30 Nov 2012

புகைவெளி,,,,,


                            
கண்ட கனா எதுவாகவாயினும் இருந்துவிட்டுப் போகட்டும்.அது பலிக்குமா அல்லது நிஜமாகி உருத்தரித்து நிற்குமா என்பதே இந்நேரத்தின் முக்கிய கேள்வியாக/

எங்கிருந்துவந்தான்எனத்தெரியவில்லை.எழுந்து வருகிறான்தூக்கத்திலிருந்துவிழித்தவனாக/

நீண்ட வீதி எதிரும்புதிருமாய் அடுக்கப்பட்டிருந்த வீடுகள்நடமாடிய மனிதர்கள் இன்னும் வீதிகளில் நின்ற மின் கம்பங்களில்  கண்விழித்துக் கொண்டிருந்த மின் விளக்குபறந்து
கொண்டிருந்த விட்டில் பூச்சிகளும்,நிறைய கொசுக்களும்.

வீதி,விளக்கு,விட்டில் பூச்சி,கொசுக்கள்,மனிதர்கள்,,,எல்லாம் தாண்டிடீக்கடைஏதாவது தட்டுப்
படுகிறதா கண்களுக்கு என்கிற ஆவல் மிக விழிகளை கழட்டி அனுப்புகிறான்.தகவல் 
சேகரித்து வரச்சொல்லி/

சென்ற விழிகள் சடுதியில் திரும்பி வந்து இதோ பக்கத்தில்தான் இரண்டு டீக்கடைகள் அருகருகாமையாக அமர்ந்திருக்கின்றன,அதில் தொந்தி பெருத்த மாஸ்டர் ஒருவரும் ஒல்லியாய் கை நரம்புகள் புடைத்துத்தெரியஇன்னொருவரும்டீஆற்றிக்கொண்டிருக்கிறார்கள் பிஸியாக.டீயின் ருசியையும்,விலையையும் பற்றி தகவல் இல்லை.ஆனால்முதலாவதுகடையில் 
நன்றாகயிருக்கிறது டீ என அங்கு டீக்குடித்துக்கொண்டிருந்தவர்களின்பேச்சிலிருந்துஅறிந்து 
கொண்டேன்,வாருங்கள் போகலாம் எனச்சொன்னதகவலைகைபிடித்துஒன்றாய்,இரண்டாய்க் 
கூட அல்ல,நான்கைந்தாய் எட்டெடுத்து வைத்த எட்டின் வேகத்துடன் சென்று கடையின் வாசல் மிதிக்கிறான்.

இரண்டுமேடீக்கடைகள்தான்.அதென்னது எனதெரியவில்லை.அளவெடுத்தும்,கத்தரித்துமாய்
வெட்டி ஒட்டியது போல ஒரே மாதிரியாய்/

அதற்காககடையின் தோற்றமும்அங்கிருந்தபொருட்களும்கூடஒன்றாகவாஇருக்கவேண்டும்?
இரண்டு கடைகளிலும் இருந்த டீ மாஸ்டர்களின் உருவஒற்றுமைதவிர்த்துவேறோன்றுமில்லை
பெரிதாக/

அங்கேயும் பாய்லர்,இங்கேயும் பாய்லர். அங்கே  அடுப்பு மீதிருந்த பால்ச்சட்டியின் நிறமும்,
இங்கேயிருந்த பால்ச்சட்டியின் நிறமும் அளவும் அடுப்பும்ஒரேமாதிரியாய்/(சட்டியினுள்
ருந்த பாலின் அளவு தெரியவில்லை)அங்கே கிடைத்த சிகரெட்,பீடிகள் இங்கேயும் கிடைத்தன. “சுருட்டுக்கள் விற்பது இல்லை இங்கே என இரண்டு கடை வாசலிலுமாய் எழுதி ஒட்டியிருந்தார்கள்.அந்தப் பேப்பர் பனியில் நனைந்து ஈரம் பாரித்திருந்தது
பாட்டிலுக்குள் இருந்த லை மிட்டாய்கோகோ மிட்டாய்மற்றும் இன்னபிறவைகளுடன்
வாழைப்பழத்தார்களுமாய் தொங்கித் தெரிந்தன கடைகள் இரண்டிலுமாய்/

வாழைபழத்தாருக்குப்பின்னால்சிரித்தகடைஓனரின்சிரிப்பு ஒருகிலோ மீட்டருக்கு மேலாகவும் கேட்கும்போல/முதலாமவருக்குசற்றும்இளைப்பில்லாததாய்இரண்டாமவரின்சிரிப்பும் பேச்சும்/

முதலில்ஒருகடையைஅந்தஇடத்தில் பதியனிட்டு விட்டு அதைஅப்படியே ஜெராக்ஸ் எடுத்து பக்கத்தில் ஊன்றி வைத்திருப்பார்களோ?முதல் கடையில் குடித்த டீக்கும்,வாங்கிய 
வடைக்குமாய் இரண்டாவது கடையில்  காசு கொடுக்காமல் இருந்தால் சரி.

முதலில் முகம்கழுவி ஒருடம்ளர்தண்ணீர்குடிக்கவேண்டும்ஜில்லென/குளிரானாலும்
பரவாயில்லை என்கிற நினைப்புடன் முதலாவதுகடையின்வாசலிலிருந்துபிளாஸ்டிக்குடத்தில் 
ஒரு டம்ளர் தண்ணீர் மோந்து கொண்டு ஒரு ஓரமாய் செல்கிறான் முகம் கழுவுவதற்கு/

டீக்கடை,கடைகளின் வெளியில் போடப்பட்டிருந்த பெஞ்ச்,அதில் அந்த நேரத்திலும்நிறைந்து 
அமர்ந்திருந்த மனிதர்கள்,அவர்களை சற்றே கடந்த போது கடைகளின் முன்பாய் நின்ற ஆலமரம் அதன் மேட்டில் அமர்ந்து இன்னமும் தூக்கம் கலையாமல் இருந்த மனிதர்கள் என இவர்களைத்தாண்டிகையில்பிடித்திருந்ததண்ணீர் டம்ளருடன் நகர்ந்து அவன் போன ஓரம் பழுதடைந்து நின்ற கோட்டைச்சுவராய் காட்சி தருகிறது.

கோட்டைச்சுவரின் ஓரம் ஈரம் பாரித்தும்  கழுதைகள் நான்கைந்து மேய்ந்து கொண்டுமாய்/
அந்நேரம் அந்தக்குளிரில் அவைகளுக்கு என்ன கிடைத்துவிடும்மேய்ச்சலுக்குஎன்கிறகேள்வி
 மிக  முகம் கழுவலாம் என ஓரிடம் நோக்கி குனிந்த போது அங்கோர் கழுதை முளைத்து
 காட்சிப்படுகிறது. “சரி எதற்கு கழுத வம்பு” என இன்னோர் இடம் நோக்கி நகர்ந்த போது அங்கேயும் அது புதிதாய்/

இப்படிமாறி,மாறிஆகிப்போனநான்கைந்துஇடங்களைத்தாண்டியபொழுதுவிடாமல் பிடிவாத
மாய்அவன்முன்தோன்றியகழுதைகளில்ஒன்றைஎட்டிஉதைக்கிறான்ஜாக்கிரதையாய் ஒதுங்கி நின்றவாறு/

பதிலுக்கு அதுவும் எட்டி உதைத்த உதைக்கு இவன் விலகிய போது கையிலிருந்த டம்ளரில்
இருந்துநீர்சிதறி விடுகிறது.மிச்சமிருகிற நீரில் அரைகுறையாக முகம் கழுவி விட்டும்,மீண்டும்,
மீண்டுமாய் கழுதைகள் தோன்றாதஇடமாய் பார்த்து ஒண்ணுக்கு இருந்துவிட்டு டீக்கடை 
நோக்கி வருகிறான்.ஜில்லென ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு சாவகாசமாய் அமர்ந்து ஒரு டீ சாப்பிட வேண்டும்.  

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எனக்கும் இப்போது டீ சாப்பிட வேண்டும் போல் உள்ளது...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நலம்தானே?டீ சாப்பிடலாம்,
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

பாலா said...

// விழிகளை கழட்டி அனுப்புகிறான்.தகவல்
சேகரித்து வரச்சொல்லி

மிகவும் கவர்ந்த வரிகள். வித்தியாசமாக இருந்தன சார்.

Unknown said...


செய்தி சாதாரண நிகழ்வு என்றாலும் தொடர்ந்து படிக்கத் தூண்டும் நடை!

vimalanperali said...

வணக்கம் பாலா சார்,நலம்தானே?
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ராமனுநுசம் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/