13 Dec 2013

முகமன்,,,,,,,,


பெற்றோர்கள் வைத்த பெயரும் நிலைக்காமல் அவனாக வைத்துக் கொண்ட புனைப்பெயரும்நிலைக்காமல்இப்போது அதுவேநிலையா யும் சாஸ்வதமாயும் ஆகிப்போனது.

தோழர்,தோழர்,தோழர்

,,,,,,அடபோங்கப்பா,எங்குபோனாலும்யார்மத்தியிலும்,மனிதவாசனை நிலை கொண்டுள்ள எந்த இடத்தில் நின்றிருந்த போதிலும் அல்லது தலைகாட்டுகிற தருணத்திலுமாய் அப்படித்தான் ஆகிப்போகிறது. இத்தனைக்கும்அவன்ஒன்றும்அப்படியானவார்த்தைஅடையாளப்படு த்தப்பட்டகட்சியிலோ,அல்லதுதொழிற்சங்கத்திலோ உறுப்பினராகக் கூட இல்லை.அல்லது கட்சியில் நிலை கொண்டுள்ள பதவிகளில் எதிலும் இல்லை. பின் ஏன் அப்படி எனவும் தெரியவில்லை. பள்ளி யில் படித்துக்கொண்டிருந்த காலங்களில் தரையில் கிடக்கிற துண்டு பேப்பரை கையிலெடுத்து படிக்கிற பழக்கமும்,புரட்டிப் பார்க்கிற தன மும் இருந்தது போலவும்,திருமுருக கிருபானந்த வாரியாரின் சொற் பொழிவுகளைகேட்டுப்பழகியது,பொட்டலில்அரசியல்கட்சிகளின்
கூட்டம்என்றால்திறந்தவாய்மூடாமல்நின்றதும்இன்றுவரைதொடர்
கிறது.வெவ்வேறுவடிவங்களிலும்,ரூபங்களிலுமாய்/(இன்றுமனைவி
யிசந்திப்பு,பேச்சுடீக்கடை,காய்கறிக்கடைஎல்லாம்முடிந்துவந்த பொழுதுகளிலும், ஏதாவது ஓய்வு கிடைக்கிற வேலைகளிலுமாய் தொலைக்காட்சி மற்றும் கணிணியின்உதவியோடுகேட்பதுதான். சொற் பொழிவு, பாட்டு, நாடகம் என,,,,,சரிவிட்டு விடலாம். ஆனால் நிலை கொண்ட பேரை என்ன செய்ய? ஒன்றும் செய்ய வேண்டாம். அப்படியே விட்டு விடுங்கள் என்கிறாள் அவனது மனைவி. அதற்கு மேல் பேசினால் “ரொம்ப அறுக்காதிங்க, ஓட்ட ரெக்காடு மாதிரி பேசுனதையேபேசிக்கிட்டு/அதான் காய்கறிக் கடையிலிருந்து, டீக்கடை வரைக்கும்அப்பிடித்தான்பேராகிப் போச்சுன்னு சொல்றீ ங்கிள்ல, அப்புறம் என்னவாம்? இப்ப நானும்ஒங்கள தோழர்ன்னு கூப்புடலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன்”என்கிறாள். “கணவர் தோழாவா?” “ஐய்ச்சக்கா”, அதுவும் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் கண்களை உருட்டிக்கோண்டு இடுப்பில் கைவைத்து முறைக்கிற பழக்கம் மட்டும் போக மாட்டேன் என்கிறது. ஒருபெண்மனைவி எனமறுஉருவாய் ஆகிப்போன நாளிலிருந்து இப்படித்தான் போலும்/ ஆகட்டும், ஆகட்டும். இல்லையென்றால் முக்கால்வாசி வீடுகளில் இந்தஆண்களின்தொல்லைபொறுக்கமுடியாது.நிற்கிறஇடங்களிலெ
ல்லாம் டீக்குடிக்க,சிகரெட்குடிக்கஎனஆரம்பித்துவிடுவார்கள்.

அவனுக்குத் தெரிந்து ஒருவர் தான்அணிந்திருக்கிற வெள்ளைச் சட் டையில் சிகரெட் புகைபடிந்துகாணப்படுகிறார் எந்நேரமும். அவரும் அவனை கூப்பிடுவது தோழர் எனவே/ அதற்காக சொந்தக்காரர் கூட இப்படியாஅழைக்கவேண்டும்?

அரசுப் போக்குவரத்தின்நடத்துனர் அவர். அவனதுஊரில்தான் சம்பந் தம் பண்ணியிருக்கிறார்.தாரா புரத்துக்கா ரர் பெண்ணை அவருக்கு பேசி முடிக்கையில் மாமனார் வீட்டில் தாண்டவமாடிய வறுமையை இவர் கணக்கில் எடுத்து கொள்ள வில்லை. நல்ல பெண்,அவள் படித்தும்,முடிந்தும் வைத்திருந்த டீச்சர் ட்ரெயினிங் படிப்பு என்கிற இரண்டு மட்டுமே போதும் என அவளை மணம் முடித்துக்கொண்டு வந்திருந்தார். இன்றுஅவள்ஒரு கிராமத்துப்பள்ளியில் தலைமை ஆசிரியர்.அழகும், அறிவுமாய் இரண்டு பிள்ளைகள்.படிப்பு வேலை, பொறுப்பு என நகர்கிற குடும்பம். கண் நிறைந்தமனைவியையும், பிள் ளைகளையும் தன் மனதில் தாங்கி நகர்கிற அன்பு மனிதராக உருக் கொண்டஅவர்அவனுக்கு அண்ணன் முறை வேண்டும்.
அவன், இரு சக்கர வாகனம் மற்றும் கொஞ்சமாய் மடியில் கட்டிப் போன எண்ணங்களுடனுமாய் தங்க முத்து தோழர் கடையில் போய் வண்டியை ஸ்டாண்ட் போட்ட போது பின்னிருந்து முதுகு தொட்ட “வணக்கம் தோழர் என்கிற குரலுக்கு சொந்தக்காரராய் அவர் இருந் தார். “அண்ணே, வாங்கண் ணே, நல்லாயிருக்கீங்களா,எங்க வேலை செய்றீங்க?வீடு எங்க இருக்கு? பிள்ளைங்க என்ன பண்றாங்க?டீச்சர் எப்பிடி இருக்காங்க?என கேட்டமறுகணம்“நல்லாயிருக்கேன் தோ ழர்” என ஆரம்பித்து வீடு மனைவி, பிள்ளைகள்எனஒருமூச்சு பேசி முடித்தார்.மூச்சுக்கு,மூச்சு தோழர்,தோழர்,தோழரே,,/ ஒரு டீ, ஒரு வடை,மிஞ்சிப்போனால் ஒரு முறுக்கு இதுதான் அவனது டீக்கடை மெனு/ அலுவலகம் முடிந்து வரும்போது பாலவனத்த த்தில் தான்ஒரு டீக்குடித்திருந்தான். 10கிலோ மீட்டருக்குள்ளாகவா அடுத் து ஒரு டீக் கேட்கிறது? வெறும் டீக்காக மட்டுமா போகிறான். இல் லை யில்லை. கொஞ்சம் பழக்கத்திற்காக, கடையில்கேட்கிற பாட்டு க்காக,இன்னும்மனம்லேசாகிப்போகிறவேறுபலவிசயங்களுக்காக வும்/

கனக்கிற அல்லது குழப்புகிற இல்லையேல் மனம் பிசைகிற எண் ணங்களுடன் அங்கு போய் அமர்ந்தால் உள்ளே இறங்குற நேரம் டீயின் மிடறுகள் ஒவ்வொன்றுக்குமாய் அவிழ்ந்து சிதறிப்போகிற மனதை அள்ளி முடிய பிரியமில்லாமல் அப்படியே அங்கேயே விட்டு விட்டு வந்து விடுகிற நல்லதனம் மிகவும்பிடித்துப்போகஅங்கேயே அமர்ந்து விடு வான். “டீ,டீ,டீ தானா எந்நேரமும்?விட்டா 24 மணி நேரமும் பக்கத்தி ல் பாய்லரைவைத்துக்கொண்டுட்யூப் போட்டு உறிஞ்சிக் கொண் டிருப்பாய் போலிருக்கிறேதே?” என கேலி பண் ணுவார் அவனது நெருங்கிய உறவினர். அது மாதிரிதான் ஆகிப் போ னது அவனது கதையும்/ மேம்பாலம் இறங்கி ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு நிமிர்ந்த போது எதிர்ப்பட்ட வெளியை ஏறிடும் போது உதித்த எண்ணமே டீ சாப்பிடலாம் என்பது/ பாலத்திலிருந்து கருத்து நீண்டு இறங்கிய சாலை,சாலையின் மேடு பள்ளங்களிலும், சின்ன சின்ன குழிகளிலுமாய் பெயர்ந்து கிடந்த கற்கள் அதன் மீது படர்ந்து கிடந்த தூசி,அழுக்கு,மண்,மாலை வெயில் என எல்லாம் கடந்தும், பிரிண்டஅவுட்எடுக்கிற கம்யூட்டர் சென்டரில் பேசாமல் கேட்டதற்கும், சொன்னதற்கும் தலையாட்டியும், சைகை காட்டியு மாய் பேசிய பெண்,அவளது அழுத்தம் படர்ந்த முகம் என்கிறவற்றுட ன் நான்கு முனை சிக்னலை கடந்து வந்த போது செயல் பாட்டுக்குள் ளான எண்ணத்துடன் தங்கமுத்து தோழர் கடை யில் போய் அமர்ந்த போது பார்த்த மனிதராய் அவர்/

நல்ல மனிதர். முன்பு பார்த்ததை விட இப்போது நன்றாகயிருந்தார். எட்டு முழ வேஷ்டி,முழுக்கை சட்டை. திறந்து காணப்பட்ட கழுத்து பட்டன்வழியாக டீசர்ட்டோ,பனியனோ தெரிந்தது. எப்போது பார்த்தா லும் பளிச்சென்று சிரித்து பேசக்கூடிய அன்பின் மனிதர் ஒட்டுதல் மிக்கவர்,அவர்தான் எனக்கும் சேர்த்து டீ சொன்னார்.அவன்,அவர் மற் று ம் அவருடன் வந்திருந்த சாமிக் கண்ணுக்குமாய் சேர்த்து/ தட்டில் அடுக்கப்பட்டிருந்த வடைகளைப் பார்த்தான் ஐந்தாறு கிடந்தது.பாக் கெட்டில் அடைக்கப்பட்டிருந்த முறுக்குகளை பார்க்கிறான்.


பை நிறைந்து தெரிகிறது. வடையையும், முறுக்குகளையும் வெறி த்துப்பார்த்துக்கொண்டிருந்தநேரத்தில்டீயைநீட்டியகரம்அன்பின் மனிதருடையதாய் இருந்தது. ஒன்றும் பேசத் தோன்றா சங்கடத்து டன் டீயை குடித்துக் கொண்டிருந்த நேரத்திலும் பேசிக்கொண்டிருந்த பொழுதிலுமாய் அவர் சொன்ன “தோழர்” என்கிற வார்த்தை பதங்க ளுக்கு அவனுடைய பதில்ப் பேச்சு அண்ணன்,அண்ணன் என்பதாக வே இருந்தது. அப்படி அவர் கூப்பிட்டும், பேசியும் கொண்டிருந்த வேளையில் அவனுக்கு அடுத்தடுத்து வந்த போனில் “வணக்கம் தோழர்” என்கிறார்கள் எப்பொழுதும் சார் என கூப்பிடகூடியவர்கள் கூட/

கணக்கிட்டுப்பார்த்தால்இன்றுகாலையிலிருந்துஎதிர்ப்பட்ட,பேசிய இருபதுக்கும் குறையாதவர்களில் பத்துக்கும் மேற்பட்டோர்கள் சொன்னது தோழர்,,,தோழர்,,,தோழரே,,,,,,,,,,/ இருபதுக்குள் அடங்கிய பத்தை தாண்டிய பதினைந்தைத்தொட்ட மனங்களில் அவன் அப்படித் தான்பதிவாகியிருக்கிறான்“தோழர்”என/

அதுவும்நன்றாகவேஉள்ளது உயிர்ப்புடன்/

16 comments:

Yaathoramani.blogspot.com said...

கணக்கிட்டுப்பார்த்தால்இன்றுகாலையிலிருந்துஎதிர்ப்பட்ட,பேசிய இருபதுக்கும் குறையாதவர்களில் பத்துக்கும் மேற்பட்டோர்கள் சொன்னது தோழர்,,,தோழர்,,,தோழரே,,,,,,,,,,/ இருபதுக்குள் அடங்கிய பத்தை தாண்டிய பதினைந்தைத்தொட்ட மனங்களில் அவன் அப்படித் தான்பதிவாகியிருக்கிறான்“தோழர்”என///

அண்ணன் தம்பி என்கிற பெயர்கள்
மாற்றுக் குறைந்ததைப்போல
தோழர் என்கிற பெயர் மாசுபடவில்லையானாலும்
இப்போதெல்லாம் முன்பிருந்ததைவிட மக்களைவிட்டு
கொஞ்சம் அன்னியப்பட்டுப் போயிருப்பதைப் போலத்தான்
படுகிறது எனக்கு.இது என் தனிப்பட்ட கருத்து

மனைவி கணவனை தோழர் என அழைத்தல் என்கிற விஷயம்
வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,எதுவுமே காலப்போக்கில்
நீர்த்துப்போகிற உலகில் இவ்வார்த்தையும்
அப்படித்தானே?
ஆனால் தேவை ஒட்டிக்கூப்பிடப்படுகிற
வார்த்தைகளுக்கும்,மனம் ஒன்றி கூப்பிடுகிற
வார்த்தைகளுக்கும் வித்தியாசம் இருந்தேதான்
வந்திருக்கிறது.அது எல்லா வார்த்தையிலுமாய்,நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

“தோழமை என்றவன் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ?” - கம்பன்.
காட்டுவாசி குகனை இராமன் தோழமை கொண்டதும், எங்கோ மனிதர்களுக்காகப் போராடும் ஒருமனிதரை இங்குள்ளவர்கள் உறவுகொண்டாடுவதுமான உன்னதச் சொல் தோழர் என்பதல்லவா தோழர்? எதார்த்தமான பதிவுக்கு நன்றிங்க தோழர்.

vimalanperali said...

வணக்கம் முத்துநிலவன் தோழர்,
ஒவ்வொரு வார்த்தையும் வலிமிக்கது
என்கிறார்கள்.தங்களைப்போன்ற பெரியவர்களும்,
மற்றவர்களுமாய்/
இதில் தோழர் என்கிற வார்த்தை எவ்வளவு
உயிர்ப்பாய் பார்க்கப்படுகிறது,
எதிர்வினையாக என்ன வருகிறது என
எறிந்து பார்த்த கல்தான் இது,
நன்றி கருத்துரைக்கும்,வருகைக்குமாய்/

'பரிவை' சே.குமார் said...

தோழர்... தோழர்... தோழர்... என அருமையான ஒரு பகிர்வு அண்ணா...
வாழ்த்துக்கள்.

அ.பாண்டியன் said...

தோழருக்கு வணக்கம்
தோழர் உழைப்பாளார்களுக்கு தோல் கொடுக்கும் வார்த்தை. சமரச சமுதாயம் மலர மக்களைத் தட்டி எழுப்பும் தாரக மந்திரம். அருமையான எதார்த்தமான பதிவுக்கு நன்றி. படத்தேர்வு மிக அழகு. பகிர்வுக்கு நன்றி..
====
எனது தளத்தில்---- படித்தவர்கள் தான் தவறு செய்கிறார்களா?
http://pandianpandi.blogspot.com/2013/12/blog-post_13.html

கரந்தை ஜெயக்குமார் said...

தோழர் - இந்த வார்த்தைக்கு உள்ளேதான் எவ்வளவு அன்பு, எவ்வளவு நட்பு புதைந்து கிடக்கிறது. அருமை
நன்றி தோழரே
த.ம.3

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் அ பாணடியன் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் தோழரே...

வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

உஷா அன்பரசு said...

அன்பின் நெருக்கமாய்த்தான் இருக்கிறது ' தோழர்' என்ற சொல்..! வழக்கம்போல் ரசித்தேன் உங்கள் பதிவை.. !

MTM FAHATH said...

அருமையான ஒரு பகிர்வு அண்ணா...
வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் சகோதரி உஷா அன்பரசு அவர்களே,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
தோழர் என்ற சொல் அன்பின் நெருக்கம் மட்டுமல்ல,
மனித சமூகத்தின் எளிய உள்ளங்களிலும்,
எளிமையானவர்களுடனுமாய்
குடிகொண்டிருக்கும் சொல்/

vimalanperali said...

வணக்கம் எம் டி எம் பகாத் அவர்களே,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைகுமாக/