22 Oct 2013

ஈரச்சேறு,,,,

எப்போது  நினைத்தாலும் மனம் இளகி கண்கள் ஈரமாகிப்போகிறது.

 என்ன சமாதானம் சொன்னாலும் மனம் ஏற்க மறுக்கிறது.செய்த காரியத்தின் ஞாயம் நிலையூன்ற மறுக்கிறது.
 
புரண்டெழுந்து அழுகிற சிறு குழந்தையின் வீறிடலாகவும்,அடம் பிடித்தலாயும் மனம்.
 
பத்தோடு பதினொன்றாக,நான்கோடு ஐந்தாக,இரண்டோடு மூன்றாக நானுமிருந்து விட்டுப் போயிருக்கலாம் அல்லது அவர்களுக்கெல்லாம் வாய்க்கப்பெற்ற கல் மனதை அவர்க ளுக்குத் தெரியாமல் களவாடி என்னில் நான் கொணர்ந்து ஆழப்புதைத்து வைத்தி ருந்திருக்கலாம்,இது எதுவுமே செய்யாமல் மென் மனதுடன் வலம் வருகிற பொழுதுகளில் நிகழ்கிற மென் நிகழ்வுகள்,பேச்சுக்கள்,செயல்கள்,எல்லாம் மனதை இழுத்துவெளியே போட்டு விடுகிறது.
 
 அதனதன் இயக்கம்  அதனதன் போக்கில் நடந்து கொண்டிருந்த ஒரு இனிய மதிய  வேளை யில்தான் என்னை பார்க்க வருகிறான் சுந்தர்.அலுவக வேலை மும்முரமாக/
 
 வந்த மனிதர்கள் அவரவர் வேலையில் கொண்டிருந்த கவனம் புள்ளி பிசகாமல் இருக்கிற பொழுது அலைபாய்ந்த கண்களுடன்வந்த சுந்தர் 22 வயதுக்கு சொந்தக்காரனாக தன்னை காட்டிக்கொண்டான்.
 
 உடல்உறுப்புகள் மட்டுமல்ல,  அவன்  அணிந்திருந்த உடையிலும், வயதையும்,வயதிற்கேற்ற பாவனைகளையும் தாங்கி வந்த அவன் இரண்டு பேரிடம் விசாரித்து விட்டு எனது இருக்கை நோக்கி மலர்ந்து வருகிறான். 
 
தனக்கு பெங்களூரில் கணணித்துறையில் வேலை கிடைத்திருப்பதாகவும்நாளை மறுநாள் கிளம்பவேண்டும் எனவுமாய் சொல்லி கை குலுக்க கை  நீட்டுகிறான். 
  
 வேலைப்பளு,அலுவலக ஞாபகம்,அதில் அமிழ்ந்திருந்த மனம் அவைகளிலிருந்து விடுபடா மலே பதிலுக்கு நானும் இயந்திரதனமாயயும்,சுரத்தற்றும் கைகொடுத்தவாறும் அனுப்பி விடுகி றேன்.
 
 தேடிவந்தவனிடம் ஒரு நல்ல பேச்சு பேசவில்லை.ஒரு சிரிப்பு சிரிக்கவில்லை.ஒரு தலையசை ப்பு கிடையாது.இது எதுவுமே இல்லை என்றாலும் கூட ஒரு மென் மலர்வாவது என்னில் இருந்திருக்கவேண்டுமே?
 
 இதுஏதுமற்றவனாய்அலுவகமும்,அலுவலகம்சார்ந்தவேலைகளும் அது சார்ந்த நினைவுகள் மட்டுமே பிரதானம் என என்னை இருத்திக்கொண்டவனாய் அவனுக்கு ஒரு  டீகூட வாங்கிதராமல் அனுப்பி விடுகிறேன்.(நல்ல மனம் வாழ்க/)
 
 முகம் விரிந்து மலர கோடிக்கண்களின் சந்தோசத்தை ஜோடிக்கண்களில் தாங்கி வந்தவன் முகம் வாடி திரும்பிச்செல்கிறான்.
 
அவன் திரும்பிச்சென்றதும் அலுவலகத்தின் மின் விளக்குகள் அணைந்து போனது.மின் விசிறியின் சுழற்சியும் அப்படியே/
 
 நடந்தது தற்செயல் நிகழ்வுதான் என்றாலும் கூட அது அவனுக்காகவே நடந்தது போலவே இருந்தது.
 
 இருக்கட்டுமேஅதுஅவனுக்காவே நடந்ததாகவேஇருக்கட்டுமே?என்னகுறைந்துவிடப் போகி றது  இப்போது?  யார்  யாருக்காவோ,  எது எதற்காகவோ என்னென்னகாரணங்களை முன் வைத்தோ ஏதேதோ நடக்கிறது என சொல்கிற பொழுது இது நடக்கக்கூடாதா என்ன?
 
சுந்தரின் எட்டாவது வயதில் அவனது தந்தை இறந்து போகிறார்.முதல் நாள் இரவு காட்டுக்கு காவலுக்குச்சென்றவர் மறுநாள் காலை பிணமாக வருகிறார்.பாம்பு கடித்து இறந்து போனார் என்றார்கள்.
 
 அந்த  எட்டிலிருந்து  இந்த  22வரை  தந்தையற்றவனின்  ஏங்கிய  மனோ
நிலையினனாய் வளர்ந்து ஓடி,ஓடி உழைத்தும்,தடுக்கி விழுந்தும்,பின் எழுந் து நின்றும் ,தன்னை  நிலை நிறுத்தியும் முன்னேறி ஒரு இடம் பிடித்து தன் இருப்பை சொல்ல வந்தவனை கவனிக்காமல் விட்ட அந்தசெயலை இப்போது நினைத்தாலும் மனம் இளகி கண்கள் ஈரமாகிப்போகிறதுதான்.  

12 comments:

மகேந்திரன் said...

மனம் இளகிவிட்டது உண்மைதான் நண்பரே..
சிறுவயதில் தந்தை அல்லது தாயை இழந்தவர்கள்
வாழ்வின் பிடிக்காக படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல...
உண்மையாக ஊக்குவிக்க வேண்டும் அவர்களை...
கதையின் ஊடாக அருமையான செய்தியை சொல்லியிருக்கிறீர்கள்...

vimalanperali said...

வணக்கம் ம்கேந்திரன் சார்,நன்றி வருகைக்கு,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

சிறு வயது என்றால் தாங்கிக் கொள்வது மிகவும் துயரம்... கலங்க வைத்தது...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

மகிழ்நிறை said...

அந்த ரெண்டு நிமிடம் வேலையை தள்ளிவைத்து பாராட்டியிருக்கலாம், இப்போ feel பண்ணவேண்டியதில்லைல ?சரிவிடுங்க.

உஷா அன்பரசு said...

இப்படி நாம் வேண்டுமென்று செய்வதில்லை.. அப்போது மனம் நம் வசம் இல்லாமல் எதோ ஒரு யோசனையில் இருக்கும் போது நிகழ்ந்து விடுகிறது...அப்படி பேசாமல் போன சில வார்த்தைகள் மனதை நெருடி உள்ளுக்குள் பேசி கொண்டே இருக்கும்..! பரவாயில்லை... பிறிதொரு சந்தர்ப்பங்களில் மனப்பூர்வமாய் பகிர்ந்து கொள்ளுங்கள்.

vimalanperali said...

வணக்கம் மகிவதனா மேடம்,நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைகுமாக/

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு அவர்களே/நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

கடைசிப் பாரா கலங்க வைத்துவிட்டது அண்ணா...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார் நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/