29 May 2013

மத்தாப்பூ,,,,,


                         
இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.மெலிதான சாரல்.மத்தாப்பூவாய் மலர்ந்தி ருக்கிற மனது.சாலையில்எதிர்ப்படுகிறஇருசக்கரவாகனமும் ,மிதரகவாகனமும், கனரகவாகனமுமாய்/
அருப்புக்கோட்டையிலிருந்து நூல்ப்பிடித்து விருதுநகர்வரைவருகிற சாலையது. கருப்பாய் நீண்டு வாலோடியாய் படுத்திருந்த சாலையின் மார் மீதுஎனது இருசக்கரவாகனத்தில்வந்துகொண்டிருக்கிறேன்.சக்தியண்ணன் கடையில் டீக் குடிக்கையில்பெரிதாய் வீசியெறிந்தசாரல் என்முகத்தில்வீசியெறிந்துதெரித்தது . ஒவ்வொருதுளியாகவும்.ஒவ்வொருமடக்காகவும்நாவின்சுவையறும்புகளில்ஊறித்திளைத்தடீசுவையூட்டிய நேரம். மழையின் துளியும் உடன் சேர்ந்து கை கோர்த்துக் கொள்ள ரோட்டின் வலது பூரமாய் பெரிதாய் கூரை வேயப்பட்டு அமர்ந்திருந்த டீக்கடை பார்க்க நன்றாகவே இருந்தது.
அந்தநன்றாக இருந்ததுக்கு மட்டுமே அல்ல டீசாப்பிடப்போவது.எப்படியோ ஏற்பட்டபழக்கத்தின்நுனிவிரிந்துபரப்பியமென்பரப்பின்மீதுஏற்பட்டபழக்கம்.3இப்போது டீயும், பஜ்ஜியுமாய் கழிகிறது.ஒரு வடைஅல்லது பஜ்ஜிடீ இரண்டு மாய்சேர்த்துஆகிப்போகிற பத்து ரூபாய்க்கு இது தேவையாஎன நினைப்பிருந்த போதும்கூடஎளிதாக விட்டு விட முடியவில்லை பழக்கத்தை.
தினசரி காலையில் அலுவலகம் செல்கிற வேலையில் ஒரு டீ,மாலையில் அலுவ லகம் விட்டு வருகையில் ஒரு டீ/என்றாவது நாக்கு நமநமக்கிற வேளைகளில் ஒரு வடை அல்லது ஒரு பஜ்ஜியுடன் உடன் சேர்த்துக் கொள்வதுண்டு.அதுவும் நன்றாகத்தான் இருந்திருக்கிறது பலசமயங்களில்.எப்போதாவது ஒருசில சமயம்ஏதோஒருமாதிரியாய்/அதுடீயின்சுவைக்குறைவாஅல்லதுடீக்குடிப்ப வரின் மனோநிலையாஎன்பது தெரிய வில்லை.
இன்று கடைக்குப்போன நேரம் மூன்று பெண்பிள்ளைகள்ஒரேமட்டத்தில்.ஒரு பஜ்ஜி  இரண்டு ரூபாய்க்கு என்றால் இரண்டு பஜ்ஜி நான்கு ரூபாய்எனகணக் கு  சொல்லிக் கொண்டிருந்தார்கள்,
பள்ளி லீவு தின சீசன்.வீதியெங்குமாய் விரிந்திருக்கிறமென்பூக்களாய் ஓடித் தெரிகிற பிள்ளைகளை தத்தெடுத்துக்கொண்டிருக்கிற டீவீக்கள் விரித்த அடர் படலத்தையும் மீறிதெருவிறங்கிவிளையாட வந்தபிள்ளைகள் போலிருக்கிறார் கள் அவர்கள்.
அவர்களைகடையும்,கடைகொண்டவடையும்,பஜ்ஜியும் தேர்ந்தெடுத்து கொண் டதுஇப்போது.ஒல்லியாய்ஜடைபோட்டவள்,பாவாடைசட்டைஅணிந்திருந்தவள், சுடிதார் போட்டிருந்தவள்,,,,,,எனஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் தனித்துக்காட்சிப்பட்டுத்தெரிந்தவர்களாய்.இவர்களைப்பார்த்தவாறும் அவர்கள து  படிப்பு,வகுப்பு,வீதி எல்லாம் தெரிந்து கொண்டவனாயும் முகத்தில் தெரித்து விழுகிற தண்ணீர்த்துளியின் ஈரத்துடனும்,ஜில்லிப்புடனுமாய் கிளம்புகிறேன்.
கிளம்பக்கிளம்ப,,போகப்போக,,,மேலேவிழுந்தஇளம்சாரல்வளுக்கவும்இல்லை.குறையவும்இல்லை.லேசாகஒவ்வொருபொட்டாய்வந்துமேல்விழுந்துகொண்டிருக்கிறது.ஒன்ற்று, இரண்டு ,மூன்று,,என பொட்டு வைத்த சொட்டுக்கள் சடசடவென வேகமெடுத்துப் பெய்கிறது.
இரண்டு நிமிட நேரத்திற்கும் குறைவான நேரம்தான்.வேகமெடுத்த சொட்டுக் கள் அடங்கி விடுகின்றன.அப்புறம் மெல்ல பழைய மாதிரியே தூறலாய் உருவெடுத்து/
ஜில்லிட்டுமுடித்தகாற்றுடன்பெய்ததூறல்துளிகள்முகத்தில்பட்டுத்தெரிக்கஇனிமை கடந்த பொழுதுடன் மென் காற்றையும் அனுபவித்தவனாய் வந்து கொண்டி ருந்தேன்.
இதுவும் நன்றாகத்தானே இருக்கிறது.மெலிதானசாரல்மத்தாப்பூவாய் மலர்ந் திருக்கிறமென்மனது,சாலையில்எதிர்படுகிறஇருசக்கரவாகனமும்,மிதரக கனரக  வாகனங்களுமாய்/

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தென்றலாக இருந்தது...

அருணா செல்வம் said...

இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது விமலன் ஐயா.

ஆத்மா said...

ரொம்ப வித்தியாசம் .
ஆனாலும் ரசிக்கலாம் :)

Yaathoramani.blogspot.com said...

இதனை ரசிப்பது கூட பெரிய விஷயமில்லை
படிப்பவர்களும் ரசிக்கும்படி கொடுப்பதுதான் சிரமம்
அதில் நீங்கள் கைதேர்ந்தவராய் இருக்கிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன் அய்யா. நன்றி

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.வீசிய தென்றல் ந்னறாக இருந்தது எனச்சொன்ன தங்களுக்கு நன்றி.

vimalanperali said...

வணக்கம் அருணா செல்வம் அவர்களே.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஆத்மா சார்.ரசிக்கலாம் என்கிறா தஙகளது கருத்தே துவக்கப்புள்ளியாக அமைந்தமைக்கு நன்றி.

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...
This comment has been removed by the author.