22 Sept 2012

பிறிதொன்று,,,,,,,,,


ஒரு வாரம் முழுவதுமாகிப்போகிறது.வீட்டில் பெயிண்ட் அடித்து முடிக்க.வீடு இப்போது புது பொலிவு கொள்கிறது.

பச்சை,சிவப்பு,மஞ்சள்,ஆரஞ்சு,ஊதா இன்னும் இன்னுமான பல நிறங்களில் யோசித்தபோதும்பார்த்தபோதும்வீட்டார்அனைவருக்கும்சின்னமகன்உட்பட
பிடித்தகலர்அதுவேயாகிப்போனது.

ஐஸ் க்ரீம் நிறத்தில் இருந்த லைட்கலர் மெல்லிய உடை உடுத்தியது போல நன்றாகஇருக்கும் பெயிண்ட் அடித்து முடித்த பின்பு என பேசிக்கொண்டோம் .

வீட்டில்எல்லோருடையவிருப்பமும்எனதுவிருப்பமும்அதுவேயாகிப்போனபின்அந்தக்கலரையேதேர்ந்தெடுத்துவாங்குவதென முடிவாகிப்போகிறது.
சிலநேரங்களில்முடிவுகளேவிருப்பங்களாயும்,விருப்பங்களே முடிவுகளாயும்
ஆகிப்போகிறஅல்லது ஆக்கி வைக்கப்படுகிற கொடுமை நிகழ்ந்து விடுவதும் உண்டு.அது காலம் காலமாக இருக்கிற நீள் நிகழ்வின் இயல்பாக/

நாங்கள் கஷ்டப்பட்டு மூளையை கசக்கிப் பிழிந்து(?) யோசித்த கலரையே வாங்கி வந்தேன்.ஷேட் கார்டில் அதற்குப்பெயர் என்னவோபோட்டிருந்தது.
இப்பொழுது ஞாபகமில்லை.

அந்த கலரை தேர்ந்தெடுக்கும் போது அது மாதிரியே தோற்றமளிக்கக்கூடிய இன்னொன்றும் இருக்க இரண்டில் எதை எடுப்பது என்கிற உயர் குழப்பத்திலும்,
எதன் பக்கம் சாய்வது என்கிற முடிவெடுக்க முடியா தன்மையினாலும் இரண்டு கலரிலும் ஒவ்வொரு கிலோ என சாம்பிளுக்கொன்றாய் வாங்கி வந்தேன்.

வாங்கி வந்த கையோடு வீட்டின் வராண்டா சுவரிலும்,ஹால் சுவரிலுமாய் அடித்துப்பார்க்கிறேன்.நான் அடித்துக்கொண்டிருக்கையிலேயே பிரஸ்ஸை இடையில் வாங்கி சின்ன மகன் அடிக்கிறான்.

அவன்அடித்ததும்நன்றாகவேஇருந்தது.பூவொன்று நகர்ந்து,நகர்ந்து,,,,,,,,,,,,,,,,,
நர்த்தனமாடினால்எப்படி இருக்கும்?அது போலிருந்தது அவனது அங்க அசைவுகள்.மேலிருந்து,கீழும்,கீழிருந்துமேலுமாகவும்,பக்கவாட்டிலுமாய்
தீற்றிய பட்டை பிரஷ்ஷின் வர்ணம் நன்றாகயிருந்தது.
பார்க்க ஆ,,,,சூப்பர்.பிரஸிலிருந்து வழிந்த வர்ணத்தை வைத்து ஒரு உருவம் வரைந்து விட்டான்.

அவன் ஒரு உருவனாகவே பல நேரங்களில் காணப்படுகிறான்.கை,கால் முளைத்த மென் சிற்பம் ஒன்று அசைந்து,அசைந்து நடம் புரிந்தால் எப்படியிருக்கும் என்பது போலிருந்த அவனது அசைவை தாண்டி முடித்து விட்ட அன்றைய நாளின் நகர்விலிருந்து சரியாக ஆறு மாதங்கள் கழித்து பெயிண்ட் அடிக்க அரம்பித்தோம்.

வீட்டின் உள்ளே மட்டும் போதும் என முடிவெடுத்து ஆரம்பித்த வேலை திருவாளர் பெயிண்டரின் வற்புறுத்துத்தலால் வீட்டிற்கு வெளியிலும் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்க்குட்பட்டுப்போனது.

நகரின் பெரிய கடை ஒன்றில் வாங்கிய பெயிண்ட்,பிரஷ்இத்தியாதி,இத்தியாதி
-யானசமாச்சாரங்களுடன் ஆரம்பித்த வேலை முடிய ஒரு வாரம் ஆகிப்போகிறது.

உள்ளேயும்,வெளியேயும் கலர், வெள்ளை,பார்டர் என மாற்றி,மாற்றி அடிக்கப்பட்டிருந்த கலரையும் புதுக்கோலம் பூண்டிருந்த வீட்டையும் பார்த்த ஓரிவர் “நன்றாகயிருத்தது கலர், கலர் கண்னை உறுத்தாமல்இப்படித்தான் இருக்கவேண்டும்” எனவும் மாறி,மாறி சொன்னார்கள்.

அந்த புகழின் மயக்கத்திலும்,வீடு புது பொலிவு பெற்று விட்ட திருப்தியிலும் இன்னும் நான்கைந்து வருடங்களுக்கு கவலையில்லை எனகிற மனோநிலையிலுமாய் இருக்கும் போதுதான் அந்த வழியாக வீட்டை அண்ணாந்து பார்த்தவாறேசென்ற பக்கத்துத்தெரு பெண் ஒருவர் ரொம்ப நேரம் பேசிவிட்டு செல்லும் போது கூறினார்.

வீட்டுக்குள்ளவேலைக்குஆட்களவுடும்போதுயாருஎன்னன்னு பாத்துவுடனு
-ம்க்கா,நம்ம என்னத்தக்கண்டோம் என்ன ஜாதி ஆட்களோ என்னன்னு,என/

அவர் போன பிறகுதான் நினைக்கிறேன் புதுக்கோலம் பூண்டிருந்த வீட்டை அண்ணாந்து பார்த்தவாறு/

வீட்டிற்கு பெயிண்ட் அடிக்காமலேயே விட்டிருக்கலாம் எனவும், இந்தமாதிரி புகழின் மயக்கத்திலுமாய் இருந்திருக்க வேண்டாம் என/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் தான் தெரிகிறது...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

ஹேமா said...

அதிகமான வண்ணங்கள் கண்ணைக் கெடுக்கத்தான் செய்யும்.வெள்ளை எப்போதும் அழகு !

vimalanperali said...

அதிகப்படிகள் எப்போதுமே ஆபத்தானவைகளே,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/