18 Oct 2012

ரயில் பூச்சி,,,,,1


இரண்டு நிமிடத்திற்கும் குறைவான

நேரத்தில் வரையப்பட்டிருந்த

கோலம் பார்க்க நன்றாகவே இருக்கிறது.

நான்கு திசைகளிலுமாய் விரிந்து

பூத்திருந்த பூக்களும் அதன்

மத்தியிலுமாகவும்,ஊடாகவும்,

சுற்றிலுமாகவும் வீற்றிருந்த

மெல்லிய கோடுகளும்,புள்ளிகளும்

சிறு சிறு வளைவுகளுமாய்

காட்சிப்பட்ட கோலத்தைக் கடந்த

ரயில் பூச்சியொன்று

கோலம் வரையப்பட்ட நேரத்தைக்

கடந்தும் அங்கேயே சுற்றிக்கொண்டும்,

ஊர்ந்து கொண்டுமாய் என் மனதைப் போல/

7 comments:

Yaathoramani.blogspot.com said...

கடைசி ஒரு வரி
படைப்பை உச்சத்துக்கு கொண்டுசெல்கிறது
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

vimalanperali said...

வணக்கம் ராமலக்ஷ்மி மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை வரிகள்... படமும்... உங்கள் மனதைப் போல...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

arasan said...

உணர்வுப்பூர்வ கவிதைங்க சார் .. என் வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் அரசன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/