26 Aug 2014

டுபு டுபு மோட்டார்,,,,,,,,



தோனியது.கிளம்பிவிட்டேன்.அதிகாலைநான்குமணிக்குவந்துவிட்ட விழிப்புஅப்படியானதொருஎண்ணத்தையோ,அதற்கானசூழலையோ உருவாக்கியிருக்கவில்லை.ஆனாலுமாய்கிளம்பிவிடுகிறேன்.கொஞ்சம் மனத்தயக்கத்திற்குபிறகு/

இந்நேரம்தாத்தா டீக்கடை திறந்திருக்க வாய்ப்பில்லை,ஆகவே செல் வோம் இன்னும் சிறிது வேளை கழித்து/

இப்பொழுதுஎழுவதாஇல்லைஅப்படியேபடுக்கையில்கிடப்பதா?இருள் சூழ்ந்தி ருந்தவீடும்,ஜன்னல்கிராதிகளின்வழியாய் வெளியிலிருந்து வந்த வெளிச்சமும், சுவரில் பதிந்து உருவம் காட்டுவதாய்/

கம்பி போட்ட ஜன்னல் இல்லை அது,மாறாக கம்பியை வளைத்து டிசைன் தரித்து பூக்கள் பூக்க செய்திருந்த ஒன்றாக/அடர்பச்சையும், வெள்ளை நிறமுமே அந்தக்கம்பிக்களுக்கு அடிக்க ஏற்றது என்கிற பெயிண்டிங் விதிகளை மாற்றி முதன்முதலாக கறுப்புக்கலரும், அரை வெள்ளையுமாய் அடித்துக்கொடுத்தார் பெயிண்டர் மிக்கேல். பார்த்த மாத்திரமே பளிச்சென சிரித்து தன் முதல் பேச்சிலேயே மனதை கழட்டி வைத்து விடுகிற மனிதர்.

நான்கு மணி இந்நேரம் கொஞ்சம் நேரத்தைக்கூட்டிக்காட்டியிருக்க லாம் .சிறியதும், பெரியதுமாய் இருக்கிற முட்களின் கூட்டுப் பிணை ப்பில்காட்டிச்செல்கிறநேரம்எவ்வளவுஎனசரியாகதெரியாவிட்டாலும் கூடஇந்நேரம்மணி4.30அல்லது5.00ஐஎட்டித்தொட்டிருக்கலாம்என்கிற நினைப்பில் எழுந்து லைட்டைப் போட்ட சமயம் கடிகாரம் சொல்லிச் சென்ற மணி 4.25/
அலைபாய்ந்தஎண்ணங்கள்நிறைந்துஅவிழ்ந்துகிடந்தமனதை அள்ளி முடிய பிரியமில்லாமல்அப்படியே விட்டவாறுமென்நடை பயின்று முகம்கழுவச் செல்கிறான்.முகம்என்றால்முகம் மட்டுமேகழுவுவது அவனதுஅகராதியில்இல்லை.கை,கால்,உடல்எனஒருமினிகாக்காய் குளிப்பாகவே இருக்கிறது அவனது முகம் கழுவல்/

கையில்தட்டியரோமக்கற்றைகள்இன்றுஷேவிங்செய்துவிடவேண்டும்
கண்டிப்பாகஎனச்சொல்லிச்செல்கிறது.மனம்சொன்னசெய்திக்குசெவி
மடுக்காமல்எப்படிவிடமுடியும்அலட்சியமாக/

கழற்றிய செவியின் உட்புலன்களை கோரிக்கைக்குக் கொடுத்து விட் டுஉடல்துடைத்த வேளை விழிப்படலம் பட்ட துண்டின் கோடு களும், கட்டங்களும்இப்படிஒருடிசைனில்சட்டைஇருந்தால்நன்றாகஇருக்கும் என்றது.

விளைவித்தவரும்,நூற்றவரும்,பாவுமுக்கியவரும்,சாயம்கலந்தவரு ம், தறி நெய்த வ ருமாய் ஒரு நிமிடம் தெரிந்து மறைந்தார்கள் துண் டில்/
அலுவலக ட்ரெய்னிங் நிமித்தமாய் ஒரு முறை கோயம் புத்தூர் சென் றிந்த போது எடுத்து வந்த மஞ்சளும்,சிவப்புமாய் கட்டம் கட்டிய துணி மிகவும் நன்றாக இருந்தது.அதில் தைத்த சட்டையை ஒரு வருடம் போட்டிருந்தான்.வருடத்தின் முடிவில் கொடியில் தொங்க போட்டிருந்த துணியை எலி கடித்துப்போட்டுவிட அன்றிலிருந்து போட விடுபட்டுப்போன கட்டம் போட்ட சட்டையை இன்று வரை போடமுடியவில்லை.அது ஏன் எனவும்இன்றுவரை இவனுக்குத் தெரிய வில்லை. தெரியவில்லை.ஒரு வேளை அப்படித்துணிகள் ஏதும் கிடைக்கவில்லையா அல்லது இவனது தேடல் குறைந்து போனதா தெரியவில்லை.

இப்பொழுது பையப்பைய வருகிறது,நேற்று இரு சக்கரவாகனத்தில் இவன்சென்றுகொண்டிருந்தவேளைஎதிரேவந்தகல்லூரிபேராசிரியர் பெரிது பெரிதாய் கட்டம் கட்டம் கட்டப்பட்டிருந்த சட்டையை அணிந்து இன் பண்ணியிருந்தார். பச்சைக்கலரில் ஓடிய தடிமனான கோடுகளும்,அரை வெள்ளையிலுமாய்இருந்த சட்டையும்,பிரவ்ன் கலருமாய் இருந்த ஃபேண்டும் பார்க்க நன்றாகவே இருந்தது. பிரா ண்டட்போலிருக்கிறது.எப்படியும்1500ரூபாய்க்குகுறையாமல்இருக்க லாம்.இவனானால்அந்தவிலையில்இரண்டுஜோடிகள்எடுத்திருப்பான். சரிதான்அவரால்அப்படியோசிக்க முடிகிறது,இவனால் இப்படி யோசி க்க முடிகிறது.

கட்டியிருக்கிறகட்டங்களும்,ஓடுகிறகோடுகளுமாய்சொல்லிச்செல்கிற விஷயங்களும்நிர்ணயிப்புகளும்நிறையவே/அப்படியானநிறையான வைகளை சுமந்து கொண்டுடீசாப்பிட்டுவிட்டு,பாத்ரூம் பல்துலக்கல், குளியல்,,,,,,,,,என்கிற படிமங் களை முடித்த வேலை மணி ஆறரை ஆகி விட்டது.

ஆறு மணிக்குள்ளாக வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என நினை த்தவன் இப்பொழுது ஆறரையின் வாசலின் கால் வைத்தவனாய்/

இலக்கற்றபயணங்கள்மனம்தொடுபவையாகவே/எங்கும்போகவேண் டியவேலைஏதும்இருந்திருக்கவில்லைஇவனுக்குஅந்த அதிகாலைப் பொழுதில். அரவங்கள் அவ்வளவாய் இல் லாத காலைப் பொழுதில் அப்படியே ஒரு ரவுண்ட் சென்று வந்தால் மனதுக்கும்,உடலுக்கும் இதமாக இருக்கும் என்கிற நினைவில் இவன் சென்ற வழி மேம் பாலத்தின் மேலாய் இருந்தது. சுத்தமான காற்றும் சுகந்தமான வாசமும் வீசிய காலை வேலையில் அடுத்தடுத்தாய் கடந்த இரண்டு டவுன் பஸ்களும்,இரண்டு லாரிகளும் எவ்வளவு பேரை வைத்துக் கொண்டும்,எவ்வளவுமூடைகளைஅடைத்துக்கொடும்இவ்வளவு வேகம் காட்டு கிறது எனத்தெரியவில்லை.

பாலத்தின் இறக்கத்தில் வலது புறமாய் செல்கிற சாலையில் கடைசியில் இடமும்,வலமுமாய் மாறி,மாறி காணப்படுகிற மூன்று மில்களுக்கு மூடை சுமந் து கொண்டு போகிறது போலும் லாரிகள். ஊர்ந்து விரைகிற பஸ்கள் கிராம ங்களின் வழித்தடங்கள் நோக்கி/

இன்னும்சிறிதுநேரத்தில்உழைப்பின்அடையாளம் சுமந்த மனிதர்கள் அதே டவுன் பஸ்ஸில் வந்து மூன்று மில்களுக்குமாய் வேலைக்குச் செல்வார்கள். ஜேம்ஸ்தோழர் கடைஇல்லை,தங்கப்பாண்டித் தோழர் கடையில் தேநீர்அருந்தி கொண்டேகுமாருக்கு போன்செய்கிறான் கண்ணில்பட்டபருப்புவடைகளையும்,உளுந்தவடைகளையும்பார்த்த
வாறே/

”இன்றையபொழுதின்ஆரம்பத்தில்நம்காலைநேரசந்திப்புநிகழட்டும். நின்று கொண்டிருக்கி றேன் தோழர் தங்கப்பாண்டி கடையில். உங்க ளதுசந்திப்புவேண்டியும்டீசாப்பிடவுமாய்”எனச்சொல்லிய வார்த்தை களும், முளைவிட்டரும் பிய ஆசையும் எதிர் முனையில் எடுக்கப் படாத போனின் பேச்சற்றலில் கரைந்து போகிறது.

குமார் இல்லையா அல்லது இன்னும் தூக்கத்திலிருந்து எழும்பவில் லையா?
கண்ணனுக்குப்பேசினான்.பெரிதாகஒன்றுமில்லைநண்பரேஇப்பக்கம்
வந்தேன்,கண்ணுக்குள்அரித்தது.வரலாமா உங்களைப்பார்க்க,,,,,? என வார்த்தையில் வரைந்த மனுவை அனுப்பிவிட்டு கிளம்புகிறான் கண் ணன் இருக்கும் திசை நோக்கியும்,கண்ணனை சந்திக்கவுமாய்/

இவன்வீட்டிலிருந்துகிளம்புகிறவேளைஇப்படியெல்லாமுமாகநினைத் திருக்கவில்லை. வாய் ப்பிருந்தால் சந்தித்துவிட்டு வரலாம் என்கிற எண்ணம் மேலோ ங்க சென்றதுதான்.

இலக்கிலாமல்பயணிப்பதும்,பின்நண்பர்களிடம்பேசுவதும்அவர்களை
சந்திக்கச் செல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

பகிர்வும் நன்றாகத்தான் இருக்கிறது அண்ணா....
அருமை.

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/