக்
கொண்டிருந்தது.
     முத்தமிட்ட  முள்செடிகளின்  முனைகளும்,  அதனூடாக  அடர்ந்து  கிடக்கிற
புதர்செடிகளின்தோற்றமும்,சாலையோரங்களில்ஒதுங்கவும், பயணிக்கவும், பயமுறுத்தும்.
   அப்படிபயமுறுத்தியநாட்களினூடாகத்தான்ரோட்டின்அந்தமுனைக்கும்,இந்த முனைக்கும் சேர்த்து வைத்து தைத்தது போல் ஊர்ந்து போன பாம்பை நான் பார்த்தேன்.
    கைத்தண்டியிருக்கும். நின்று ,நிதானித்து,நெளிந்து ஏதேனும் அசைவு கேட்டால் கூட படமெடுத்து சீறியபடி சென்ற பாம்பை நானும் எனக்குப்பின்னால் அந்த சாலையில் பயணித்தவர்கள் சிலருமாய் சேர்ந்து நின்று கொண்டு பார்க்கிறோம்.   
    வேடிக்கையாக இல்லாவிட்டாலும் கூட பயணம் தொடர வழி வேண்டி நின்று கொண்டிருக்கிறோம்.(மரியாதை காரணமாக அல்ல,உள்ளுள் உதைத்த பயம் காரணமாகவே/)அதுபோனபின்புஎங்களதுபயணத்தை தொடர்கிறோம்.
    முட்செடிகளையும் புதர்களையும் பிளந்து வேலை செய்கிறீர்களே,இதுமாதிரியான தொந்தரவுகள்வராதா எனக்கேட்டபோது “அது இல்லாத  யெடத்துலயா நாமஇருக்கோம் தோழர்,  எல்லாத்தோடயும்,  எல்லாமும்தான்.  கலந்துபோயிக்கிற   வேண்டியதுதான்.
வந்துக்குறவேண்டியதுதான்.”என பதில்வரும் அவரிடமிருந்து.
    இப்போது அப்படி உதைக்கிற பயமில்லை.வளைந்து வந்து ரோட்டை முத்தமிடுகிற முட்செடிகளின்,அதனூடாக அடர்ந்து கிடக்கிற புதர்களின் தொந்தரவு ஏதுமற்று பயணிக்கமுடிகிறதுஇதுமாதிரியானகிராமத்து சாலைகளில்/
    முட்செடிகளும்,புதர்களும்,பள்ளம் மேடுமாய் இருந்த சாலைகளும்,பாம்புகளும், இதர விஷப்பூச்சிகளும்ஊர்ந்து திரிந்த அதன் ஓரங்களும் இப்போது பார்க்கவும்,பயணிக்கவும் நன்றாகஇருக்கிறது.
    அப்படியான பார்த்தலுக்கும்,பயணித்தலுக்கும் ஊடாக கிளைத்திருக்கிற உறவு இது. சாலைப் பராமரிப்பாளர்களால் இது சாத்தியம் கொள்கிறது.
     அடர்ந்து கிடக்கிற முட்செட்களைபிளந்தும்,அதனூடாக பிண்ணிபிணைந்திருக்கிற
புதர்களினூடாகவும்,  அதனுள்ளே  ஊர்ந்து திரிகிற  விஷஜந்துக்களுடனும்  பேசித்
திரிந்தவாறும்,சாலைகளின்மேடு,பள்ளங்களைசெப்பனிட்டவாறுமாய்வியர்வைத்துளிகள்உடலில் மின்ன உழைப்பவர்களைப்பார்க்க மிகவும் பிடித்துப்போகிறது.


    (சமர்பணம்: பார்த்த கணத்தில் இந்த பதிவை எழுதத் தோணிய தோழர் கோட்டை அவர்களுக்கும்,அண்ணன் வீரநாகு அவர்களுக்கும்/ )

2 comments:

ஹேமா said...

மனதில் மனிதம் உதைக்கிறபோதுதான் மனிதனாகிறோம்.சிலசமயங்களில் மறந்துதான் போகிறோம் சுற்றுச் சூழலை.எத்தனை பேரின் உழைப்பு சுற்றுச் சூழலின் துப்பரவான காற்று !

vimalanperali said...

உழைப்பு செதுக்கிற ஒரு சின்ன ஓவியம்தான் அனைத்திலுமாய் பெரிதாய் காட்சியளிக்கிறது. நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/