9 Aug 2014

பார்வை ஒன்றே போதுமே,,,,,,

மருத்துவமனைவாசல்களிலும்அதன்உள்,வெளி அறைகளிலும் எப்போது மே ஒரு பத்துப்பேருக்கு குறையாமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மாறும் பருவநிலைகளுக்கு ஏற்பவும்,நகர்கிற நாட்களின் தட்பவெட்ப நிலைகளுக்குஏற்பவுமாய்இதன்விகிதாச்சாரத்தில்வித்தியாசமிருக்கலாம்.

அதிலும் சிறப்பு மருத்துவர் என்றால் தனியாக எதுவும் சொல்ல வேண்டி யதில்லை.

மருத்துவமனைவளாகம்,வசதிமருந்துவாசனையற்றஅதன்சுகந்தம்குறுக் கும்,நெடுக்குமாய் நடமாடும்பணியாளர்கள் மற்றும் இதர ,இதர என அடே யப்பா,,,,,,நேற்று மாலை அலுவலகம் முடிந்து வரும் போது -------------மருத்துவரை பார்க்கலாம் என்கிற யோசனை.

சமீபகாலமாக தொந்தரவு பண்ணிக்கொண்டிருக்கும் “அல்சருக்கு” பார்க்க வேண்டும் என்கிற முடிவு எடுத்த போது எனது இருசக்கர வாகனத்திற்கு கீழே நழுவி பின் சென்ற சாலை என்னைக்கொண்டு போய் நிறுத்திய இடம் அந்த குறிப்பிட்ட மருத்துவரின் மருத்துவமனையாக இருந்தது.

இல்லாதவர்களின்கடவுளாகஇந்தபகுதிமக்களுக்குஆரம்பகாலத்தில்காட்சியளித்தவர்இன்று வரை அப்படியே தெரியவும் வெளிப்படவும் செய் கிறார். 

நிறைந்துவீடுகள் அடுக்கப்பட்டிருந்த தெரு அது.எதிரெதிர் சாரியில் குடியி ருந்த மத்தியதர வர்க்கர்களை சுமந்து கொண்டிருந்த வீதி மருத்துவ மனையையும் சுமந்துகொண்டிருந்தது.

ஆமாம்.எப்பொழுதும்,எல்லா நகரங்களிலும் வீதிகள் சுமந்து கொண்டும்,
சூழ்க்கொண்டவாறும்காட்சிப்படுகிறதுதான்.அந்த காட்சிப்படுதலில் நட்பு, பகை,பொறாமை,இன்பம்,துன்பம்,கோபம்,ஆற்றாமைசண்டை,சச்சரவுகள் எல்லாம்கலந்துஇருப்பவையாகவும்,கண்ணுக்குத் தெரிபவையாகவும்/

வாகனத்தின் ஸ்டாண்டை இழுத்துப்பிடித்து நிறுத்திய போது எனது கண்களில் புலப்பட்டதுமருத்துவமனைவாசலில்கிடந்த செருப்புக்கள்தா ன்.

ஒன்று,இரண்டு,மூன்று,,,,எனஎண்ணிப்பார்த்துமுடியாமல்விட்டுவிடுகி றேன்.எப்படியும்15,அல்லது20ஜோடிகளுக்குகுறையாமல்இருக்கலாம்.பரவாயில்லை.காத்திருந்துபார்த்துவிட்டுப்போகலாம்.என்கிறநினைப்புடனேஉள்ளே செல்கிறேன்.

எல்லோரும்மரப்பெஞ்ச்சிலும்,ப்ளாஸ்டிக் சேரிலுமாய் அமர்ந்து கொண்டி ருக்கிறார்கள் மருத்துவபிரதிநிதி உட்பட/

நான் அமர்வதற்கு இடம் பார்க்கிறேன்.இல்லை.கையைக்கட்டிக்கொண்டு ஒரு ஓரமாக நின்று விடுகிறேன்.

சுழன்று கொண்டிருந்த மின் விசிறியின் நிழல் ட்யூப் லைட் வெளிச்சத்தி ல் தரையில் சிந்தி சிரித்துக்கொண்டிருந்தது.தொலைக்காட்சியில் ஏதோ பெயர் தெரியாத மெகாத்தொடர் ஓடிக்கொண்டிருந்தது.

தினசரிகளின் மாலை நேரங்களை ஆக்கிரமிக்கும் இந்த மெகாத் தொடர் கள் எங்களது கம்பெனி மேலாளர் ஒருவருக்குமிகவும் பிடித்தமானதாக/

எரிந்துகொண்டிருந்தட்யூப்லைட்களும்,சுழன்றுகொண்டிருந்தமின்விசிறி களும்,ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சியும் அங்கிருந்த வர் க ளின் தற்காலிக ஆசுவாசமாக/

மருத்துவம் பார்க்க வந்திருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக மருத்து வரை போய் பார்த்து வந்து கொண்டிருந்தார்கள்.

காலம் கரைந்து கொண்டிருந்தது.வீட்டிலிருந்து மனைவி போன் பண்ணி விட்டாள்.

நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது.வந்து ஒருமணி நேரமாகிப் போகிறது. போகும்போது காய்கறிவாங்கிப்போக வேண்டும்.இரண்டு நாட்களாய் பல்வேறு வேலை காரணமாக முடியாமல் போன விஷயத்தை இன்று சாத்தியப்படுத்த வேண்டும்.இல்லையெனில் மனைவி வையக்கூடும்.

ஜோடியாக தனியாளாக,குடும்பமாக காட்சி தந்தவர்களிலிருந்து கழன்று கைக்குழந்தை ஒன்று நின்று கொண்டிருந்த என்னை நோக்கி தனது பிஞ்சுக்கரங்களையும்,பாதங்களையும் கீழூன்றி தவழ்ந்து வருகிறது கையை,கையை அசைத்தவாறும்,சிரித்தவாறும்,வாயிலிருந்து எச்சில் ஒழிக்கியவாறும்/

நானும் சிரித்துக் கொண்டே அந்த பூம்பிஞ்சை நோக்கி கையை அசைத்த வாறே செல்கிறேன்.

எங்களுக்குள் இருந்த தூரமும்,சுற்றி இருந்த வெளியும்,மனிதர்களும் காணாமல் போக தனி உலகத்தில் நுழைந்தவர்களாய் ஆகிப்போகிறோம் .
சிறிதுநேரம்கழித்துசட்டெனமீண்டு நினைவு வந்தவனாக வீட்டுக்குக் கிளம்புகிறேன்.

இனிமருத்துவம்எதற்கு?

போகிற வழியில் இதுமாதிரி இரண்டு மூன்று குழந்தைகளின் சிரிப்பை பார்த்தாலே போதுமே/

8 comments:

மகிழ்நிறை said...

உண்மை தான்!!இனி மருத்துவம் எதற்கு!!
தம 1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா

தாங்கள் சொல்வது உண்மைதான் குழந்தையின் சிரிப்பில் ஒரு மகிழ்ச்சிதான்.. எல்லோரையும் மகிழ்விக்கும் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் நண்பரே குழந்தைகளின் சிரிப்பினைப் பார்த்தபிறகும்
மருத்துவம் தேவையில்லைதான்
அருமை
தம3

vimalanperali said...

வணக்கம் கரந்தைஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் அண்ணா
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yarlpavanan said...

அருமையான பதிவு

vimalanperali said...

வணக்கம் காசிராஜன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/