7 Apr 2013

டக்டகா,,,,,,


சொல்லாமல் கொள்ளாமல் மின்சாரம்  தன் கண்களை இறுக மூடிக்கொண்ட நேரம் இரவு மணி ஒன்பது. 

ஒன்பது மணிக்கு ஒரு நிமிடம் முன்னும் இல்லை,பின்னும் இல்லை.இனி பத்து மணிக்குத் தான் வரும்.இரு மணிநேரம் என்னசெய்யவேறுஎந்தவேலைகளையும் செய்ய முடியாதே? 

நண்பர்களிடமும்,தோழர்களிடமும்மனம்விட்டுபேசுவதைதவிர்த்துஉறவுகளிடமும்  பேசக்கூடாது என இல்லை.ஆனால் பின்னதை விட முன்னதற்கே முக்கியத்துவம் தந்து பழகிப்போனான். 

சொந்தங்களின் வீட்டுத்திருமணம், சடங்கு நிச்சயதார்த்தம் ஒரு விசேச வீடு என்றுமாய் கலந்து கொள்கிறதில் இல்லாத விருப்பம் நண்பர்களின் தோழர்களின்வீட்டு விசேசங்களிலுமாயும் தொழிற்சங்க வேலைகளிலுமாய் மையம் கொள்கிற மாயம் என்ன என்பார் இவனின் நண்பர் ஒருவர். 

அவர் சொன்னபடி தான்  மையம் கொண்டு விடுகிறது மனது.மனைவி அருகில் இருந்தால் மட்டுமே பிறரிடம் பேசுவதை தவிர்த்திருக்கிறான். இல்லையென்றால் ,,,,,,,,,,,,அது ஏன் என இதுவரை அவனுக்குத்தெரிந்ததில்லை.தெரிந்து கொள்ள முயற்சித்ததும்இல்லை.சீட்டுக்குலுக்கிப்போட்டதில்வரிசையாக வந்த பெயர்களில் முதலாவதாகசுழியிட்டதுதோழர்பெயரே.இரண்டாவதாயும்,மூன்றாவதாயும்நான்காவதாயும்,,,,,,,,,,,நண்பர்களின் உடன் வேலை பார்ப்பவர்களின் பெயருமாய் வந்துபளிச்சிட்டது.இதில்பிரியம் பொருத்தும், நெருக்கம் பொருத்துமாய் அமைகிற பேச்சுக்களில் விளைந்து போகிற மனிதர்களாய்நிற்பவர்களின்பெயர்களை வரிசை யாக பிடித்து  நூல் கோர்த்தாய் முதலில் தோழருக்கே போன் பண்ண நினைக்கிறேன்.

பேச்சு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே,எதைப் பற்றியும் பேசிவிட்டு த் தான் போகட்டுமே,என்ன குறைந்து போனது இப்போது? தங்கத்துரைத்தோழர் கடை டீயின் ருசியிலிருந்து உலக அரசியல் வரைபேசிகொள்ளலாமே இப்பொழுது என்ன என்கிறதான   நினைப்புடன் எண்களை அழுத்துகிறான், 

ரெடியாக இருங்கள் தோழர் பேசுகிறேன் நான்என்கிறஅசரீரியைஅவருக்குமனத் தந்தி மூலமாய் அனுப்பி விட்டு 

2 comments:

முத்தரசு said...

நண்பர்கள் உடன் நேரம் செலவு செய்வது தனி சுகம்

vimalanperali said...

வணக்கம் முத்தரசு சார்,நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/