9 Feb 2013

அலைவரிசை,,,,







      கூப்பிடவில்லை,மனதிற்குள்ளாய்
நினைத்துக்கொண்டேன்.அவ்வளவே/ 
அது எப்படி உன் செவியை எட்டியது 
எப்படி தெரியவில்லை. 
நினைக்கிறவைகளை எல்லாம் 
உணர்ந்து கொள்கிற சக்தி 
புலன்களுக்கு வந்து விட்டதா என்ன? 
கை,கால்,முகம் என உடல் முழுவதும் 
நனைத்த தண்ணீர் நடு வயிற்றை 
நனைக்கையில் சோப் கைக்கு வருகிறது. 
இடதும், வலதுமாய் மாறி மாறி 
கைகளில்  பயணித்த சோப்   
உடல் முழுவதையும் தேய்த்த பொழுதுதான் 
என் மனைவியின் குரல் வருகிறது, 
என்ன கூப்பிட்டீர்களா? என. 
இல்லை கூப்பிடவில்லை, 
மனதினுள்ளாக நினைத்துக் 
கொண்டிருந்தேன் அவ்வளவே/ 
அது எப்படி உனக்கு எப்படி கேட்டது.  
நேரம் இருக்கையில் பதிலளி அன்பே/   

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்தளவு தெரிந்து வைத்துள்ளார்கள்...!

படம் சூப்பர்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாய்/

ezhil said...

அதுதான் உண்மையான உறவின் உன்னதம் விமலன் சார்

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும்/

வேல்முருகன் said...

அருமையான கவிதை