25 Aug 2012

கிளியாஞ்சட்டி,,,,,



இப்படி விட்டேத்தியாயும்

பற்றற்ற மனோ நிலையுடனுமாய்

இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது.

கணிணியில் தட்டச்சு செய்து கொண்டே

தொலைக்காட்சியை பார்ப்பதும்,

தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே

பின் கணிணியில் தட்டச்சு செயவதும்

அலுத்துப்போகிற அல்லது

முடிந்து போகிற கணங்களில்

தரையில் அமர்ந்து மனம் பிடித்த இசை,

மனம் பிடித்த பாடல்,மனம் பிடித்த சினிமா,

மனம் பிடித்த பேச்சு மற்றும்

ஒரு கோப்பை தேனீர்

இவைகளுடன் நகர்கிற பொழுது

விட்டேத்தியாயும், பற்றற்றுமாய்

இருந்த போதும் நன்றாகத்தான் இருக்கிறது.

4 comments:

கவி அழகன் said...

En intha mudivukku vantheerkal kavinjare.

vimalanperali said...

வணக்கம் கவி அழகன் சார்.நான் இந்த முடிவுக்கு வரவில்லை.நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சமயங்களில் இப்படி ஆளாகியும்,ஆட்பட்டும்
போகிறோம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

விச்சு said...

விட்டேத்தியாய்.. இந்த வார்த்தையைக் கேட்டே வெகு நாட்களாகி விட்டது. சுகமான அனுபவங்கள்.

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/