அவர் சொன்னபடி தான் மையம் கொண்டு விடுகிறது மனது.மனைவி அருகில் இருந்தால் மட்டுமே பிறரிடம் பேசுவதை தவிர்த்திருக்கிறான்.
இல்லையென்றால் ,,,,,,,,,,,,அது ஏன் என இதுவரை அவனுக்குத்தெரிந்ததில்லை.தெரிந்து கொள்ள முயற்சித்ததும்இல்லை.சீட்டுக்குலுக்கிப்போட்டதில்வரிசையாக
வந்த பெயர்களில் முதலாவதாகசுழியிட்டதுதோழர்பெயரே.இரண்டாவதாயும்,மூன்றாவதாயும், நான்காவதாயும்,,,,,,,,,,,நண்பர்களின் உடன் வேலை பார்ப்பவர்களின் பெயருமாய் வந்துபளிச்சிட்டது.இதில்பிரியம் பொருத்தும், நெருக்கம் பொருத்துமாய் அமைகிற
பேச்சுக்களில் விளைந்து போகிற மனிதர்களாய்நிற்பவர்களின்பெயர்களை வரிசை யாக பிடித்து
நூல் கோர்த்தாய் முதலில் தோழருக்கே போன் பண்ண
நினைக்கிறேன்.
பேச்சு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே,எதைப் பற்றியும் பேசிவிட்டு த் தான் போகட்டுமே,என்ன குறைந்து
போனது இப்போது? தங்கத்துரைத்தோழர் கடை டீயின் ருசியிலிருந்து
உலக அரசியல் வரைபேசிகொள்ளலாமே இப்பொழுது என்ன என்கிறதான நினைப்புடன் எண்களை அழுத்துகிறான்,
2 comments:
நண்பர்கள் உடன் நேரம் செலவு செய்வது தனி சுகம்
வணக்கம் முத்தரசு சார்,நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment