1 Aug 2012

தூதுமடல்,,,,,,,


சாலையாய் அல்லாது வேறேதினும் ஒன்றாக உருவெத்து விடவே ஆசை எனக்கு.

ஏன்அப்படி?அன்றாடங்களில்எத்தனைபேர்என்மேல்பாவிபடர்ந்துபரவி ஓடிக்
கொண்டிருக்கிறார்கள்.

என்னைநம்பியும்  என்  மேல்  பிரியம்   கொண்டுமல்லாமல்   வேறென்னவாக 
இருக்கிறது இதற்கு அர்த்தம்?

கருஞ்சாந்து பொட்டெழுதி கண்ணுக்கு மையெழுதி அழகுக்கு அழகு செய்தது போல கருநிறத்தில் தார் ஊற்றி ஜல்லி கலந்து இரண்டையும் குழப்பி மிஷின் நிறைந்துகைகொள்ளாமல்அள்ளிசமப்படுத்தப்பட்டதரையில்விரித்துஅகலங்க
ளிலும், நீளங்களிலுமாய்கண்ணுக்குஅழகாய்காட்சிப்படுத்திக்காண்பித்துக்
கொள்ளும்போதுபார்க்கபுதுப்பெண்போலஅழகாகவும்,கண்ணுக்குநிறைவாகவும்
காட்சிப்படுகிறநான்சாலையோரங்களில்பூக்கிற பூக்களாக,செடிகளாக,மரமாக,
அவைகளின்மீதுஊர்ந்துதிரிகிற வண்டாக, பூச்சிகளாக,அதில்கூடுகட்டி வாழும் 
பறவைகளாக இருக்கவே ஆசையாகிப்போகிறது.

இதெல்லாம்இல்லாவிட்டாலும்கூடசாலையோர நிழற்க் குடையாகவாவது ஆகிப்போகிறேனே?விடுங்கள் என்னை/

என்மேல்ஊர்ந்துசெல்கிறபாதசாரிகளின்மேல்,இருசக்கர மற்றும் நான்கு  சக்கர
ஓட்டுனர்களின்மீதோ அல்லது பூம்புஞ்சுகளாய் தடம்பதித்து செல்கிற பள்ளி குழந்தைகள் மீதோவருத்தமில்லை எனக்கு.

அன்பும்,காதலும்,நட்பும்,,பாசமுமாய்வருகிறசெல்கிற   அனைவர்களின் மீதும்
எனக்குஎன்னவருத்தம்இருந்துவிடமுடியும் பெரிதாக?சந்தோசப்பட்டுதான்
இருக்கிறேன்பலசமயங்களில்/

பள்ளி செல்கிற காலை,மாலை இரண்டு வேலையும் எனக்கு இப்படி சந்தோஷிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது தினசரிகளின் நகர்வுகளில் நான் செய்த பாக்கியமாகவே/

அப்படி பாக்கியவானாக்க  நான்  அவதரித்துக்   கொள்கிற  நாட்களில்  என்னில்
இருந்து அவிழ்ந்துசிதறிப்போகிறமனதை அள்ளிக்கட்ட  பிரியமில்லாமல்
அப்படியே விட்டு விடுகிற கதையும் கூட நடப்பதுண்டு

அப்படியெல்லாம்விட்டுவிடுகிறபிரியம்ஒருபக்கம்இருந்தபோதிலும்கூட மனம்
நிறைந்த வருத்தமும் இல்லாமலும் இல்லை.

மழை,வெயில்,காற்று,பனிஇவைபோன்றதட்பவெப்பகாலங்களையும்என்மீது
அன்றாடங்களில்நடக்கிறதுக்கநிகழ்வுகளைமட்டும்தாங்கிக்கொள்ளவும்ஏற்றுக்
கொள்ளவும்முடியவில்லை.

நான்,நீ,அவர்கள் என்கிறவழியில்செல்கிறபோதும்கூடஎனக்கானதைஏற்றுக்
கொண்டு விடுகிறமனம்வந்துவிடுகிறது.

குற்றம்சொல்கிறவரையே  கூசிப்  போகச்  செய்கிற  மாதிரியான  கேள்விகளை
கேட்பவரிடத்திலும்,குற்றம்சொல்லப்போனவனையேகுற்றவாளியாக்கிநிற்க
வைக்கிறஅல்லதுதிணறிப்போகச்செய்கிறஉயர்நவிற்சிமனோபான்மைஇங்கு ரொம்பப்பேரிடம்குடிகொண்டுள்ளதாக/

அப்படியே இருக்கட்டும்,இருந்துவிட்டும்போகட்டும்நமக்கென்ன?எனஇருந்து
விடவும்முடியவில்லைவாழ்கவளமுடன்.

