30 Jun 2012

முகமன்,,,,,,,,,,,


                      
    பெற்றோர்கள் வைத்த பெயரும் நிலைக்காமல்  அவனாக  வைத்துக் கொண்ட புனைப் பெயரும் நிலைக்காமல் இப்போதுஅதுவே நிலையாயும் சாஸ்வதமாயும் ஆகிப்போனது.
தோழர்,தோழர்,தோழர்,,,,,,அடபோங்கப்பா,எங்குபோனாலும்யார்மத்தியிலும், மனித வாசனை நிலைகொண்டுள்ள எந்த இடத்தில் நின்றிருந்த போதிலும் அல்லது தலைகாட்டுகிற தருணத்திலுமாய் அப்படித்தான் ஆகிப்போகிறது.
இத்தனைக்கும்அவன்ஒன்றும்அப்படியானவார்த்தைஅடையாளப்படுத்தப்பட்ட கட்சியிலோ, அல்லது தொழிற்சங்கத்திலோஉறுப்பினராகக்கூட இல்லை.அல்லது கட்சியில் நிலை கொண்டுள்ள பதவிகளில் எதிலும் இல்லை. பின் ஏன் அப்படி எனவும் தெரியவில்லை.
 பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலங்களில் தரையில் கிடக்கிற துண்டுபேப்பரைகையிலெடுத்துபடிக்கிறபழக்கமும்,புரட்டிப்பார்க்கிற
தனமும்இருந்தது போலவும்,திருமுருககிருபானந்தவாரியாரின்
சொற்பொழிவுகளைகேட்டுப்பழகியது,பொட்டலில்அரசியல்கட்சிகளின்
கூட்டம்என்றால்திறந்தவாய்மூடாமல்நின்றதும்இன்றுவரைதொடர்கிறது.வெவ்வேறுவடிவங்களிலும்,ரூபங்களிலுமாய்/(இன்றுமனைவியின்சொற்பொழிவேபெரிதாகஇருக்கஅதைக்கேட்கவே24மணிநேரமும்சரியாகிப்போகிறது.அப்புறம்வேறென்னகேட்பது?)    
 அலுவலகம்,அலுவலகம்விட்டால்பஜார்,நண்பர்கள்,தோழர்களின்சந்திப்பு,பேச்சுடீக்கடை,காய்கறிக்கடை எல்லாம் முடிந்து வந்த பொழுதுகளிலும்,
ஏதாவது ஓய்வு கிடைக்கிற வேலைகளிலுமாய் தொலைக்காட்சி மற்றும் கணிணியின்உதவியோடுகேட்பதுதான்சொற்பொழிவு,பாட்டு,நாடகம்என,,,
சரிவிட்டு விடலாம்.
 ஆனால் நிலை கொண்ட பேரை  என்ன  செய்ய? ஒன்றும்  செய்ய  வேண்டாம்.அப்படியே விட்டு விடுங்கள் என்கிறாள் அவனது மனைவி.
  அதற்கு  மேல்  பேசினால் “ரொம்ப  அறுக்காதிங்க,  ஓட்ட  ரெக்காடு மாதிரிபேசுனதையேபேசிக்கிட்டு/அதான்   காய்கறிக்  கடையிலிருந்து,
டீக்கடைவரைக்கும்அப்பிடித்தான்பேராகிப்போச்சுன்னு  சொல்றீங்கிள்ல,
அப்புறம் என்னவாம்? இப்ப நானும்ஒங்கள தோழர்ன்னு கூப்புடலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன்”என்கிறாள்.
 “கணவர்தோழாவா?” “ஐய்ச்சக்கா”, அதுவும் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் கண்களைஉருட்டிக்கோண்டு இடுப்பில் கைவைத்து முறைக்கிற பழக்கம் மட்டும் போக மாட்டேன் என்கிறது.
  ஒருபெண்மனைவிஎனமறுஉருறுவாய்ஆகிப்போனநாளிலிருந்து
இப்படித்தான்  போலும்/
ஆகட்டும்,ஆகட்டும்.இல்லையென்றால்முக்கால்வாசி  வீடுகளில்இந்த
ஆண்களின்தொல்லைபொறுக்கமுடியாது.
நிற்கிறஇடங்களிலெல்லாம்டீக்குடிக்க,சிகரெட்குடிக்கஎனஆரம்பித்து
விடுவார்கள்.
அவனுக்குத்தெரிந்துஒருவர்தான்அணிந்திருக்கிற வெள்ளைச் சட்டையில் சிகரெட்புகைபடிந்துகாணப்படுகிறார்எந்நேரமும்அவரும்அவனைகூப்பிடுவது தோழர் எனவே/
  அதற்காக சொந்தக்காரர் கூட இப்படியா அழைக்கவேண்டும்? அரசுப் போக்குவரத்தின்நடத்துனர்அவர்.
  அவனது ஊரில்தான் சம்பந்தம் பண்ணியிருக்கிறார்.
தாராபுரத்துக்காரர் பெண்ணைஅவருக்கு பேசி முடிக்கையில் மாமனார் வீட்டில் தாண்டவமாடிய வறுமையை இவர் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.
  நல்ல பெண்,அவள் படித்தும்,முடிந்தும் வைத்திருந்த  டீச்சர் ட்ரெயினிங் படிப்பு என்கிற இரண்டு மட்டுமே போதும் என அவளை மணம் முடித்துக்கொண்டு வந்திருந்தார்.
  இன்றுஅவள்ஒரு கிராமத்துப்பள்ளியில் தலைமை ஆசிரியர்.அழகும், அறிவுமாய் இரண்டு பிள்ளைகள்.படிப்பு வேலை,பொறுப்பு என  நகர்கிற குடும்பம்.கண் நிறைந்த மனைவியையும்,பிள்ளைகளையும் தன் மனதில் தாங்கி நகர்கிற அன்பு மனிதராக உருக்கொண்ட அவர் அவனுக்கு அண்ணன் முறை வேண்டும்.
  அவன்,இரு சக்கர வாகனம் மற்றும் கொஞ்சமாய் மடியில் கட்டிப்போன எண்ணங்களுடனுமாய் தங்கமுத்து தோழர் கடையில் போய் வண்டியை ஸ்டாண்ட் போட்ட போது பின்னிருந்து முதுகு தொட்ட “வணக்கம் தோழர் என்கிற  குரலுக்கு  சொந்தக்காரராய் அவர் இருந்தார்.
