17 Mar 2013

செஞ்சரளி,,,,,,,


செல்கிற வழி வேறெதுமாக அல்லாமல் வடக்குவெளிவீதியாகவேஇருந்தது. கட்டம் கட்டிய சதுர சிமெண்ட் பலகைகளும்சீராகப் பூசிய வழவழப்பான சிமிண்ட் சாலையும் பார்க்க நன்றாக இருந்தது.

அந்த ஊரின் பெரும்பான்மையினரும், பெருந்தனக்காரர்களும்வசித்தவீதிகளை கடந்து கீறிச் சென்ற சாலையது.

இதேபோலவேஅச்சுஅசலாகT K R ரோட்டில் இருக்கிற வீடுகளைக்காணலாம் அங்கு  பெரிது  பெரிதாய் உருவம் காட்டியும்,தனது ஆகுருதி காட்டியுமாய்/

பெரும்பான்மைவீடுகள்பச்சைக்கலர்பூசியும்காகிதபூமரங்களைவாசல்முன்சுமந்துமாய்காட்சியளிக்கும். ஒரே ஒரு வீட்டில் மட்டும் காகித பூ மரத்தின் மீது ரோஸ்க்கலர் பூக்கள்சுமந்தமரம் ஒன்று பற்றிப்படர்ந்துதொங்கும்.அதன்பெயர்தெரியவில்லை, இப்போ தைக்கு   ரோஸ் மரம் என வைத்துக்கொள்ளலாம்.

அந்த மரத்தைப்பார்த்தவாறு அந்த வழியாக போகும் போதெல்லாம் ஒன்று சைக்கிளின் வேகம்மட்டுப்பட்டுவிடுகிறதுஅல்லது இவனாகசைக்கிளைவிட்டுகீழிறங்கிஉருட்ட ஆரம்பித்து விடுவான்.அவ்வளவுஒருஈர்ப்பு இருந்தது அந்தச் செடிகளின் மீதும் பூக்களின் மீதுமாய்/ அந்த ஈர்ப்பு செடியுடனும் பூக்களுடனும்மட்டுமே நின்றுபோகிறது  வீட்டுக்காரர்கள் மீது அல்ல.
அவர்களைஒருமுறைகூட பார்த்ததில்லை. வளைத்துக் கட்டப்பட்டிருக்கிற காம்பவுண்டுக்குள் இருந்தசெடிகளைஇப்போதெல்லாம்பார்க்கமுடிவதில்லை.வெட்டிஅகற்றிவிட்டார்கள் போலும்.

காகிதபூமரங்களையும்,முல்லைக்கொடிகளையும்,இதுமாதிரிபெயர்தெரியாதரோஸ்ச்செடிகளையும்  சுமந்து நின்ற வீடுகளின் முன்முற்றங்களும்வாசல்களும்இப்போதுவெற்று வெளி காட்டிச்  சிரிப்பவையாக/

இவன்சொல்வதுபத்துவருடங்களுக்குமுன்பாக.அப்படியொருபாதிப்பையும்தோற்றத்தையும் ஏற்படுத்திய வீதியாக இருந்த வடக்கு வெளி வீதியில் மரங்களை நட்டால் எப்படி யிருக்கும்?நட முடியாது அதுதான் சாக்கடை ஓடுகிறதே வடக்குவெளி வீதியின்  இரண்டு  பக்கமும் தன் திறந்த மேனி காட்டி/

நேற்றுக்கூடப் பார்த்தான்.கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரியின் காம்பவுண்ட் சுவருக்கு வெளியே நீண்டிருந்த மரக்கிளைகளையெல்லாம் வெட்டி இருந்தார்கள்.தனது கைகளை நீட்டியது போல் கிளைகளைநீட்டித்தெரிந்தபோது இருந்த அழகு அதை வெட்டிய பின்பு காணாமல் போனது.வெட்டப்பட்டவையெல்லாம் 50வருட வாழ்நாள்சரித்திரம் தாங்கியமரங்கள்வெட்டுப் பட்ட இடமும் அதில்நீட்டித்தெரிந்தமரச்செதில்களும்ரத்தம் கசிந்தது  போலவும் வெட்டுப் பட்டகிளைகள் கீழேதரையில் கிடந்து உயிர்துடித்துக் கிடப்பது போலவுமாய் காட்சிப்பட்டுத் தெரிகிறது.அதிகாலை வேளையில் கீச்,கீச்சென கத்தித் திரியும் குருவிகளும்அடையும்  பறவைகளும்இன்னும்பிறசின்னச்சின்ன ஜீவராசிகளும்இனி எந்தக்கிளைதேடி அலையுமோபறவைகளின் சப்தம் நிறைந்த இளம் காலைகள் இனி வெட்டப்பட்டக்கிளைகளைத்தேடி அலையுமோ?வெட்டியஅரிவாளும்வெட்டுப்பட்டமரங்களும்பேசிக்கொண்டமௌன மொழிகள்  இப்படித்தான் ரத்தம் பூசி நின்றதா எனத்தெரியவில்லை.

வழக்கத்திற்கு மாறாக இன்று அலுவலகம் விட்டு சீக்கிரம் வந்து விடுகிறான். 5.00 மணிக் கெல்லாம் வந்தவன் 5.30 க்கெல்லாம் வீடு வந்து விட்டான்.இவன் வந்த போது மனைவி வீட்டில் இல்லைஎங்காவதுகடைக்குப்போயிருப்பாள்ஒரு துணிபையையும்,கையகல பர்சையும்   வைத்துக்  கொண்டு கடைக்குகிளம்பி விடுவாள்.

அதுஒருமனது.மெனக்கெட்டு,மெனக்கெட்டு,தேடித்தேடிநுணுகி,நுணுகி,விசாரித்து விசாரித்து எதையும்பார்தாய்ந்து வாங்கிற நல்மனதுஅரை கிலோ கறிவாங்க நாலு கடையாவது ஏறி இறங்குவாள் எனப்பெயர் அவளுக்கு அந்த வீதியில்எதையும் நல்லதாகவே வாங்க வேண்டும்கூடுமானவரைஎன்கிறமுன்முனைப்பு உண்டு அவளுள்  காய்கறிவாங்குவதி லிருந்துசேலைதுணிமணி வாங்குவது வரை அப்படித்தான் அவளது இயல்பாய் இருந்தது.

ஆனால் போன மாதம் எடுத்த சேலைதான் கொஞ்சம் பிசகாய் எடுத்து விட்டாள்.1500ரூபாய்க்கு மதிப்புப்பெறாத்சேலையும் அவளதுமேனி நிறத்திற்கு ஒத்துவராத கலரிலுமாய் எடுத்து வந்திருந்தாள்.இவன்தான் வேண்டாம் எனச்சொல்லிதிரும்பக் கொடுத்து வரச்சொன்னான்கடைக்காரர்கூடக்கேட்டார்இவனிடம் பின்னொரு நாளில்.புடவையின் விலை  அதிகம் என ரிட்டர்ன்கொடுத்து விட்டீர்களாஎனஅதற்கு ஒருவாறாய் சிரித்துச் சமாளித்தான்ஒரு வேளை இவனது உள் மன கிடக்கையை பிரதிபலித்துவிட்டாரோ/

கடையில்பார்ச்சலாய்வாங்கியவடைகள்ஆறுவாசம்வீசியும்தன்இருப்புக் காட்டியுமாய் தோள்ப் பைக்குள் அடங்கிக் கிடந்தது.மூடிய ஜிப்பின்பொடிப்பற்கள்வழியேகசிந்து வந்து காற்றோடு கைகோர்த்து நாசியை துளைத்த நேரம் மகனிடமிருந்து ப்ளாஸ்டிக் கப்பில் தண்ணீர் வாங்கி கால் கழுவுகிறான்.வீட்டிற்கு வெளியே வாசலில் வைத்து இவன் கால் கழுவுகிற அழகையும் (?) நல்லதனத்தையும் பார்த்த மகன் ” இன்னோரு கப்பு தண்ணி தர்ரேன்கூடவே சேத்து மூஞ்சியவும்  கழுவீட்டு வாங்க” என்றான்.

எட்டாம்வகுப்புப்படிக்கிறான்.ஒல்லியாய்வளர்ந்துநிற்கிறஒடிசலானஉடலுக்குச்சொந்தக்காரன்சாப்பாட்டிற்கு காய்கறிகாய்கறிக்கு சாப்பாடு என எதுவும் ஆகாது அவனுக்குஸ்ஸ்ஸ்ஸ்,,,,மூச்,தூரப்போய்விடுங்கள்என்று விடுவான்.பின் உடம்பு எப்படியிருக்கும்  என எண்ணத்தோணுகிறது அவனைப்பார்க்கிற கணங்கள் தோறுமாய்/ஆனால் அந்த அளவுக்குப் பரவாயில்லை. ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ், ரசனை எக்ஸட்ரா,எக்ஸட்ராஎனத் ததும்பிக் காணப் படுகிற ரசவா தியாய்/   வீட்டில் ஏதாவது ஒரு பொருள் ரிப்பேர் ஆகிப்போனால் அதை கழட்டி மாட்டுவ திலிருந்து E S P N லும் ஸ்டார்ஸ்போர்ட்ஸிலும் விளையாட்டுகளை விரும்பிப் பார்பவனாய். என்ன முன்பு சிறுவயதில் இருந்த ஒரு தேடல் இப்போது மிஸ்ஸிங்/ பள்ளிகளும், படிப்பும்  அதை சரியாக புள்ளி பிசகாமல் செய்து விடுகிறது போலும்/ ஒன்றே  ஒன்றை மட்டும் இவன்  சொன்னான் மகனிடம்,”ஒடிந்த கைஉனக்கு பார்த்து  விளையாடுகேம்ஸ் பீரியடில் அதிகம் ரிஸ்க் எடுத்துக்கொள்ளாதே” என/

பாய் கடையில் வாங்கிய வடையதுதியாகு மாஸ்டர்தான் வடை கட்டிக் கொடுத்தார். எப்போது போனாலும் சரிஅந்தக்கடைக்குஅவர்தான்இவனுக்குவடைகட்டி கொடுப்பதுஅது தற்செயல் ஒற்றுமையா அல்லதுதிட்டமிட்ட நிகழ்வாதெரியவில்லைஎதுவானாலும்  இப்படி ஏற்படுவது அபூர்வமே/தினசரி அல்ல வாரத்தின் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஏற்படுகிற இந்தநிகழ்வு இவனைஅவரிடம் ஈர்ப்பு ஏற்படச் செய்து விடுகிறதுண்டு அந்தக் கணங்களில்/

நேற்றைக்கு முன்தினம் அவரைப்பார்த்தபோது அவர் கேட்ட ரூபாயைக் கொடுக்க மறந்து  போனான்.எப்போதாவதுஒருமுறை கைமாத்தாக்க்கேட்பார். அதுகைமாத்தா அல்லது திரும்பிக் கொடுக்காமையா?,இவனும்அதைஎதிர்பார்த்துதருவதில்லை,அவரும்அப்படிதிருப்பிக் கொடுக் கவில்லை என வருத்தப்பட்டதாயும் தெரியவில்லை.

அவருக்குஒரு மகள்உண்டு.இரண்டாவதுபெண்.முதலாவதாய்பையன்.பெண் வேண்டும்  என பிரயாசைப்பட்ட சமயத்தில் பிறந்தவள்.ஆகவே மிகவும் செல்லமாக வளர்த்தார்அவளுக்கு தான் காய்ச்சல் என பெட்டில் சேர்த்திருப்பதாகஒரு நாள் மாலையில் கடைக்கு  டீக்குடிக்க போயிருந்தநேரம்மிகவும் தயங்கித் தயங்கி 200ரூபாய் கிடைக்குமாஎனக்கேட்டார்எப்போழுதும் அப்படிக்கேட்பவரில்லை.தீபாவளி,பொங்கல் ஏதாவதுபண்டிகை நாட்களில் முன்னறிவிப்புஏதும் இன்றி  என்னண்னேஎன்பார்,நாமாக புரிந்து கொள்ள வேண்டும்அவ்வளவேஅப்படி ஏதும் சமிக்சை காட்டாமல் ஒரு சின்ன முன்னறிவிப்பு கூட ஏதும் இல்லாமல் இப்படிவந்து நின்ற போது ஆச்சரியமாக இருந்தது.

