11 Oct 2012

பயணம்,,,,,,,,,



                    போஸ்ட் ஆபீஸ் வாசலில்
குரைத்துக்கொண்டிருக்கிற

நாய்களிரண்டு.

எதிர்புறம் பெட்ரோல் பங்கில் சிரித்த

நியான் விளக்கின் மங்கிய வெளிச்சம்.

கைவீசி நடந்த பாதசாரிகள்,

மிதி வண்டிகளிலும்,

இரு சக்கர வாகனங்களிலுமாய்

தன்னை பொதித்துக்கொண்டு

சென்ற மனிதர்கள்.

பேருந்துக்காய் காத்துக்

கொண்டு நின்றவர்களையும்

சாலையோரத்து பேருந்து நிறுத்தத்தையும்

கனரக மற்றும் இலகு ரக வாகனங்களின்

ஓட்டத்தையும்  கண்ணுற்றவாறு

கடந்து போய்க்கொண்டிருக்கிறேன்

மழை மிகுந்த இருட்டான சாலையில்/

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

யதாத்தமான வரிகள்...

vimalanperali said...

வனக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/