வருகிற வழியெங்குமாய்
தென்படுகிற டீக்கடைகள்
சுமந்து தெரிகிற மனிதர்கள்
எனது
முன்னோர்களாயும்,மூத்தவர்களாயும்,
நண்பர்களாயும்,தோழர்களாயும்,
உறவுகளாயும்
காட்சிப்பட்டுத்தெரிகிறார்கள்.
குடிக்கிற டீயின் ருசி
தெரியும் முன்னராய்
தெரிபடுகிற முகங்கள்
ஒன்றாய்,இரண்டாய்,மூன்றாய்,,,,
இன்னும்,இன்னுமாய் உடைபட்டு
அவையிலிருந்து பிறந்து வந்த மனிதம்
என்னில் உறவு கொள்கிறது
இன்றுவரை/
6 comments:
ரசித்தேன்... ருசித்தேன்...
பிரிக்கமுடியாதது எது?
விமலனும் டீ கடையும்.
டீ கடை எளியவர்களின் கதை கூடம் அதில் இருந்து நல்ல பதிவை தருவது விமலன் மட்டுமே.
தேனையும் தேநீரையும் வேண்டாமென சொல்வோர் உண்டோ
வணக்கம் வேல்முருகன் சார்,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/நீங்களும் பிரிக்க முடியாத கதைக்கூடத்தில் சேர்ந்து விடலாமே?
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.உங்களது ரசிப்ப்புக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாகிப்போகிறேன்.
வணக்கம் கவியாழி கண்ணதாசன் சார்.நன்றி த்ங்களின் வருகைக்கும் கருத்துரைக்குமாக/
Post a Comment