அவரை அனுப்பிவிட்டு பழங்களும்ஹார்லிக்ஸ்பாட்டிலுமாகபோய்ஆஸ்பத்திரியில் போய் நின்ற போது நைந்த துணியாய்க்கிடந்தாள்அவரது மகள்.நர்ஸைப்பார்த்துவிபரம்  கேட்ட போது ஒருவாரம் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டி வரும் ,சத்தில்லாத உடல்,சட்டென நோய் வந்து தொற்றிக்கொள்கிறது.என்றாள்.அவள் உடல்தேறிவருவதற்குமுன் இரண்டு  முறைபோய் பார்த்து விட்டுவந்தான்.12 வயதுஇருக்கலாம் அவளுக்கு. ஆனால் பார்ப்பதற்கு ஏழு வயது பெண் போலகாட்சியளித்தாள்அவ்வளவு பூஞ்சை உடல்இவனுக்குக்  கூட ஆசை மிகுந்த ஒரு எண்ணம்கல்யாணம் செய்தால் இந்த மாதிரி ஒருபெண்ணைத்தான்கட்டிக்கொள்ள வேண்டும்  எனஅன்று துளிர்விட்ட எண்ணம் திருமண நாள்வரை மட்டுப்பாடாமல் இவனுள்/

அந்தக்கடையில் அவரேதான் டீ மாஸ்டராயும் வடை போடுகிறவராயும்.மாஸ்டர்கள் பெருத்துப் போன தேசத்தில் இவரும் ஒரு மாஸ்டராய் தன் பணியை செவ்வனே செய்த வாறும் காலம் தள்ளியவாறுமாய்/கல்லாவிலிருந்து காசு எடுத்துப்பொய் சரக்கு வாங்கி வருவதிலிருந்து வெங்காயம் நறுக்கி பச்சைமிளகாய் அருவி,கறி வேப்பிலை மல்லி இலைகளை கிள்ளியும்உருவிப்போட்டு  மாவு பிசைந்து அடுப்பு மூட்டி வடையும்பஜ்ஜியுமாய் எண்ணெய் மிதக்கிற சட்டியிலிருந்து அரித்து எடுப்பவர் அவரேயாகிப் போகிறார். மந்திரமும்,மாற்றுருவும் யாரும் சொல்லாமலும், பிசைந்து ருவாக்காமலும் தானாய் உருவாகிப்போன அல்லது மாற்றுருவான ஒரு காட்சி ஊடகமாய் பிரிகிற பொழுதில் இவனது இருப்பு அங்கு நிலை கொண்டிருந்தது.

அலுவலக பணி நிமித்தமாய் போய் வருகையில் அலுவலகத்தில் இளம் பெண் ஒருவள் தனது செல்போனில்சத்தமில்லாமல்பாடல்கேட்டுக்கொண்டிருந்தாள்.எல்லாம் மென்மை ததும்புற காதல் பாடல்களாகவே இருந்தன.அது சரி அந்த வயதில் அதுதானே பாடு பொருளாய் இருக்கிறது.

கழுவிய காலின் ஈரமும் முகத்தில் வழிந்த நேர்கோடுகளும் கைகோர்த வேளையில் பஜாருக்கு போய்வரலாம்என்கிறநினைப்புமேலோங்ககிளம்பி விடுகிறான்,

பஜார்ப்பக்கம் சென்று ஒரு மாதத்திற்கு மேலிருக்கலாம்.இப்படியே விட்டால் பஜாரின் முகம் மறந்து விடக்கூடும்.தேன்கனிஸ்டோர்ஜவுளிக்கடைஇரண்டுக்குமாய்போய் விட்டு அப்படியே டெலிபோன்பில்லையும்கட்டிவிட்டுவரலாம்என்கிறநினைப்பில்பஜார்ப்பக்கம்சென்று விட்டான் தனதுஇருசக்கரவாகனத்தில்/

ஒர்க் ஷாப்க்காரர் இன்மேல் இது போல அடிக்கடி ரிப்பேர்வரத்தான்செய்யும்,வாங்கி ஐந்து வருடங்களுக்கு மேலாகிப்போனதில்லையா,பேசாமல் புதிதாய் பெரியவண்டிவாங்கி விடுங்கள் அதுதான் நல்லது என்றார்.

முன்பெல்லாம்  இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பஜார்ப்பக்கம் சென்று வருவான். இப்போதெல்லாம் அப்படி முடியவில்லை,ரயில்வே கேட் அடைப்பில் நின்ற போது கையேந்திய முதியவளைப்பார்க்கையில் மனம் பிசைகிறது.அருகில் நின்ற டவுன் பஸ்ஸிலிருந்து வந்த பாடல் மனம் கவ்வ ரசிக்க முடியாமல் போகிறது.

டெலிபோன் பில் கட்டப்போகையில் அங்கு ஒருவர் மட்டுமே இருந்தார்.சென்ற மாதமோ அல்லது இரண்டு மாதங்களுக்குமுன்பாகவோசென்றபோதுஅங்குவேலைபார்த்த பெண் வருத்தப்பட்டதுஅவனுக்குநினைவுக்குவந்ததுசார்நீங்கபில்லுகட்டவந்தீங்கன்னு தெரியுமா, இல்ல கையில கத்தியோட வந்தீங்கன்னு தெரியுமாஎன்றார். அவளது பேச்சி லிருந்த உள் ஞாயத்தை உணர முடியாமல் இல்லை.ஒற்றைஆள், தனிமைச் சூழல், கடந்துவிட்டமாலை நேரம், இருட்டிவருகிற பொழுது இன்னும்,இன்னமுமான பணிச் சூழலும்  கூட  அவளை இப்படி பேச வைத்து விடுகிறது.

பில் கட்டி விட்டு வெளியே வருகையில் தெரிந்த பணியாள் புன்னகைத்தார். இவனும் பதிலுக்கு ஸ்னேகமாய் சிரித்து விட்டு நகன்றான் நல்லாயிருக்கீங்களா என்கிற வார்த்தை யுடன்/

தேன்கனி ஸ்டோரில் நின்றபோது போன் பண்ணிய மனைவி வாங்க வேண்டிய பொருட்களைஞாபகப்படுத்தினாள்.கூடவேநாலாம்வீட்டுப்பாட்டிக்குஹார்லிக்ஸ்பாட்டில் வாங்கிக் கொள்ளச் சொல்லிச்சொன்னாள்.பிள்ளைகளற்றமுதியதம்பதிகள், சிரமத்தை  மடியில் கட்டிக்கொண்டு தனிமையில் வாழ்பவர்கள்.

அவர்களது ஞாபகத்துடனும் நினைவுடனுமாய் மனைவி சொன்ன பொருள்களையும், கூடவே ஹார்லிக்ஸையும் வாங்கிக்கொண்டு கிளம்பும் போது இவன் சென்ற பாதை  வேறாக அல்லாமல் வடக்கு வெளி வீதியாகவே இருந்தது.

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஊரின் சூழ்நிலையை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்...

உஷா அன்பரசு said...

எழுத்துக்களால் காட்சியை உயிர்ப்பிக்க செய்து விடுகிறீர்கள்..!

ரிஷபன் said...

கழுவிய காலின் ஈரமும் முகத்தில் வழிந்த நேர்கோடுகளும் கைகோர்த வேளையில் பஜாருக்கு போய்வரலாம்என்கிறநினைப்புமேலோங்ககிளம்பி விடுகிறான்,


Just enjoyed the narration.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

யதார்த்த வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியது போல் இருந்தது.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் டீ.என் முரளிதரன் சார்.
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரிஷபன் சார்,நன்றி தங்கைன் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு அவர்களே.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

இளமதி said...

வணக்கம் சகோதரரே!
இன்றுதான் இங்கு வந்தேன்.

நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை!அப்படியே காட்சியை கண்ணுக்குள் கொண்டுவருகிரீர்கள்.
யதார்த்தத்தை மிக அழகாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

காட்சிகளைப் பேச வைக்கும் அழகிய எழுத்து...

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களே/நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சே.குமார் அவர்களே,
நன்றி தங்களின் வருக்கைகும்,
கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

எழுத்துக்கள் காட்சிகளாய் விரிகின்றன. நன்றி

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயகுமார் சார்.
நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துரைக்குமாக/