25 Jul 2012

கதாநாயகன்,,,,,,,


     புது படம் அது. நாளைக் காலை ரீலீஸ். தமிழகத்தின் முண்ணனி வரிசையில்
இருக்கிற கதாநாயகன் நடித்த படமது. தியோட்டர் முன்கூடியிருந்தார்கள் ரசிகர்கள்.

   நன்றாகயிருந்தால் அவர்கள் அனைவருக்கும் 20பதிலிருந்து   30ற்குள்ளாக இருக்கலாம் வயது.

  பரவாயில்லை.எந்த வேற்றுமைகளற்றும் இப்படி ஒன்றாக் கூடி பணிபுரிய வைத்திருக்கிறது இந்த ரசிகர் மன்றம் அவர்களை .

  வீட்டில் ஒரு குடம் தண்ணி எடுக்க மறுக்கிறவர்கள் கூட இங்கு வந்து தன் மனதில் வரைந்து ஆதர்ச புருசனாய் ஏற்றுக்கொண்ட தன் கதாநாயகனுக்காய் இப்படிபழியாய்கிடப்பதுஒருவிதத்தில்ஆச்சரியம்ஊட்டினாலும்,இதுமாதிரியானசெயல்பாடுகளில்ஒருவிதத்தில்வேற்றுமைமறந்தஒற்றுமையிலிருக்கிறார்கள்எனசந்தோசப்படாமலிருக்கமுடியவில்லை.

 அது அந்த நடிகரின் பால் ஏற்பட்ட ஈர்ப்பு மனோபான்மையா அல்லது இப்படி எதிலாவது ஒன்றில் தன்னை  ஈடுபடுத்திக்  கொண்டு   பணிபுரிவதில்  இருக்கிற
ஆர்வமாதெரியவில்லை.

  கூடியிருந்த அனைவருமே ஊதாக்கலர் ஜீன்ஸ்,அதற்கு ஏற்ற கலரில் சட்டை.அல்லது டீசர்ட்,தலை நிறைந்த முடி, ஸ்டைலான பார்வை  தங்களை
ஒழுங்கு படுத்தி கலக்கலாய் காண்பித்துக்கொண்டார்கள்.

 அவர்களது பெயருக்கு முன்பாகவோஅல்லது பெயருக்கு பின்பாகவோ கதாநாயகனின் பெயர் ஒட்டி நெசவிடப்பட்டுத் தெரிந்தது.

   அதில் அவர்களுக்கிருந்த உலக  சந்தோசம் வேறெதிலும் இல்லை எனக்கூட
சொல்வார்கள்கேட்டால்.ஆனால்யாரும்கேட்பதுதான்இல்லை

  நீண்டு கருத்த ரோடு.ரோட்டின் இரண்டு புறமும் கட்டியிருந்த பிளாட்பாரத்தின் ஓரம் அமர்ந்திருந்த கட்டிடங்களின் முன்பாக விரிக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் கதாநாயகன் அழகு காட்டிக் கொண்டிருந்தான் பல கோணங்களில்/

 பத்துக்குப்பத்து,பத்துக்குபணிரெண்டு,எட்டுக்குஆறு,,,,,,,,,,,,,,என பல்வேரான அளவுகளில் கதாநாயகன் குடிகொண்டிருந்த பேனர்களை நான்கு பக்கமும் மடிக்கப்பட்டிருந்த சட்டங்களில் ஒட்டி அதற்கு கைபிடியாக இரண்டு மூங்கில்களை பிணைத்துத் தைத்து தூக்கி ஊணிக் கொண்டிருந்தார்கள்.

  பரபரப்பாகவும்,பேச்சும்,சிரிப்பும்,சிகெரெட் புகையாகவும் கும்பலாய் ஊர்ந்து கொண்டிருந்த ரசிகர்ளிடம் தயக்கமாய் வந்து நின்ற அவர் கேட்கிறார்.

  “கூரை வீடு,மழைக்கு ஒழுகுது,இது மாதிரி பழசு,கிழசு ஏதாவது இருந்தா குடுங்க தம்பி,ஒங்க பேரச்சொல்லி கூரை மேல் போட்டுக்கிருவேன்” என்கிறார்.

 அவரின் கெஞ்சலான கேட்டல்,ரசிகளின் மௌனப் பார்வை,பரஸ்பரம் இருவரின் பார்வை பரிமாற்றம்,,,,,,,,,,என நடந்து கொண்டிருந்த நேரத்தில் நாளைக்காலை பாலாபிஷகம் பண்ண வேண்டும் என நினைத்து தூக்கி ஊனப்போன பேனரை கழற்றி அவரது கையில் கொடுத்து விடுகிறார்கள்.

