1 May 2013

நன்றியுடனாய்.....

 வணக்கம் காம்ஸ் ,கொஞ்சமல்ல.ரொம்பவுமே தாமதம்தான் நன்றி சொல்ல .போகிற போக்கில் நன்றி சொல்லிவிட்டு சென்று விடமுடியவில்லை. ஐந்து ரூபாய் கைமாத்து வாங்கினால் கூட கை எடுத்து கும்பிடுகிற அல்லது கசிந்து போகிற வெள்ளந்தி மனது உள்ளதுதான் காரணமாகித் தெரிகிறது. முன் எப்போதையும் விட ரொம்பவும்தான் நெகிழ்ந்து போகிறது மனது .நான்,எனது என்கிற நிலையைத் தாண்டி நாம், நமது என்கிற பொது வெளியில் இயங்குகிற ஒருவனை மனோ ரீதியாக அணுகி தட்டிக் கொடுத்து பாராட்டுகிற உயர் மனோ பாவம் உங்களிடம் இருக்கிறது காம்ஸ்.அதற்கு முதலில் தலை வணங்குகிறேன். மற்றவற்றை யெல்லாம் கூட அப்புறமாக பேசிக் கொள்ளலாம். மதம்  கடந்து,  ஜாதி கடந்து , உறவு கடந்து பிணைகிற உறவாய் நண்பர்கள்,தோழர்களின் நட்பு அமைந்து விடுவது உண்டு.


அது மாதிரியான தளத்தில் பூத்த தோழமை ஒன்று தொட்டு,ஒன்று தொட்டு வளர்ந்து வலைத்தளத்தில் வந்து நிற்கிறது. 

கொஞ்சம் தயங்கி, பின் நிர்ர்ர்ர்ர்ரம்பவே தயங்கி கடன் வாங்கி, கம்ப்யூட்டர் வாங்கி, உங்களைப் போன்ற நல் உள்ளங்களின் உதவியால் "ப்ளாக்" ஆரம்பித்து செயல் படுத்த துவங்க்கும் போது கொஞ்சம் கோன கலப்பை சாத்திய "ப்ளாக்கை"கண்டு தளர்ந்து போன தோள்தட்டி, அரவணைத்து ,தூக்கி நிறுத்தி ,தலை துவட்டிவிட்டு "அடிச்சு கெளப்பு"என என்னையும் ,எனது "ப்ளாக்"கில் இடம் பெற இருக்கிற படைப்புகளையும் ஊக்குவித்து ,சிட்டுக்குருவியின் குரலை ஊரறியச்செய்திலும் உங்களின் பங்கே பிரதானமாகிப்போகிறது .நன்றி கொள்கிறேன்.
முன் எப்போதையும் விட மனது ரொம்பவும் நெகிழ்ந்துதான் போகிறது காம்ஸ்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

vimalanperali said...

நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.