19 Jul 2014

ஆகவே,,,,,


கன்னத்தில் கறுப்பு வைத்த ஆடு என்னதான் சொல்லிச்செல்கிறது, 
என்னமும்சொல்லிவிட்டுப்போகட்டுமேஎன்னதான்கெட்டுப்போனது இப்பொ ழுது?
தலையில் வைக்க பூஇல்லை என்றால் என்ன?வாங்கிகொள்ளலாம் ஒரு முழம்/வைத்துக்கொள்ளலாம் தலையில்.பார்க்கவும் மணம் பரப்பும்அதன்நறுமணம் முகரவும் நன்றாக இருக்கும் என்கிற எண்ண த்தில் வாங்கிய மல்லிகைப்பூ அப்படியே இருக்கிறது இன்னும் பையினுள்ளாக/ 
ஏதோஒருநினைவில்தலைக்கிறுக்குபிடித்துவாங்கியதல்லஅந்தப் பூ. மனைவியின் மீது இருக்கிற அன்பும் பாசமுமாய்பூத்தொடுத்தபூ க்காரின் கைபட்டு துலங்க வாங்கியதுதான்,தவிர கேட்டாள். காலை யில் வீட்டை விட்டுக்கிளம்பும்போதே,அதனாலும் சற்று சேர்த்தே வாங்க வேண்டியதாகிப் போனது. 
பழமும்,பாலும் அருகருகாய் வைத்திருந்த கணங்களில் நாசி துளை த்தபூ மல்லிகையாய்உருவெடுத்து இப்பொழுது இவன் கண் முன்னா கவும் பையிலு மாய் அடைபட்டுக்கிடக்கிறது. 
பூக்கள் அடை கொண்டிருக்கும் சாலையில்அதன் மணம் கழன்று எங்கு போனது எனத் தெரியவில்லை,தினந்தோறுமாய் இவன் நடை பயிற்சிக்கு போகிற சாலையின் இடது பக்கமாய் தன் உயரம் காட்டி நிற்கும் காம்பவு ண்ட்சுவரினுள்ளாய்குடிகொண்டிருக்கும்உயர்ந்த பன்னீர் மரங்கள் சொல்லிச் செல்கிற கதையும் சேதியும் திரும்பத் திரும்பஒன்றாகத்தான்இருக்கிறது, பூத்திருக்கிறேன்,மலர்ந்திருக்கிறேன்,உதிர்ந்தும்கொண்டிருக்கிறேன்,இடையிலாகசிறுவர்கள்நூலில் கட்டிவி ளையாடபயன்கொள்கிறேன்.இதுதான் அவை அன்றாடம் இவனுக்குச்சொல்லும் சேதி. 
அப்படி உதிர்ந்து கிடக்கிற என்னை கூட்டி அள்ளிப் போட உயர்ந்த சுவர்கள்கொண்டநந்தவனத்திற்குகாவலாய்இருக்கிறஅவர்தினந்தோறுமாய் சலித்துக் கொள்கிறார் இப்படி. 
“என்ன இது இவர்கள் கொடுக்கிற சம்பளத்திற்கு தினந்தோறுமாய் கூட்டிஅள்ளிப்போடவேசரியாகிப்போகும் போலிருக்கிறதே/அதுவும் பூ பூக்கிற சீசனில்தானேஎன நினைத்து இருந்து விட்டுத் தான் போக ட்டுமே என விட முடியவில்லை அப்படியெல்லாம் அள்ளிப் போட, என நினைத்தாலும் கூட உடல் ஒத்துழைக்க மறுக்கிறதுதான் இந்த வயதில்.இருந்துவிட்டுப்போகட்டும் இப்படியே புலம்பலோடு தொடர் வது தானே வாழ்க்கை/ 
மாடசாமி அண்ணன் வளர்த்த ஆடுகளில் ஒன்றுதான் கன்னத்தில் கறுப்பு வைத்துக்கொண்டு அப்படியாய் அழகுகாட்டிக்கொண்டு திரிகி றது. அலைந்து ஆட்டமும் காட்டிகொண்டிருந்தது. மேயப் போகை யில் ஒரு தரம் ,மேய்ந்து வந்து திரும்பவுமாய் தொழுவம் வந்து அடைய வருகையில் ஒரு தடவை எனகண்சிமிட்டி,கண்சிமிட்டி செல்கிற ஆடு என்னதான்சொல்லிச்செல்கிறது ,என்னவும் சொல்லி விட்டுப்போகட்டும்என்னதான்கெட்டுப்போனதுபெரிதாய்இப்பொழுது. அது இவன் பையில் அடைபட்டுக்கிடக்கிற பூ மல்லிகையாய் பெயரெடுத்து நிலைகொண்டு வந்து விட்ட பின்னே உயரம் கொண்ட சுவர் களுக்குப் பின்னே அன்றாடம் மரங்களிலிருந்து உதிர்ந்த பன்னீர் பூக்களை கூட்டி அள்ளி குப்பையில் போடுகிறவர் தினசரிகளி ன் சாயங்காலங்களில் தனது மகள் சூடிக்கொள்வதற்காய்ஒருமுழம் மல்லிகைபூவாவது வாங்கிச் செல்கிறார் தெருமுக்கில் பூ விற்கிற பூக்காரம்மாவிடமிருந்து/ 
ஆகவே கண்சிமிட்டிச்செல்கிற ஆடும்,அலுத்துக்கொள்கிற மனிதரு ம் தன் தேவை நிமித்தமாய் மனம் திறக்கிறார்கள்தான் அன்றாடம், 
அர்த்தமுள்ளதாகிச் சிரிக்கட்டும் வாழ்க்கை. வாழ்க வளமுடன்/

5 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமையாக இருக்கிறது...

அர்த்தமுள்ளதாகிச் சிரிக்கட்டும் வாழ்க்கை...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கதைக்கரு நன்றாக உள்ளது முடிவை மிக அருமையாக முடித்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
த.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

vimalanperali said...

வணக்கம் Yarlpavanan Kasirajalingam சார்,
நன்றி வருகைகும்,கருத்துரைக்குமாக/