  அவர் எல்லோருக்கும் கும்பிடு போட்டுவிட்டு நகர்கிறார். அவர்செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அனைவரிலும் தரையில் படர்ந்திருந்த ஈரம் ஏறி கசிந்ததாய் தெரிந்தது.

12 comments:

பாலா said...

அருமையான வரிகள். உண்மை நிகழ்வா சார்?

முத்தரசு said...

இது நிஜம் என்றால் ரசிகர்கள் திருந்துகிறார்கள் சந்தோசம் - கற்பனை என்றால் நடக்கவேண்டும் பிராத்திக்கிறேன்...

முத்தரசு said...

இப்போ எனக்கு அந்த ரசிகன் தான் கதாநாயகனாக தெரிகிறான்

vimalanperali said...

வணக்கம் பாலா சார்,பதிவு போட்டவுடன் உங்களது ஞாபகமே வந்தது.கருத்டு போட்டு விட்டீர்கள்,சினிமா சம்ந்தமாக அடிக்கடிஎழுதும் தாங்கள் இந்த பதிவுக்கு முதல் கருத்திட்டது மிகச்சரியான விஷயமாகவே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/உண்மை நிகழ்வா எனக்கேட்டுள்ளீர்கள்.உண்மையாக இருந்தால் நல்லது என்பது என அவா/

vimalanperali said...

கதாநாயகன் எங்கும் உருவாகிறான்,சினிமாக்களில் மட்டுமல்ல.அவனை நம் சமூகமே உருவாக்குகிறது,அவன் என்ன தனியாக அந்தரத்தில் இருந்து வந்தவனா?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

நடிகரின் அல்லது நடிகையின் ரசிகனாக இருந்தால் பரவாயில்லை.
வெறியனாக இருந்தால் தான் பிரச்சனை.

நன்றி...

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

உண்மையில் நல்ல ஒரு ரசிகன் கதாநாயகனே/நிறையப் பேரைபார்க்க முடிகிறது இப்படி.கையில் உள்ள ஒரு ரூபாயில் ஐம்பது பைசாவை தானம் செய்கிற மனோபானமை உள்ள நபர்கள்,தன் தேவைக்கு வைத்திருக்கிற உணவைக்கூட அடுத்தவருடன் பகிர்ந்து உண்ணும் பாங்கு,தனக்கு கால் வலித்தாலும் பரவாயில்லை என பஸ் கூட்டத்தில் தான் எழுந்து நின்று கொண்டு அடுத்தவர்களுக்கு இடம் கொடுப்பவர்கள்,,,,,,,,,,,,,,,,என அன்றாடம் சந்திக்கிற மனிதர்கள் நிறந்துள்ள சமுகம் நமக்கு நிறைய கதாநாயகர்களை அடையாளம் காட்டிவிட்டுச்செல்கிறது.நன்றி மனசாட்சி சார்.

vimalanperali said...

இங்கு ரசிகனுக்கும் வெறியனுக்கும் அடிப்படையில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகவே படுகிறது.ரசிகனாக,
அதுவும் நல்ல ரசிகனாக இருப்பவன் வெறியனாக ஆகி விடுவதில்லை ஒருபோதும்.அவனால் அப்படி ஆகிவிடவும் முடியாது.தவிர இங்கு ஒரு ரசிகனின் பார்வையில்தான் படத்தின் ஓட்டத்தை கணிக்கிறார்கள்.நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

தவிர 80 களில் இருந்த சினிமா
ரசிகனுக்கும் இப்பொழுது இருக்கிற சினிமா ரசிகனுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது சார்,அப்போது வந்த படங்கள்,இப்போது உள்ள ரசிகர்கள் வேறு வேறு,தலைமுறையே மாறிவிட்டது என்ற போதும் கூட ரசனை மனோபாவமே மாற்றப்பட்டிருக்கிறது என்றே சொல்வேன்,நமக்குத்தெரிய 80 களில் இருந்த உடை நாகரீகம்,எழுத்து,
பெயிண்டிங்கஸ்,சுவரெழுத்து,வண்ண போர்டுகள்,பாடல்கள்,அது சுமந்து நின்ற டேப்ரிக்கார்டர்கள்,,, ,,,,,,,,,,,இன்னுமான நிறைய விஷயங்கள் காணாமல் போயிருக்கிறதே? ஏன்?நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்,தங்களது வருகைக்கும் ,கருத்துரைக்குமாக/

வலையுகம் said...

கடைசி சில வரிகளை படித்தபோது உடல் என்னையறியாமல் ஒரு நிமிடம் சிலிர்த்தது அருமையான் பகிர்வு

vimalanperali said...

வணக்கம் ஹைதர் அலி சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/தவிர இவர்கள் என்றால் இப்படித்தான் என நமது மனதில் உருவாகிப்போன எண்ணத்தை மாற்றுபவர்களாக சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.நன்றி வணக்கம்/