23 Nov 2013

மாயலோகத்தில்,,,,,,

 ரண்டை தொட்ட கணத்தில் முழு உருவமும் மறைந்து போக கைமாத்திரம்அந்தர த்தில் மிதந்து போய் நினைத்த காரியத்தை முடித்துவிட்டுத் திரும்பும் இரும்புக் கைமாயாவி யின் மாயலோகமாய்த்தான் விரிகிறது பெண்களின் உலகம். அதிகாலை எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டுக்  கொண்டிருக்கும் போதே சைக்கிள் ம ணிச் சத்தம்  அதிர வரும் பால்க்காரரிடம் வாங்கிய பாலை அடுப்பில் ஏற்றி ஸ்டவ்வை சிம்மில் எறியவிட்டு ,விட்டு போட் ட பாதிக் கோலத்தை பிசகாமல் தொடர்ந்து முடித்து விட்டு கோலத்தை திரும்பிக் கூடப்  பார்க்காமல் உள்ளே வந்தால் ஸ்டவ்வில் வைத்திருந்த பால் பொங்கி பாத்திரத்தின் விளிம்பில் நிற்கும் .பாலை ஊதி சட்டியை இறக்கி கீழே வைத்துவிட்டு டீ அல்லது காப்பி போடும் முன் எழுந்துவிடும் இரண்டாம் வகுப்பு படிக்கும் சின்னப் பையனை படுக்கையிலிருந்து எழுப்பி இடுப்பில் வைத்து கொஞ்சியவாறே அவனுக்கு முகம் கழுவி விட்டு பாத்ரூம் ஜோலியெல்லாம் முடித்து கூட்டி வரும் முன் எழுந்துவிட்ட பெரியவளும் "பானா, ரூனா"(பாத்ரூம்) வேலை யெல்லாம் முடித்துவிட்டுமுகம் கழுவி டீசாப்பிட உட்கார்ந்து விடுவாள்.

 இதையெல்லாம் புள்ளி பிசகாமல் செய்யும் மனைவி தலைப்புச் செய்திகளை அறியும்ஆவலோ டும் ,அறிவுத் தூண்டுதலோடும் எழும் கணவனின் கண் முன் அன்றைய தினசரியைக் காட் டு ம் மிக உயர்ந்த பணியையும் செய்ய வேண்டும்(பின்னே பேப்பர் கொடுப்பது கணவணுக்கு ஆயிற்றே?/) (காலை எழுந்தவுடன் மனைவியின் முகம் பார்த்து பேசுவதை விடுத்து தினச ரியின் முகத்தில்தான் முழிப்பேன் என்கிற நல்ல எண்ணம்இவர்களுக்கெல்லாம் எப்படித்தான் உருவாகிறதோ தெரியவில்லை.)

 மேற்கண்ட வேலைகளில் எது தவறினாலும்,பிசகினாலும் கரணம் தப்பினால் மரணம்தான்
என்கிற எண்ணத்தை விதைக்கிற மாதிரியான வார்த்தை பிரயோகங்கள் வெளிப்படும்
நடைமுறயும் பார்வயும்./
 
நீயெல்லாம்.............என்கிற"டாப்ஆங்கிளில்"ஆரம்பிக்கிறகணவனின் பார்வையும், பேச்சும்
மனைவியின் பிறப்பு வளர்ப்பு பற்றிய P.H.D யில் போய் முடியும். அதற்கு பயந்தேனும் இப்ப டி இருந்துவிடுகிறார்கள்.அல்லது இருக்க வைக்கப் படுகிறார்கள்.இதுகாலைஎழுந்தவுடனான பெண்களின் முதல் ஷிப்ட்.       கணவனோடும், பிள்ளைகளோடும் அமர்ந்து அவசர அவசரமாகடீக்குடிக்ககிடக்கிறநேரம்அவளதுஓய்வுநேரமாகஎடுத்துக் கொள்ளப் பட்டு அத்தோடு அந்த ஷிப்ட் முடிந்ததாய் கணக்கில் கொள்ளப் படுகிறது.
இரண்டாவது ஷிப்ட்டின் ஆரம்பத்தில் குக்கரில் அரிசியைப் போட்டு ஸ்டவ்வில் ஏற்றிய கையோடு காய்கறிகளை நறுக்கி குழம்புக்கு கரைத்த சட்டியில் போட்டுக் கொண்டிருக்கும் முக்கிய தருணத்தில்தான் அவளது ஒற்றைக்கை தனியே கழன்று போய் வீட்டின் பின்பக்கம் உள்ள அடி குழா யில் தண்ணீர் அடித்து வருகிறது. சின்னப் பையனுக்கு பல் துலக்க பிரஷ் எடுதுக் கொடுத்துவிட்டு,அவர்களது முந்தைய நாள் துணிகளை வாஷிங் பவுடர் போட்டிருந்த தண்ணீர் வாளியில் ஊறவைக்கிறது.
 
வெளியேபோய் தன் பாட்டுக்கு வேலைசெய்து கொண்டிருக்கும் கையைப் பார்த்த,சமையலறையில் இருக்கும் கை,அதற்கு எந்த வகையிலும் சளைக் காமல் சமையல் வேலையின் இண்டு இடுக்குகளையும் ஒன்று விடாமல் செய்து முடிக்கும் சகலகலாவிதகராய் பரிணாம் காட்டுகிறது.
 
மசால் பொடி,உப்பு.சீனி,காய்கறி,அரிசி,பருப்பு,எண்ணெய்,குக்கர்,மிக்சிஎன அனைத்துடனும் போராடும் ஒரு போராளியாயும்,ஆயிரம் சதுரடிவீட்டில் கிராபிக்ஸின் உதவி இல்லாமலேயே எங்கும் தோன்றி,மறையும் வல்லமை பெற்றவளாயும்.
 
 பெரியவள் குளித்து முடிக்கவும் வெளியே அனுப்பியிருந்த கையை இழுத்து ஒட்ட வைத்துக் கொண்டு சின்னவனை குளிப்பாட்டி ட்ரெஸ் பண்ணி விடு கிறாள்.

 எல்லோரது வீட்டிலும் பள்ளி செல்லும் நேரத்தில் வழக்கம்போலபிள்ளைகள் மறந்து போகும் ஹோம் ஒர்க் நோட்,பென்சில்,பேனா ,பள்ளியின் அடையாள அட்டை என எல்லாம் தேடிப் பிடித்து எடுத்துக் கொடுத்து அவர்களுக்கு உடைமாட்டி சாப்பாடு போட்டு ,டிபன் பாக்ஸில் கட்டிக் கொடுத்தனுப்பி விட்டுத் திரும்பினால் கொக்கு முக்காடு போட்டுக் கொண்டிருக்கும் கண வன்.
 
அவனை தாஜாப் பண்ணியும்,தயார்பண்ணியுமாய்அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு வீட்டை திரும்பிப் பார்த்தவாறு கொஞ்சம் ஆயாசமாக அமரும் நேரம் அவளது இரண்டாவது ஷிப்ட் முடிந்ததாய் கணக்கிடப்படுகிறது.
 
 பிறகுதான் அவளுக்குள் அவளாக பேசிக் கொண்டும் நினைவலைகளில் நீந்திக் கொண்டுமாய் துணிதுவைக்க அமர்கிறாள்.கையை அரித்து எரியச் செய்யும் விலைகுறைந்த ஊதா சோப்பை வாங்கி வந்த கணவணை நொந்தவாறே இளையமகனின் ஜட்டி,பனியன்,ட்ரவுசர்,சட்டை,என ஆரம்பித் து மூத்தமகளின் துணிகள்,கணவனது துணிகள்,அவளுடைய துணிகள் என வரிசைக்கிரமமாக துவைக்கிறாள்.அதிலும் அவளது துணிகள் கடைசி யாக வருவது ஒன்றும் தற்செயல் அல்ல.

 அடுத்ததாக பாத்ரூம் கிளீனிங்,ப்ளீச்சிங்க் பவுடர்,பினாயில் எல்லாம் போட்டு கழுவிட்டு நிமிர்கையில்தான் அவளுக்கு மதியச் சாப்பாட்டின் நினைவுவருகிறது.
 
இவர்கள் பசி நேரம் சாப்பிடுவதெல்லாம் இரண்டாம் பட்சஏற்பாடே./ இது அவளது முடிந்து போன மூன்றாவது ஷிப்ட்.
 
மனித மூளையைகாயடித்து தன் வசம் வைத்திருப்பதில் வல்லமை பெற்ற தொலைக் காட்சியில் ,மெகாத்தொடரையோ,சினிமாவையோ பார்த்துவிட்டு குளித்து முடித்துவிட்டு வருகையில்பள்ளிக்குப் போன இளையமகனை கூப் பி டும் நேரம் வந்து விடுகிறது.
 
பள்ளிக்குச் சென்று மகனுடன் திரும்பி மொட்டைமாடியில் காயப் போட்டி ருந்த துணிகளை எடுத்து மடித்து பீரோவில்  அடுக்கும் போது அதிகாலை யைப் போலவே மாலையிலும் தொடர்கிறது.
 
உடல் பீரோமுன்னிருக்க இருகைகளும் தனித்தனியாக கழண்டு திசைக் கொன்றாய்ப் போய் காபி,டீ தயாரிப்பு பையனின் மாலை நேர ஸ்கூல் யூனிபார்ம் அற்ற அலங்காரம் என்கிற வேலைகளில் இறங்க,,,,,,,...... முகம் மட்டும் கணடி முன் நின்று தலைவாரி,பொட்டிட்டு, பூச்சூடி அழகாக் தயார் பண்ணிக் கொள்கிறது.அலுவலகம் விட்டுத் திரும்பும் கணவன் முன் நிற்க. இப்பொழுது அவளது நான்காவது ஷிப்ட் முடிவதாய் கணக்கிடப்படுகிறது.
 
அப்புறமென்ன இருக்கவே இருக்கிறது பிள்ளைகளின் படிப்பு,வீட்டுப் பாடம் இவற்றை கவனித்து விட்டு டீ.வி,சாப்பாடு, தூக்கம்(இரவில் கணவ னின் மிகச் சிறந்த "ஸ்லீப்பிங் டோஸாகவும்") என இருக்கிற இவர்கள் ஒரு நாள் நகர்வு இப்படி இருப்பதாய் கணக்கிடப்படுகிறது.
 
அனுதினமும் தனது கணவனுக்காகவும்,பிள்ளைகளுக்காகவும் மட்டுமே ஷிப்ட் முறையில் இயங்கி தன்னை கரைத்துக் கொள்கிற பெண்களின் உலகம் .........,,,,,,,,,,,,,,,

"வேறென்ன ஆரம்பவரிகள்தான்"./

16 comments:

Anonymous said...

வணக்கம்
விமலன்(அண்ணா)

அனுதினமும் தனது கணவனுக்காகவும்,பிள்ளைகளுக்காகவும் மட்டுமே ஷிப்ட் முறையில் இயங்கி தன்னை கரைத்துக் கொள்கிற பெண்களின் உலகம்

அருமையாக சொன்னிர்கள் ..வாழ்த்துக்கள் அண்ணா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அருமையாக சொன்னிர்னள் சிறுகதை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அழகாக சொல்லி விட்டீர்கள் வாழ்க்கை முழுதும் இவ்வேலைகளை சலிக்காமல் செய்து வரும் பெண்கள் பாவம்தான். இப்போது நிலை கொஞ்சம் கொஞ்சம் மாறிவருகிறது.

இளமதி said...

உலகில் பாதிப் பெண்கள் வாழ்க்கைப்பாடு இதுவே...

அருமை சகோ!

வாழ்த்துக்கள்!

த ம.2

கரந்தை ஜெயக்குமார் said...

தினமும் கண்ணால் காணும் காட்சிதான் என்றாலும் படிக்கையிலேயே மலைப்பு தட்டுகிறது.
வாழ்த்துக்கள் ஐயா
த.ம.3

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த நிலை மாறும்...

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் டீ என் முரளிதரன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சகோதரி இளம்தி அவர்களே.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி சகோதரி வாக்களிப்பிற்கு/

Yaathoramani.blogspot.com said...

தினம் தினம் காணும் நிகழ்வுதான்
ஆயினும் அதை இத்தனை அற்புதமாகப் பதிவு செய்து
அவர்களின் சலிப்படையாத மன நிலையைச் சொன்னவிதம்
மிகவும் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Iniya said...

வணக்கம் சகோதரா....!
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எல்லாவற்றையும் நுணுக்கமாக கவனித்... து எழுதியிருகிரீர்கள். எல்லா ஆண்களும் அவசரமாக இடுகைகளும் இட்டு சென்றிருகிரார்கள்.இப்படி நினைப்பதே பெரியகாரியம் இப்படி உணர்கிரார்களே. என்று நாம் சந்தோசப் படுவோம்.....! இல்லை இல்லை பாவம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று எத்தனை பேர் நினைதிருப்பீர்கள். இல்லை என்றால் இனியாவது ஒரு கை கொடுங்களேன். பெருமை படுத்தி விட்டு பேசாமல் இருக்காமல். செய்வீங்க தானே எனக்கு தெரியும் செய்வீங்க ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க.
அருமை அருமை ....!
பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்...!

மகிழ்நிறை said...

ncbh புத்தக கண்காட்சியில் ஒரு புத்தகம் வாங்கினேன்.பெண்கள் செய்யும் வேலைகள் என தலைப்பு கவரும் படியாக இல்லை.ஆனால் உள்ளடக்கம் படிக்க படிக்க மலைப்பாக இருந்தது .முதலில் நீங்கள் சொன்னது போல் தொடங்குகையில் அன்றாட வாழ்வில் பெண்கள் அனுபவிப்பது தானே என நினைத்தேன் .அனால் பெண்ண்கள் நீங்கள் சொன்ன வேலைகளை உலகம் தோன்றியது முதல் எப்படி சோர்வில்லாமல் செய்தவண்ணம் இருக்கிறார்கள் என்பதாய் தொடர்கிறது.வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள் .அருமையான பதிவு.

vimalanperali said...

வணக்கம் இனியா அவர்களே,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மய்திலி கஸ்தூரி ரங்கன் அவர்களே.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக.