7 Oct 2013

மண்பூத்த சாலை,,,,

நெற்றியில்பூசியிருந்ததிருநீறுபட்டையின்நீட்சிஅவர் அணிந்திருந்த மூக்குக்கண்ணாடியின் மேல்பிரேமிலும், பக்கவாட்டு கைபிடியிலு மாய் பற்றிப்படர்ந்திருக்கநடந்து வருகிறார் நெஞ்சு நிமிர்த்தி/
அடர்த்தியானகலரில்மெலிதானவேஷ்டிஉடுத்தியிருந்தார்.இருக்கிக்
கட்டியிருந்ததால் இடுப்புஎலும்பைஒட்டியசதைவெளிபிதுங்கி/
நாலு முழ வேஷ்டிதான் போலும்.எனக்குத்தெரிந்து இந்தக்கலரில் எட்டு முழ வேஷ்டியை நான் பார்த்ததில்லை.
சட்டையணியாத வெற்றுடம்பில்தவழ்ந்துமிதந்தவெள்ளைத் துண்டு. அதில்பெயர் எதுவும் எழுதப்படாமல் வெறுமனே “துண்டுவாக” மட்டு மே தளர்ந்து தொங்கியது/
கலைந்துதெரிந்தஅடர்த்தியானதலைமுடியும்தாடியும்வெள்ளை காண்பித்து/
டீக்கடையிலிருந்து வந்து கொண்டிருந்தேன்.எனக்குஎதிராகஅவரும் வந்து கொண்டிருக்கிறார்.
நடையில் தெரிந்த மிளிர்வு,உடையில் தெரிந்த தூய்மை,முகத்தில் படர்ந்திருந்த சாந்தம்,கண்களில் தெரிந்த கூர்மை,தேகம் பூண்டிருந்த உருக்குத்தன்மைஎன பன்முகமாய்/
பாதசாரிகள்,இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகள், விரைந்து கடந்த ஆட்டோ என எல்லாமுமாகபூத்துத்தெரிந்த தார்ச்சாலையில் அவர்என்எதிராக.நான்அவர் எதிராக/
சிலுசிலுக்கிறகாற்றில்அவரதுவேஷ்டியின்வலதுமுனைலேசாகதூக்கித்
தெரிகிறது.எனதுசட்டையின் இடதுமேல் முனை லேசாக புடைத்து ஆடுகிறது.ஆடட்டும்,ஆடட்டும்எத்தனைநாளைக்குஇந்தஆட்டம்,கிளி கிற வரைதானே,அடுத்து,அடுத்தது ஆடும்
இருமருங்கிலுமாய் தெருக்கள் அடுக்கப்பட்டிருந்த பிரதான சாலை யில் இடது ஓரம் நானும்,வலது ஓரம் அவருமாக/
அத்தனை சந்தடியிலும் அவரும்,நானும் தனித்து விடப்பட்டவர்களா கவும், எதிர் எதிராக காட்சியளிப்பவர்களாயும்.குடித்த டீயின் ருசி இன்னமும் நாவின் சுவைஅரும்புகளில்ஒட்டிக்கொண்டு நிற்க அதை நினை த்தவாறும் அதன் சுவையில் மனம் பறிகொடுத்தவனாயும் அவரை கடந்த போது ஐயா வணக்கம்,என அழகாக கைகூப்புகிறார்.
கூப்பிய கைகளின் ஒட்டலும்,விரல்களின் வழிதெரிந்த சீரான இடைவெளியும்அவரின்வணக்கத்திற்கானகைகூப்பல்முறையானது எனத்தெரிகிறது.
எடுத்து வைக்கிற சின்னச்சின்ன தப்படிகள் பெரியதான தூரங்களின் இடைவெளியை குறைத்து விடுவது போல அவரின் நிலையான கைகூப்பல் மெளனமாக இருந்த என்னை அர்த்தமாய் பாதித்து விட வணக்கம் என்கிறேன் பதிலுக்கு/
கூப்பிய கைகளை விலக்காமலேயே பதிலுக்கு வணக்கம் சொன்ன அவர்,,,,,,நான்உங்களைஅடிக்கடிபார்த்திருக்கிறேன்.இதேசாலையில், இதேநடை தூரத்தில்.
“உங்களைப்பற்றி அறிந்தும் உள்ளேன் கொஞ்சம்.வெகு நாடகளாக வே உங்களிடம் பேசவேண்டும் என்கிற ஆவல் எனக்கு இருந்ததுண் டு. இந்த அறிமுகத்தின் மூலம் அதற்கு பிள்ளையார் சுழியிடலாம் என நினைக்கிறேன், எனது மனஎண்ணங்கள் உங்களுக்கு தெரிந்தி ருக்க வாய்ப்பிலை.அது போலவே உங்களது மன எண்ணங்களும் எனக்கும்எனநினக்கிறேன்.பட்டையிட்டுகலர் வேஷ்டிகட்டித்திரிபவ னது உலகம் எண்ணெயில் ஒட்டாத தண்ணீராய் என நினைப்பார்கள் பலரும்.ஆனால் அப்படியில்லை நான் நிதர்சனத்தில்,/
