26 Jul 2012

சுழற்சி,,,,,,,,


ஒரு சின்ன சுழியில்

உருவாகிப்போகிற

வேறுபாடுகளே பெரிதாக்கி

உணரப்படுகிறது.

நான்சொன்னபடிதான்,

எனது சுழற்சியிலேயே,

எனது கைப்பாவையாக,

எனது எண்ணங்களின்

மறு பிரதிபலிப்பாக,,,,,,,,,,

என இன்னும் இன்னுமாய்

என்பது தகர்ந்து

நாம்,நமது,என்பது

மலர்கிற போது எல்லாமும்

சாத்தியமாகிப் போகும் எனத்தோணுகிறது.

9 comments:

Yaathoramani.blogspot.com said...

நாம்,நமது,என்பது
மலர்கிற போது எல்லாமும்
சாத்தியமாகிப் போகும் எனத்தோணுகிறது.//

நிச்சயமாக
அருமையான உயர்ந்த சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள் சார் !
நான் என்று சொல்லாமல் நாம் என்று சொல்லும் போதே-உதடு ஓட்டும் போது....

எல்லாமே சாத்தியம் தான்.

நன்றி.

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,நலம்தானே?மலர்கிறவைகளில்,நாம் என்ன,நான் என்ன மலரவைக்கிறதில்தானே இருக்கிறது என எண்ணத்தோணுகிறது,
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

தனிமரம் said...

ம்ம் உண்மைதான் நாம் என நினைக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கின்றது!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நலம்தானே?ஒட்டுகிற உதடுகளும் மனதும் நாம் என உச்சரிக்க மறந்து நீதிமன்ற வாயில்களில் தவமிருப்பதாய் வருகிற செய்திகள் மிகவும் கவலைக்
குள்ளாக்குவதாய்?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நாம் என நினைக்க மறந்து இன்று கவுன்சிலிங் தேடி அலைபவர்கள் நிறைந்து/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

ஹேமா said...

நான் என்பதின் ஆண்வமும்,நாம் என்பதின் ஒருமைப்பாடும்...சிந்திக்க வைக்கிறது !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.நன்றி தங்களது வருக்கைக்கும்,
கருத்துரைக்க்குமாக/