  “அண்ணே, வாங்கண்ணே,நல்லாயிருக்கீங்களா,எங்க வேலை செய்றீங்க?வீடு எங்க இருக்கு? பிள்ளைங்க என்ன பண்றாங்க?டீச்சர்எப்பிடிஇருக்காங்க?என கேட்டமறுகணம்
“நல்லாயிருக்கேன்தோழர்” என  ஆரம்பித்து  வீடு   மனைவி,
பிள்ளைகள்எனஒருமூச்சுபேசிமுடித்தார்.மூச்சுக்கு,மூச்சுதோழர்,தோழர்,தோழரே,,/
  ஒரு டீ,ஒரு வடை,மிஞ்சிப்போனால் ஒரு முறுக்கு இதுதான் அவனது டீக்கடை மெனு/
அலுவலகம்முடிந்துவரும்போதுபாலவனத்தத்தில்தான்ஒரு டீக்குடித்திருந்தான். 10கிலோ மீட்டருக்குள்ளாகவா அடுத்து ஒரு டீக்
 கேட்கிறது?
வெறும்டீக்காகமட்டுமாபோகிறான்.இல்லையில்லை.கொஞ்சம்பழக்கத்தி
ற்காக,கடையில்கேட்கிறபாட்டுக்காக,இன்னும்மனம்லேசாகிப்போகிற வேறு பல விசயங்களுக்காகவும்/
 கனக்கிற அல்லது குழப்புகிற இல்லையேல் மனம் பிசைகிற எண்ணங்களுடன் அங்கு போய் அமர்ந்தால் உள்ளே இறங்குற நேரம் டீயின் மிடறுகள் ஒவ்வொன்றுக்குமாய் அவிழ்ந்து சிதறிப்போகிற மனதை அள்ளி முடிய பிரியமில்லாமல் அப்படியே அங்கேயே விட்டு விட்டு வந்து விடுகிற நல்லதனம் மிகவும்பிடித்துப்போகஅங்கேயேஅமர்ந்துவிடுவான்.
 “டீ,டீ,டீ தானா எந்நேரமும்?விட்டா 24 மணி நேரமும் பக்கத்தில்பாய்லரைவைத்துக்கொண்டுட்யூப்போட்டு  உறிஞ்சிக்  கொண்டிருப்பாய்போலிருக்கிறேதே?”என கேலி  பண்ணுவார்  அவனது  நெருங்கிய உறவினர். அது மாதிரிதான் ஆகிப்போனது அவனது கதையும்/
  மேம்பாலம் இறங்கி ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு நிமிர்ந்த போது எதிர்ப்பட்ட வெளியை  ஏறிடும் போது  உதித்த எண்ணமே டீ சாப்பிடலாம் என்பது/
  பாலத்திலிருந்து கருத்து நீண்டு இறங்கிய சாலை,சாலையின் மேடு பள்ளங்களிலும்,சின்னசின்ன குழிகளிலுமாய் பெயர்ந்து கிடந்த கற்கள் அதன் மீது படர்ந்து கிடந்த தூசி,அழுக்கு,மண்,மாலை வெயில் என எல்லாம் கடந்தும்,பிரிண்டஅவுட்எடுக்கிறகம்யூட்டர்சென்டரில்பேசாமல் கேட்டதற்கும்,சொன்னதற்கும்தலையாட்டியும்,சைகை காட்டி
யுமாய்பேசிய பெண்,அவளது அழுத்தம் படர்ந்த முகம் என்கிறவற்றுடன் நான்கு முனை சிக்னலை கடந்து வந்த போது செயல் பாட்டுக்குள்ளான எண்ணத்துடன் தங்கமுத்து தோழர் கடையில் போய் அமர்ந்த போது பார்த்த மனிதராய் அவர்/
  நல்ல மனிதர்.முன்பு பார்த்ததை விட இப்போது நன்றாகயிருந்தார்.எட்டு முழ வேஷ்டி,முழுக்கை சட்டை.திறந்து காணப்பட்ட கழுத்து பட்டன் வழியாக டீசர்ட்டோ,பனியனோ தெரிந்தது.
  எப்போது பார்த்தாலும் பளிச்சென்று சிரித்து பேசக்கூடிய அன்பின் மனிதர் ஒட்டுதல் மிக்கவர்,அவர்தான் எனக்கும் சேர்த்து டீ சொன்னார்.அவன்,அவர்  மற்றும்  அவருடன்  வந்திருந்த சாமிக்கண்ணுக்குமாய் சேர்த்து/
தட்டில் அடுக்கப்பட்டிருந்த  வடைகளைப்  பார்த்தான் ஐந்தாறுகிடந்தது.பாக்கெட்டில்அடைக்கப்பட்டிருந்த முறுக்கு
களைபார்க்கிறான்.பை நிறைந்து தெரிகிறது.
வடையையும்,முறுக்குகளையும்வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் டீயைநீட்டியகரம் அன்பின் மனிதருடையதாய் இருந்தது.
 ஒன்றும்பேசத்தோன்றா சங்கடத்துடன் டீயை  குடித்துக்  கொண்டிருந்தநேரத்திலும்பேசிக்கொண்டிருந்த பொழுதிலுமாய் அவர் சொன்ன “தோழர்” என்கிற வார்த்தை பதங்களுக்கு அவனுடைய பதில்ப் பேச்சு  அண்ணன்,அண்ணன் என்பதாகவே இருந்தது.
 அப்படி அவர் கூப்பிட்டும்,பேசியும் கொண்டிருந்த வேளையில் அவனுக்கு அடுத்தடுத்து வந்த போனில் “வணக்கம் தோழர்” என்கிறார்கள் எப்பொழுதும் சார் என கூப்பிடகூடியவர்கள் கூட/
  கணக்கிட்டுப் பார்த்தால்  இன்று காலையிலிருந்து எதிர்ப்பட்ட,
பேசியஇருபதுக்கும்குறையாதவர்களில்பத்துக்கும்மேற்பட்டோர்கள்சொன்னது  தோழர்,,,தோழர்,,,தோழரே,,,,,,,,,,/
இருபதுக்குள்அடங்கியபத்தைதாண்டியபதினைந்தைத் தொட்ட
மனங்களில்அவன்அப்படித்தான் பதிவாகியிருக்கிறான். “ தோழர்” என/ அதுவும் நன்றாகவே உள்ளது உயிர்ப்புடன்/


7 comments:

ரிஷபன் said...

இருபதுக்குள்அடங்கியபத்தைதாண்டியபதினைந்தைத் தொட்ட
மனங்களில்அவன்அப்படித்தான் பதிவாகியிருக்கிறான். “ தோழர்” என/ அதுவும் நன்றாகவே உள்ளது உயிர்ப்புடன்/

என்ன சொல்லி அழைத்தால் என்ன.. அன்பின் வலை பின்னப்பட்டிருந்தால் சரிதான்.

திண்டுக்கல் தனபாலன் said...

"தோழரே" என்று நம் முந்தைய நண்பர்களிடம் பேசும் போது, அந்த வார்த்தையில் ஒரு மரியாதையும், நெருக்கமும் இருப்பதாக என் எண்ணம். 'தோழன் அல்லது தோழி' என்று இந்தக்கால குழந்தைகளிடம் கேட்டால், "அப்படின்னா என்ன ? என்று கேட்கிறார்கள். வித்தியாசமான பகிர்வு சார் ! நன்றி !

சசிகலா said...

மரியாதை கலந்த அன்போடு தோழா , தோழி நன்றாகவே உள்ளது .

vimalanperali said...

வணக்கம் ரிஷ்பன் சார்.மன்ங்களில் பதிகிற சொல்லும்,அழைக்கப்படுகிற வார்த்தகளுமாய் முக்கியம் பெறுகிற தருணங்களில் வாழ்க்கை மிளிர்கிறது.

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம் .நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரிஷபன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/