11 Sept 2013

பாரவண்டி,,,,,,,,


நேற்று மாலை வேலைமுடிந்து நானும் எனது சக ஊழியரும் பஸ் ஸிற்காக நின்றிருந்த நேரம்ரிடையர்ட் வாத்தியார் ஒருவரை பார்த் தோம். பரஸ்பரம் வணக்கங்கள் முடிந்தவுடன்அவர்சொன்னார்.
மொதெல்லாம்இந்தவழியில மாட்டுவண்டிகநெறைய போயிக்கிட்டு யிருக்கும்,பருத்தி,வத்தல்,நவதானியமூட்டைகள்ன்னுபத்து பதினஞ் சு கிலோ மீட்டர்தள்ளியிருக்குற ஊர்கள்ல இருந்தெல்லாம் வண்டிக வரும் சார்.இந்த இந்த பாதையிலதான் வரும் . இப்பத்தான இது தார் ரோடு,அப்பல்லாம் இது மண்பாதைதான். 
பாதையோட ரெண்டுபக்கமும் வெள்ளாமை நெறைஞ்சு கிடக்கும் பச்ச பச்சேல்ன்னு.கம்பு.சோளம்இப்படிநெறையா.அதுக்கு யெடை யில மாட்டுவண்டிக நெறைபாரத்தோட வர்ரத பாக்கவே அழகா யிரு க்கும். 
இந்த ஊர்லதான் வண்டிகள நிறுத்தி மாடுகள அவுத்துப் போட்டுட்டு கொஞ்சம் தைப்பாறிட்டுப் போவாங்க. இந்த காட்டுப் பாதையில போ யி டவுனுக்குப் போனா பக்கந்தான் என மண்ரோட்டை காண்பித்தார். 
இந்தடீக்கடையிலயேவாரம்னாயேவாரம்அப்படிஒரு யேவாரம்.
இந்தக்கடையில மட்டும் இல்ல.இங்க இருக்குற எல்லா டீக் கடை களிலும் நல்லா யேவாரம் நடக்கும் சார். 
எங்களமாதிரிவாத்தியார்கதான்வாங்கித்திங்கயோசிப்போம் வண்டி க்காரங்க ஒரு இழுப்புதான். அவுங்க அந்த நேரத்துல சாப்டாத்தான் சாப்டபடி.” 
பேச்சுஅப்படியேவளர்ந்து,வளர்ந்துஎங்கெங்கோசென்றுதிரும்பியது. 
மாட்டுவண்டியில் டவுனுக்குப் போகும் சரக்குகள் அப்படியே அட்டம் சுழிக்காமல் கமிஷன்கடைக்குத்தான் போகும்.(விவசாயிகளின் விளைபொருட்களைவிற்றுத்தருகிறஇடம்.அதற்குகடைக்காரர்களுக்கு குறிப்பிட்டசதவீதம் கமிஷன்) ஏனெனில் விவசாயிகளின் விளை ச்சல்செலவுக்குகமிஷன்கடைக்காரரிடம்கடன்வாங்கியிருப்பார்கள். 
அதற்கு பிரதிபலனாய்த்தான் அந்த கமிஷன் கடையில் விளை பொரு ள்தஞ்சம்.கடைக்குசரக்குகள்வந்துஇறங்குறநேரம்,,அடேயப்பா, ,,,, சந்தோஷமும் உற்சாகமுமாய்,கடையே ஈஸ்ட்மென் கலரில் காட்சியளிக்கும்.கமிஷன் கடைமுதலாளி,கடை சிப்பந்தி,மூடை இறக்கும் லோடுமேன்,வண்டிக்காரர்,சரக்கு மாதிரி எடுப்பவர் இப்படி அந்தக் கடையோடும் வந்து இறங்குகிற பொருளோடும் சம்பந்தப் பட்டவர்களுக்கு “படக்கென”உடம்பின் ரெண்டுபக்கமும் இறக்கை கள் முளைத்துப் போகும். 
இந்த வித்தைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு கடை ஓரமாய் உட் கார்ந்திருப்பார் விவசாயி.அவருக்கு அதுதான் சாத்தியப் படும். அவர து விளைபொருட்களின் விலை நிர்ணயம் பற்றி எல்லாம் கமிஷன் கடை முதலாளி பார்த்துக் கொள்வார். 
இதில் நிறைய உள்வேலைகள் நடக்கும்.ஆனால் விவசாயி எல்லாம் தெரிந்தும் எதையும் வெளியில் சொல்ல மாட்டார்.வெளியே சொல்ல அவர்களுக்கு ஏது திராணி.? 
இந்த காட்சிகளையெல்லாம் ஒன்றுவிடாமல் பார்த்துக் கொண்டிரு க்கிற பக்கத்துடீக்கடைக்காரர்பக்காவாகதலைகளைகணக்கிடுவார். சிரிப்பும்,பேச்சுமாக. 
கடனுக்குத்தான்போகும்டீ.“வருமில்லகாசுகமிசன்கடையிலிருந்தான்”  என்கிற நம்பிக்கைதான். 
கன்னத்து எலும்புகள் வெளித்தெரிய,ஒட்டிப் போன உடலும், உள் வாங்கிய கண்களுமாய், உருமாத் தலையுடன் ,,,,,,,கொஞ்சம் பூசினார் போல,,,,வயிறுநீட்டிதலைபின்தள்ளியிருக்க,,,,,,முரட்டுமுகமாய், பிஞ்சு முகமாய்,,,,,, 
இப்படி பலவிதங்களில் விவசாயிகளும்,வியாபாரிகளும். கிராமங்க ளில்விளையும்விளைபொருட்களைவாங்க கிராமத்திலேயே வியா பாரிகள்உண்டு. 
பருத்தி,வத்தல்,வரகு,நெல்,நவதானியம் எதையும் விடுவதில்லை அவர்கள். 
சைக்கிள்கேரியரில்ஒருசாக்கு,தராசு,எடைகற்கள்இவைகளை வைத் துக் கொண்டு கிராமத்தையே வலம் வருவார்கள்.வீடுகளில் உள்ள விலை பொருட்கள்அவர்களதுகண்களில்பட்டுத்தப்பிப்பது கடினம் தான். 
கிராமத்தையே சலித்து எடுத்து ஒருவருக்குப் போட்டியாய் ஒருவர் வியாபாரம்வாக்குவார்கள்வியாபாரம்செய்வார்கள்.கமிஷன்கடையி ல் விற்பார்கள். 
அப்புறம் பழையபடியும்,,,,,,,,,,,,,,,,வியாபாரி, விளைபொருள், கமிஷன் கடை,,,,,,,,என்கிற சுழல் சுழலும்./ 
இந்த சுழலின் வட்டத்தை மையப் படுத்தித்தான் வாத்தியாரின் பேச்சு இருந்தது.ஆனால் மேற்சொன்ன இந்த பேச்சுக்களெல்லாம் தமிழ் சினிமாவின் சுழல்வட்டங்களுக்குமத்தியில் வரும் கனவுக் காட்சிக ளாய் அழிந்தும்,மறைந்தும் கொண்டு போகிறதே. சமீப காலக்களாய்.
நெருக்கடி நிறைந்த இந்த வாழ்வில் வாத்தியார் பேசிய ,விவரித்த காட்சிகள்திரும்பவும்சாத்தியப்படுமா?மாட்டுவண்டிகளையும்,டிராக் டர்களையும் நிறைபாரத்துடன் பார்க்கமுடியுமா? 
அந்தகிராமத்துடீக்கடைவியாபாரம்திரும்பவும்சூடு பிடிக்குமா? 
கடைக்காரர்,சிப்பந்தி,லோடு மேன்விவசாயி,வியாபாரி,தரகர்,வண்டி க்காரர் என அனைவரது வாழ்வும் திரும்பவும் ஒன்றாக பிணைக்கப் படுமா? என வாத்தியார் கேட்கிறார். 
பதில் சொல்லுங்களேன் யாராவது.

6 comments:

'பரிவை' சே.குமார் said...

மீண்டும் விளைந்த பொருட்களை சுமந்த பாரவண்டிகளா... அதெல்லாம் இனி சான்ஸே இல்லை... முன்பெல்லாம் உப்பு வண்டி ஒன்று ஊருக்குள் வரும்... இப்போ உப்பு பாக்கெட்தான் வருகிறது. இனி இதெல்லாம் சாத்தியமில்லை விமலன் சார்....

தனிமரம் said...

இனியும் சாத்தியம் இல்லை என்பது நிஜம் விமலன் சார்!

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்,நன்ரி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/சாத்தியங்கள் இல்லை என்கிற விஷயத்தை யோசிக்கையில் வேறு பலவுமாய் வந்து விழுகிறதே. அதற்காகத்தான் இந்த எழுத்து/

vimalanperali said...

வணக்கம் தனிமரம் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

arasan said...

படித்து முடித்ததும் மனசுக்குள் பெரும்பாரம் .... இறுதி கேள்விக்கு பதில் கனத்த மனதுடன் சாத்தியமில்லை என்று தான் சொல்ல முடிகிறது ... என் பால்யங்களை கிளறிய படைப்புக்கு நன்றிகள் சார்

vimalanperali said...

வணக்கம் அரசன் சே சார். சாத்தியமில்லை என்பது சத்தியமே/ஆனால் சாத்தியப்படாத் ஒருவிஷயம் கூறிக்கொண்டு போகும் நூற்பு பல பரிமாணம் காட்டிச்செல்வதாய்/நன்றிவணக்கம்.இன்றி தங்களைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகம்.