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கறி,புளி சாப்பிட்டு தூங்கி எழுந்த மதிய வேலையின் நீட்டித்த பகுதியான மாலை நாலு மணிக்கு ஒரு கூட்டம் இருக்கிறது.உங்களது நேரம் அனுமதிக்குமாயின் நீங்கள் வர லாம்.வரலாம் என்ன,,,,?கண்டிப்பாக வர வேண்டும் என்பதுவே எனது அவா” என கூப்பிய கையிலிருந்து பிரசவித்தெடுத்ததாய் துண்டுக் காகிதம் ஒன்றை கொடுத்து விட்டு என்னை கடக்கிறார்.
கடந்த வேகத்தில் எனகையில் படபடத்த துண்டு பேப்பர் விரிய கூர்ந்து பார்த்தால் காதைலைப்பற்றிய ஒருகருத்தரங்கம் அது அறி விப்பு செய்கிறது.
பரவாயில்லையே,,,,,?அறுபதைஎட்டித்தொடப்போகிறதோற்றமுடை ய இவர் காதலைப்பற்றிஅறிவிப்பு செய்கிறஅச்சடித்த நோட்டீஸை கொடுத்துவிட்டுப்போவது,,,,,,,,,
அவரின் நல்லதும், கெட்டதுமான சகலத்தையும் விலக்கி இதை மட்டுமேமையமாக வைத்து பேசப்போகும் அவரது பேச்சை அல்லது, அவரது பங்கெடுப்பின் முனைப்பை பார்க்கவாவது கண்டிப்பாக போக வேண்டும் என முடிவெடுத்தவனாகவும்,ஆச்சர்யம் மேலிட்ட வனாகவும் அவரைபார்க்கிறேன்.
சிறிது தூரத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த அவரை பின் தொடர் ந்து அவரின் முன்னால் போய் நிற்கிறேன்.
“ஐயாதவறாகநினைக்காதீர்கள்.இந்தகேள்வியின்நோக்கம்உங்களை
புண்படுத்துவதோஉங்களின்செயலைஎள்ளிநகையாடுவதோஅல்ல”.  எனநிறுத்தியஎன்னைஉம்,கேளுங்கள்தம்பி,வரம்புமீறாதஎந்தபேச்சுக் கும், எந்த கேள்விக்கும் எந்த கணமும் பதிலளிக்கவும், விளக்கி பேச வும் கடமைப்பட்டவனாக/
“இல்லை ஐயா இருபது துள்ளி விளையாடும் இளம் வயதுள் காதல் ஓடுவது இயல்பு.அது ஏற்புடையது.ஆனால் அறுபதை நெருங்கி நிலை கொண்டுள்ள தாங்கள் இப்படி ஒரு கூட்டத்திக்கு அழைப்பு விடுப்பது,,,,,,,,,?//”என்றவாறே அவரை ஏறிட்ட என்னை கையமர்த்தி யவாறே ஏன் விந்தைகொள்கிறீர்கள்.எதற்காக அப்படி ஒரு எண்ணம் உங்களுள் விதை விடுகிறது?காதல் என்பது என்ன வேற்று கிரக சமாச்சாரமா?நாம்வாழ்கிறசமூகத்தில்அதுவும்ஒருஅங்கம்தானே?
காதல்,
காதல்,காதல்,காதல் போயினும் காதல்,காதல்,காதல்தான் என வாழ ப்பழகிக்கொண்டசமூகத்தின்வழிவந்தவர்கள் நாம்.யாரிடம் இல்லை  காதல்,எதனிடம் இல்லைநமக்குகாதல் ஒரு யுவனுக்குள்ளும், யுவதி க்குள்ளுமாக பூத்திருப்பது மட்டுமே இல்லையே காதல்/
உங்களிடமும், என்னிடமும்,அதோ அவர்களிடமும் நம் எல்லோரிட மும் நிலைந்து மலர்ந்து பூவும்,பிஞ்சும்,காயும்,கனியுமாக கிளைத்து நிற்கிறதுதானே காதல்/
நம்மை,வாழ்வை இப்புவியை,இப்புவியில் மையம் கொண்டிருக்கிற அனைத்தையும்நேசிப்போம்,நேசிப்புடன்சுவாசிப்போம்.அதுவேகாதல் எனஅறியப்படமுடிகிறது. அது போக நேற்றைய இருபதுதானே இன் றைய அறுபது.அதன் மிஞ்சியதனம் என்னுள் இன்னுமும் இருக்கும ல்லவாகொஞ்சமாகவேனும்/?அப்படிஎஞ்சிஇருப்பதுஎன்னுள் மட்டும் தானா?”என சொல்லி முடிக்கிறார்.
பிற கூட்டத்தில் வைத்தோ அல்லது மறுமுறை நேரில் பார்க்கும் போதோ,சென்று வாருங்கள் தம்பி,நானும் சென்று வருகிறேன்.

No comments: