6 Dec 2013

டீக்கிளாஸ்,,,,,,,

       
எனக்குத் தெரிந்த டீக்கடை மாஸ்டர்கள் நான்கைந்து பேர் உண்டு.தவிர போகிற வருகிற இடங்களில் டீக் குடிக்கையில் மாஸ்டர்களை பார்த்ததும் உண்டு. 

ஒருவர் டீப் போடுகையில் உடலை ஆட்டிக் கொண்டே போடுவார்.தொந்தி மட்டும் குலுங்கும்.இன்னொருவர் கையை ஆட்டிக் கொண்டே அந்தரத்திற் கும் தரைக்குமாக டீ ஆற்றுவார்.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக டீப் போடும் அழகே தனி தான். அப்படியெல்லாம் டிசைன் டிசைனாக டீப் போட்டுத்தந்த மாஸ்டர்களை இப் பொழுதெல்லாம்பார்க்கமுடியவில்லையே?எங்குதான்போனார்கள் அவர்கள்?
வேறுஎங்கேனும் போய்விட்டார்களா?இங்கேதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் டிசைன்,டிசைன் டீ தான் இல்லை.அமைதியான டீதான்.
  “மாஸ்டர் ஒரு டீ. ம்,,,,,”
  “மாஸ்டர் ரு காபி. ம்,,,,,,,”
  “சீனி கம்மி. ம்,,,,,”
 “ ஸ்ட்ராங்காக .ம்,,,,,
 இதைத்தவிரஅந்தடீமாஸ்டரிடம்ஆரவாரமானஎந்தவித   வார்த்தையையும்,
சந்தோஷத்தையும் காணவில்லை.
மிஞ்ச்சிப் போனால்,என்ன என்றால் என்ன அவ்வளவுதான்.மூன்று ரோடு களும் ஒரு தெருவின் முனையும் சந்திக்கும் முக்கியமான வளைவு அது.
  
அந்தரோட்டின் இரண்டு பிளாட்பாரங்களிலும்அருகருகே குறிப்பிட்ட இடை வெளி விட்டுஇரண்டு டீக்கடைகள் அமைந்திருக்கும்.டீக் கடையென்றால் வடை  இல்லாமலா?
சாய்ந்திரம் ஐந்து மணியிலிருந்துவடையும்,டீயுமாகவியாபாரம்தூள்பறக்கும். சிறியதாக கிழிக்கப் பட்ட இலையில் இர்ண்டு வடை, கொஞ்சம் தேங்காய் சட்னி,என அவரவர்கள் சக்திக்குத் தகுந்தவாறு வாங்கிச் சாப்பிட டீக்குடிக்க ,,,,,,, என கூட்டம் நிறைந்து நிற்பார்கள்.
கடை முதலாளி கைகளும்,கண்களும் போதாமல் தெய்வத்திடம் வரம் கேட் டுக் கொண்டிருப்பார்.காலையில்வேலைக்குப்போன சித்தாள், கொத்தனார்,
தச்சுத்தொழிலாளி,எலெக்ட்ரீசியன்,பிளம்பர்,பெயிண்டர்கைவண்டி இழுப்பவர்,
டயர் வண்டிக்காரர்,மூடைதூக்குபவர்,இன்னும்,இன்னுமானநிறைந்து போன கூலித் தொழிலாளர்,நாள் முழுக்க ரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழைத்து, களைத்து  வீடு செல்லும் போது அப்படியே சாலை ஓரமாக நின்று டீகுடிக்க வசதியாகயாகவோ,செளகரியமாகவோஅப்படிஒரு டீக்கடை அமைந்து போன து சந்தோஷம் தருகிற விஷயங்களாகவே/டீயும், வடையோடு  மட்டும் கடை க்கு வந்து போகிறவர்களின் உறவு முடிந்து போவதில்லை. அங்கே பகிர்ந் துகொள்ளப்படுகிறசுகம்,துக்கம்,குடும்பம்,உறவு,பிள்ளைகள்,படிப்பு,வேலை
பொருளாதாரம் ,,,,,,,,,,, என்கிற நிறைந்து போனவைகள் உண்டு.
அம்மாதிரியான உண்டுகளின் சுகத்திற்காகவே டீக் கடைகளுக்கு வந்து போகிறவர்களும் உண்டு. 
ஒரு உணவு இறங்கிய திருப்தி கூலித் தொழிலாளிக்கு.காசு வந்த சந்தோசம் கடை முதலாளிக்கு.
ஆனால் கடந்த சில வருடங்களாகவேஇந்தகாட்சிகள்அரைமயக்கநிலையில்  இருப்பவனின்   கண் காட்சிகளாக மங்கிக் கொண்டுவருகிறதே.
நகர் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த டீக்கடைகளிலும் இதுதான் நிலையா என்றால் இல்லை . 
 பத்துக்கு இரண்டுபழுதில்லை என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.ஏன் அப்படி?தெரிந்தால் சொல்லுங்கள்.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கும் அப்படித்தான்...!

Yaathoramani.blogspot.com said...

மிகவும் ரசித்தேன்
டீ அல்லது டீக்கடை இல்லாத
உங்கள் பதிவைப் படித்த ஞாபகம் இல்லை
டீக்கடைக்கும் உங்களுக்குமான உறவு
எப்போதும் எனக்கு பிரமிப்பூட்டும்
இப்போதும்,,,
வாழ்த்துக்களுடன்

Anonymous said...

வணக்கம்
விமலன்(அண்ணா)

டீக்கிளாஸ் பற்றி மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/டீக்கடைகள் இங்கு வெறும் டீக்கடைகளாக மட்டுமே காட்சி தருவதில்லை,மாறாக விளிம்பு நிலை மக்கள் கூடுகிற இடங்களாகவும்,அவர்களை சுமந்து கொண்டு நகர்கிற ஒரு அடையாளமாகவும் இருக்கிறது.அங்கு அவர்களது வாழ்க்கைப்பாடு உட்பட அனைத்தும் பேசப்படுகிறது,பகிர்ந்து கொள்ளப்படுகிறது,அது ஒரு தனி உலகம் சுமந்துகாட்சிப்படுகிறது. இது போல் இருக்கிறவற்றைப் பற்றி எழுதலாம்தானே?

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்/

vimalanperali said...

வணக்கம் ரூபன் அண்ணா,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வரிகள் தாங்கிய டீக்கிளாஸ்களில் நிரம்பிக்காணப்படுகிற அரைக்கிளாஸ் டீ தரப்படுகிற,விற்கப்படுகிற கடைகள் இங்கு மனித வாழ்வை பதிவு செய்பவையாக.குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் கூடும் இடங்களாக/

'பரிவை' சே.குமார் said...

எல்லா இடத்திலும் இதே கதைதான்...
ரசிக்க வைத்தது.

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/