26 Nov 2012

மறுபடியும்,மறுபடியுமாய்,,,,


நாய்கள் பெருத்த வீதிகளாக
உருமாறி காட்சிப்படுகிறது ஊர்.
வீட்டு மாடியில் ஒன்று,
பூட்டப்பட்டிருந்த கேட்டின்
அருகாமையாய் ஒன்று என
உருவம் காட்டி நின்று கொண்டிருந்த
நாய்களைப் பார்த்ததும்
தெருவில் கூட்டமாய் ஓடியவைகள்
சற்றே நிதானித்தும் அந்த வீட்டைச்
சுற்றிலுமாய் வட்டமிட்டுக்கொண்டு/
கருநிறத்தில் முடிகள் அடர்ந்து
வெள்ளை நிற வால் வைத்த நாய்
தன் பணி இரை தேடுவதும்,
பிற நாய்களுடன் சேர்ந்து சுற்றுவதுதான்
என்பதாய் சொல்கிறது.
செந்நிறத்தில் நாக்கை தொங்க விட்டுத்
திரிந்த நாய் வெள்ளை நாயின்
உடல் உரசிக்கொண்டு/
சாம்பல் நிறத்திலும்,கருஞ்சாந்து கலரிலுமாய்
ஓடித்திரிந்தவை வீட்டின் சுவர் உரசி
முகர்ந்து திரிந்தவாறும்,போக்குக்காட்டி ஓடியவாறும்/
அடைபட்டுக்கிடக்கிற இரண்டும்
சுற்றித்திரிந்த நாய்களின் சுதந்திரத்தை
பெற வேண்டியும்,அதை தெரிந்து
ஏற்றுகொள்ள வேண்டியுமாய்
ஆசைப்பட்டு பேச அவைகளை
அருகில் அழைக்கின்றன.
இதைப்பார்த்து விட்ட வீட்டுக்காரர்
அவரிலும் வளர்ந்த குச்சியொன்றை
எடுத்து வீட்டைச்சுற்றித்திரிந்த
நாய்களை விரட்டுகிறார்.
பறி போனதன் சுதந்திரம்வீதியில் கிடக்க
சோகம் கப்பிய கண்களுடன்
கேட்டில் கட்டப்பட்டிருந்த நாய்
இழுத்துச்செல்லப்படுகிறது வீட்டினுள்ளாய்
மறுபடியும்,மறுபடியுமாய்/

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படமும் வரியும் அருமை...

வீட்டுக்காரரை ஒரு கடி கடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது...

vimalanperali said...

வீட்டுக்காரை கடிக்காதவரை நாய்கள் நல்லவையாகவே இங்கு/நாய்களுக்கு மட்டும்தானா இது என ஒருபக்கம் தோனாமலும் இல்லை.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Admin said...

//சோகம் கப்பிய கண்களுடன்
கேட்டில் கட்டப்பட்டிருந்த நாய்
இழுத்துச்செல்லப்படுகிறது//

நிறைய இப்படி பார்த்ததுண்டு..

வலையுகம் said...

மிக அருமையான கவிதை
வாழ்த்துகள்

ஆத்மா said...

அழகான கவிதை பாரத்யின் கவிதைகளில் ஒன்றை ஞாபகப்படுத்தியது

vimalanperali said...

வணக்கம் மதுமதிசார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வனக்கம் ஹைதர் அலி சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சிட்டுக்குருவின் ஆத்மா சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

வேல்முருகன் said...

நாய்க்கு எப்படியோ தெருவில் நடக்கும் மனிதர்களுக்கு மகிழ்ச்சிதான். தெருநாய்களை பார்த்து பயப்படவேண்டியுள்ளது.

கவிதை வானம் said...

நண்பரே தங்களின் இந்த சிறந்தப் பதிவு லிங்க் நன்றியுடன் எனது வலைபூவில்...http://parithimuthurasan.blogspot.in/2012/11/puthuagaraathi.html