போனவாரத்தில்ஒருநாள்மதியம்உடல்நசுங்கிஎன்மீதுகிடந்தவனை அள்ளிக்
கொண்டு போனார்கள் என் கண்முன்பு.

அரைமணிநேரத்திற்குமுன்புரத்தமும்,சதையும்,உயிர்ப்புமாகதன் மனைவி,
மக்களுடன்உயிர்காட்சியாய்வந்தவனைஅரைமணிக்கு பின்புபிணமாக
ப்பார்க்கிறகொடுமையை என்னால் தாங்கிக் கொள்ள  முடியவில்லை  அரசு
ஆஸ்பத்திரியின்ஸ்டெக்சரில்வைத்து தூக்கிப்போனகொடுமையைப் பார்க்க முடிந்தது.இந்தக்கொடுமையெல்லாம்கண்ணால் காணமுடியாமல் போய்
விடுவதற்காகத்தான்வேறுஒன்றாய்உருவெடுத்துவிடஆசைஎன்கிறேன்.

நடக்குமா,முடிந்தால்சொல்லுங்கள்,அடித்துப்பெய்கிறமழையே,மென்மையாய்,
ஆக்ரோஷமாய்   வீசுகிற  காற்றே, உடலைச்  சுடுகிற   வெயிலே  ,எலும்பைத்
துளைக்கிற குளிரே,,,,,,,,,இன்னும்இன்னுமாய்  மிச்சமிருக்கிற மற்ற எல்லாவை
களுமே,என்னைக்கொஞ்சம் கவனித்து எனது கோரிக்கையை ஏற்று என்னை வேறு ஏதேனுமொன்றாகஉருமாற்றிவிடக்கூடாதா?
நன்றிவணக்கம்/

9 comments:

கவி அழகன் said...

Alakana arivana atputhamana yathartha padaippu

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வு... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

வணக்கம்.

அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

தங்களுடன் ஓர் விருதினைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். தயவுசெய்து ஏற்றுக்கொண்டு சிறப்பிக்கவும்.

http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html

அன்புடன்
vgk

vimalanperali said...

வணக்கம் கவி அழகன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் வை கோபாலகிருஷ்ணன் சார்,தாங்கள் என்னை மதித்து விருது வழங்கிய தங்களின் உயர்வான மனதிற்க்கு நன்றி.

ஹேமா said...

அன்றட வாழ்க்கையை மனிதனைவிட நெருக்கமாக ரசிக்கிறது சாலை.பேசவிட்டால் எத்தனை ஆதங்கங்கள் வெளிவருமோ !

vimalanperali said...

வணக்கம் மேடம் ,நாம் எளிதில் நினத்து விடுகிறதுண்டு பலவிஷயங்களையும் பல மனிதர்களையும்/ஆனால் நடப்பு விஷயம் அப்படியில்லை.இங்கு பல அக்றினைகளுக்கும் உயிர் இருக்கிறது.நாம் மிகவும் துச்சமாகவும் மிககவும் எளிதாகவும்,மிகவும் மோசமாகவுமாய் சுட்டிக்காட்டப்ப்படுகிற மினிதராக ஆடு,மாடு மேய்க்கிறவர்கள் உள்ளார்கள் ஆனால்அவர்களுக்கிருக்கிற
வாழ்க்கை அனுபவம் போல வேறு யாருக்கும் இருப்பதில்லை என்பதே உண்மை.நன்றி தங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்/நாம்எளிதில்
நினைத்துவிடுகிறதுண்டு பலவிஷயங்க
ளையும் பலமனிதர்களையும்/
ஆனால்நடப்பு விஷயம்அப்படியில்லை.
இங்கு பல அக்றினைகளுக்கும் உயிர் இருக்கிறது.நாம் மிகவும் துச்சமாகவும் மிககவும் எளிதாகவும்,மிகவும்மோசமா
கவுமாய் சுட்டிக்காட்டப்ப்படுகிமினிதராக
ஆடு,மாடு மேய்க்கிறவர்கள்உள்ளார்கள்
ஆனால்அவர்களுக்கிருக்கிறவாழ்க்கை
அனுபவம் போல வேறு யாருக்கும் இருப்பதில்லை என்பதே உண்மை.
நன்றி தங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாக/