30 Sept 2014

கண்ணாடிபிம்பம்,,,,,,,,


எனக்கு 25 வயது.உனக்கு 22.நான் சைக்கிளிலும், நீங்கள்இரு சக்கர வாகனத்தி லுமாய்.எனதுவண்டிமிதித்தால்போகிறது.உங்களதுவண்டிவிசையைதிருகினா லேயே வேகப் படுகிறது.உங்களது வேகத்தி ற்கு நான் வரவோ,உங்களை பின் தொடரவோ இயலாது தான்.ஆனாலும் நாட்களின் நகர்தலில் வாரத்திற்கு ஒரு முறையோ,இரு முறையோ உங்களைப்பார்த்துவிடநேர்ந்து விடுகிறது. சமய ங்களில்அதன் எண்ணிக் கை கூடிக் குறையலாம்.

நீங்கள் என்ன,நான் என்னகூடிக்கொண்டிருக்கிற எண்ணிக்கைக்கணக்கிட வருகிற போது T K R சாலையாய் இருக்கிறது. மதிய வேளை ஆள் நடமாட்டம் மந்தப்பட்டிருந்தநேரத்திலுமாய்கருப்புப்பேண்ட்,வெள்ளைச்சட்டைகாம்பினே
சன் போலஜீன்ஸ்பேண்ட்டும் ஏதாவது ஓரு கலரில் சர்ட்டோ,அல்லது டீ சர்ட்டோசுடிதார்,டாப்ஸ்சேலைஎனஉருவகப்பட்டமனிதர்களுக்குமத்தியிலாக
வும், அவர்களைப் பிளந்தும்சென்ற இரு சக்கர வாகனங்களுமாய் சென்ற சாலையில்முளைத்துத்தெரிந்தும் சென்று கொண்டிருந்த நான் பஜாரிலிருந்து வந்து கொண்டிருந்தேன். ஜீன்ஸ் பேண்ட்டும் ஏதோ ஒரு வெளிர் பச்சை நிறத் திலும் இடையில் கோடுகள் ஓடிய டீ சர்ட்டுமாய் சென்று கொண்டிருந்தஎன் எதிரே இரு சக்கர வாகனத்தில் நீங்கள்வந்து கொண்டிருக்கிறீர்கள்.

இருவருக்குமான இடைவெளி 10 அல்லது 15 அடி இடைவெளி இருக்கலாம். சைக்கிள் சக்கரத்தில் ஒட்டியிருந்த அழுக்கும்,மண்ணுமாய் என் சைக்கிளை மிகப்பழையதாயும், பளிச்சென துடைக்கப்பட்டிருந்ததால் தங்களது வண்டி புதியதாயுமாய் காட்சிப்பட்டுத் தெரிகிறது.

எனக்குத்தெரிந்து ஐந்து வருடங்களாக அந்தவண்டி தங்களிடம் இருப்பதாக அறிகிறேன்,ஹெல்மெட்,லைசென்ஸ்,ட்ரங்கன்ட்ரைவ்,,,,,,,,எனஇன்னும்இன்னு
மான நிறைந்து போன பிரச்சனைகளுக்கு மத்தியிலாக எப்படியோ சமாளித்து வண்டியை ஓட்டி காலம் தள்ளி வருகிறீர்கள் என அறிகிறேன்,இரு இரு சக்கரவாகனத்திற்குஇவ்வளவு கட்டுப்பாடுகளா என ஆச்சரியப்பட முடிகிற நேரத்திலும் கூட/

ரோடும் ரோட்டில் பூத்திருந்த மண்ணும் ரோட்டோர புழுதியும் மணக்க மறந் திருந்த வேளையாகஅந்நேரம்.சாலையையும், சாலையோரத்துக்கடைகளை யும்பார்த்தவாறுமாய்வெள்ளைவேஷ்டியும்,ஏதோஒருவெளிர்க்கலரில்சட்டை யுமாய் அணிந்திருக்கிறீர்கள் நீங்கள்.

அன்றும்இப்படித்தான்அப்புராணியாய் ஒரு கலரில் வேஷ்டியும் சட்டையும் அணிந்து இருந்ததாய் நினைவு/என்னஅப்படிஎனத்தெரியவில்லை. உங்களது ஆடைகளை கவனிக்க மறந்து உங்களைமட்டுமே கவனித்த போது மேல் பட்டன் இரண்டும் மாட்டப் படாத சட்டையும், அள்ளிச் சொருகிய நாலு முழ வேஷ்டியுமாய் தெரிகிறீர்கள்.அவ்வளவு வேகமாக நீங்கள் வண்டி ஓட்டி நான் பார்த்ததில்லை.எந்தகவனத்தில்எதைநோக்கிப்போய்க் கொண்டிருந்தீர்களோ,  தெரியவில்லை.என்னைப்பார்த்ததும்சடக்கெனபிரேக்கிட்டு நின்று விடுகிறது வண்டி.அது வரை அலைபாய்ந்த மந்தும் கண்களும் கொஞ்சம் ஆசுவாசம் கொள்பவையாக/ கண்களில் தேங்கியிருந்த குழப்ப மும் உடல் நடுக்கிய பதட்ட முமாய் காணப்பட்ட நீங்கள் வண்டியை நிறுத்தாம லேயே அதேபதட்ட த்துடன் காணப்படுகிறீர்கள்.வண்டியிலிருந்துஇறங்கத்தோணாமலும்,ஏதும்
பேசத்தோணாமலுமாய்/

என்ன சார் என்ன விஷயம் என தோளில் கை வைத்ததும் தலை குனிந் தவராய்“வீட்டுலபையன்தூக்குமாட்டிக்கிட்டான்”என்கிறீர்கள்.கல்யாணத் துக்குபோயிருந்தோம்.புருசனும்பொண்டாட்டியுமா,போயிட்டுவந்துபாக்கையில பேன்லதொங்கீட்டுஇருக்கான்பாவிப் பய.நாங்க பண்ணுன ஒரே தப்பு அவன வீட்ல தனியா விட்டுட்டுப்போனது. அப்பிடிப் போயிருக்கக் கூடாது. என அழு தே விட்டீர்கள் பாவம். நானும் உங்களுடன் மௌனம் காத்து குற்ற மனோ நிலைக்கு ஆளானவனாய் கிளம்புகிறேன்.

சாலையும் சாலையில் விரைகிற மனிதர்களும்,மண்ணும், மரங்களும் சாலை யிலும், சாலை ஓரங்களிலுமாய் படிந்துகிடந்த தூசிகளும் நம் பேச்சை கேட்ட வையாய்தெரிகிறது.என்னஏதெனவிபரம் கேட்க,நானும், சொல்லத் துணிவ தற்குமனபலம்அற்றவராய்நீங்களும்நிலைகொள்வதற்குதயாராய் இல்லாதது யரத்தருணம்அது.ஊன்மத்தம்கொண்டமனதுகள் இரண்டு ஊமைத்தனமாய் அழுது வடித்த கண்ணீர் அந்த புளிய மரத்துச் சாலையில் இரண்டு சொட்டா வது விழுந்து தன் கதையை சொல்லியி ருக்கலாம்.

நீங்களும்,நானும்அவ்வளவுஅந்நியோன்யம்கலந்துபழகியவர்களில்லை. பார்க்கும்தருணங்களில்பேசிக்கொள்வோம்.முகமன் சொல்லி சிரித்துக் கொள் வோம்.அவ்வளவே/ மிகவும் அரிதாக எங்காவதுஒருடீக்கடையில் ஒன்றாய் டீசாப்பிட்டிருப்போம்.ஏதாவது ஒரு தினத்தில்என்கிறஉறவைத் தவிர நம்மில் வேறெதுவும்துளிர்த்தும்கிளைத்தும்காணப் பட்டிருக்க வில்லை.

நான்குடியிருந்ததெருவிலிருந்துஆறாவதுதெருவில்வசித்தீர்கள்.நான்குடியிரு ந்தவீட்டின்சொந்தக்காரர்உங்களதுவீட்டிலிருந்துநாலாவதுவீட்டில்குடியிருந்த
வர். உங்களுக்குள் என்ன பழக்கம் என்பதுஎனக்குத் தெரியவில்லை.

சிறிது,சிறிதாய் சேர்த்து வீட்டின் சொந்தக்காரர் என் மீது பெரிய பட்டி யலாய் வாசித்த புகாரை மனதில் தாங்கிக் கொண்டிருந்த ஒரு நாள தின் நகர்வில் என்ன சொல்கிறார் உங்களது வீட்டின் உரிமையாளர் என கேட்கிறீர்கள்.நீங்கள் மிகவும் தற்செயலாகவும், யதேச்சையாகவும்/

வீட்டுக்காரர் என்னிடம் வாசித்து விட்டுப் போன புகார் மனுவை தங்க ளிடம் ஒப்படைக்கிறேன். எல்லாம் கேட்டுவிட்டு சரி போங்கள் கவலை கொள்ளா மல், இனி இது என் பிரச்சனை எனச் சொன்ன ஒரு வார காலத்திற்குள் வீட்டின் உரிமையாளர் என்னிடம் கனிவாகப் பேசியது மறக்கஇயலாதது. ஆனால் அப்போதெல்லாம்தெரியாது.அவரது வீட்டுப் பெண் பிள்ளை மீது உங்களது பையனுக்கிருந்த மன மையல்.அது காத லா அல்லதுஇருவித மன ஈர்ப்பாத் தெரியவில்லை. வீட்டுக்குத் தெரியா மல்எங்காவது தூரங்களில் சந்தித்துப் பேசிக்கொள்வார்கள்போலும்.அவர் களின் அந்தப்பேச்சும் சந்திப்பும் பரஸ்பரம் இருவர் வீட்டிலுமாய் படம் பிடித்துக்காண்பிக்கப்பட்ட நாளதின் நீட்சியில்தான் அவனது மரணம் நிகழ்ந்துபோகிறது.

12 ஆம் வகுப்புப்படித்துக்கொண்டிருந்தான்.சீருடைஅணிந்த சின்ன உடலது. 12+5=17 வயது மனதிற்கு என்ன பிடிபட்டிருக்கும் காதல்? பரஸ்பரம் இருவர் வீட்டிலும்அதுதான்நிலைபோலும். சொல்லிய சொற்க ளும்,பேசிய பேச்சுக்க ளும் பயனற்றுப் போன முத்திய நாட்களின் பொழுதில் முடிவை தேடி கொள் கிறான்.சடுதியாக.

கலர் கலராய் அவன் உடுத்தித்திரிந்ததும் சைக்கிளில் வித்தை காட்டி ஊருக் குள்ளும் தெருவுக்குள்ளுமாக அவன் வந்த வலமும் பேசித்திரிந்த பேச்சுக் களும் இன்னும் கண்ணுக்குள் நிற்பதாய்/என அவரிடம் இன்னும் பேசித் திரியத்தோணுகிறது.

வருத்தம்சுமக்கிற போதும் சரி,சந்தோசம் கொள்கிற போதும் சரி பெரும் பாலுமாய் டீக்கடைகளே தஞ்சம் கொள்கிற இடமாய் ஆகிப்போகிறது.

முக்கு ரோட்டின் நீண்ட பகுதியாய் வாலோடியாய் இருந்த சாலையது. எதிர் பார்த்தஒன்று இல்லை என நண்பனின் தொலைபேசி பேச்சில் உறுதிப் பட்டதும்வருத்தம் கொண்ட மனது சென்று கொண்டிருந்த நீளச் சாலையில் இருந்து விலகி வலது பக்கமாய் ஒதுங்கி டீக்கடையில் தஞ்சம் கொள்ள ஆசை கொள்வதாய்/

டீக்கடைகள்எப்போதும்டீக்குடிக்கமட்டுமன்றுஎன்கிற உண்மை உறைத்தது சரியாக நான்கு வருடங்கள் முன்பாக/உறைத்த உண்மையில் உள்ளுள் உள் சென்று கிளறிப் பார்க்க நேரமும்,எண்ணமும் இல்லாமல் டீக்கடையோடு ஒன்றிப்போனபோது என்னில் புலப்பட்ட தெளிவு டீக்கடைகளை மென்மை பூத்தபகுதியாகவும்,வாஞ்சை நிறைந்த ஒன்றாக வும் மாற்றிக் காட்டுகிறது.

நான் போன வேளை மதியம் ஒரு மணி இருக்கலாம்.ஒருமணிக்கென்ன டீ வேண்டிக் கிடக்கிறது, அதுவும் சாப்பிடப்போகிற வேளையில்?என கேட்பவ ர்களிடம் சிரித்து வைப்பேன். அவர்களுக்கும் தெரியும்,இவன் டீக்காக நாவின் சுவையறும்புகளை அடகு வைத்தவன் என்பது. சைக்கி ளுக்கு ஸ்டாண்டை தாங்குகட்டையாக்கிவிட்டுடீக்கடையைஏறிட்ட போ து அவர்கள் கடை முன் வெளியைக்கூட்டிக்கொண்டிருந்தார்கள்.அதில் கசங்கிய டீக்கப்புகளும் , மடிக்கப்பட்டிருந்த பேப்பர்களுமாய்/

டீக்கு சொல்லி விட்டுநின்ற வேளையில்வந்தநண்பர்ஒருவர்” இப்போதான் கம்பெனிக்குப் போய் வந்தேன்.லேபர் பிரச்சனை மேனேஜரிடம் பேசிவிட்டு வந்தோம்” என்றார்.இது மாதிரியான மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம். தொழிலாளர்களுக்காகதனதுநேரம் காலம் எல்லாம் செல வழிக்கிற மனது யாருக்கு கைவரபெறுகிறது இங்கு.அப்படி கைவரப் பெற்ற ஒருவராய் இவரை பார்க்க முடிகிறது.அண்ணாவைப்போல/

அந்நேரம்வேகவேகமாய்டீப்பட்டறையிலிருந்துகழண்டடீமாஸ்டர்வடைகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று வடைத்தட்டில் தூள் களாய்உதிர்ந்து கிடந்ததை வாரி அள்ளி ஒரு பேப்பரில் கட்டிக் கொடுக்கிறார் கடைக்கு வெளியே நின்ற மூதாட்டியிடம்/

குடித்த டீக்கு சில்லறையை தேடி எடுத்து கொடுத்து விட்டு சைக்கிளில் ஏறி இரண்டு அல்லது மூன்று அடிகள் மிதித்திருப்பேன் .மிகச்சரியாக எதிரே இரு சக்கரவாகனத்தில்நீ/உன்எதிரேசைக்கிளில்நான்.உன்பார்வையில்ஒரு பளிச். அதை மின்னல் என்கிறார்கள் காதல் பாஷையில்/ ஆனால்எனக்குத்தான் அது என்னவெனசொல்லத் தெரியவில்லை. உன் வீட்டை கடந்து போகிற தருணங் களிலும்,நீ வீதியில் இருக்கிற கடைக ளில் தென் படுகிற நேரங்களிலுமாய் பளிச்சென அதேபார்வைதான். அந்நேரம்வரைசும்மா இருந்த உன்பார்வை என்னைப் பார்த்ததும் அர்த்தம் கொள்கிறதைப்போல இப்போதும் அர்த்தப் படுத்தி கொள்ள முடிகிறதுதான்.

ஒரு முறை அல்ல,பலமுறை இப்படி எதிரெதிராய் நம் விழிகள் கழண்டு பரஸ்பரம் இருவரின் மனதுக்குள்ளுமாய் ஊடுருவிய நிகழ்வு தற்செயல் என ஒத்துக்கொள்ளமுடியவில்லை.அதுஎதாகஇருந்தாலும்அதன்அர்த்தத்திலும், பிடியிலும்உறுதியாகஇருக்கட்டும்.

ஆனால் அப்படி சந்தித்துகொண்ட பார்வைகள் காதலாய் நிஜப்படுகிற போது எனது டீக்கடை அனுபவத்தையும்,வாழ்வியல்யதார்த்தத்தையும் பேச வேண் டும் என நினைக்கிறேன்.

அப்படி பேசி பரிமாறிக் கொள்ளப்படுகிற வாழ்க்கை எதார்த்தம் நம்மில் கை கூடுமாயின் 22 ம் 25 யும் கொண்ட மனங்கள் இரண்டும்கை கோர்க்க வாய்ப் பிருக்கிறதுதான் அன்பே/

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எழுத்திற்கு இணையான படம்
அருமை நண்பரே
தம 1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

J.Jeyaseelan said...

உங்கள் வழக்கமான நடையிலிருந்து சற்றே மாறுபட்ட நல்ல ஆக்கம் சார்...

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/