11 Oct 2014

குச்சி வீடு,,,,,,,,

   
கண்ணா டீபோட்டாச்சா எனக்கேட்டவர் பால்க்காரர் என அறியப் படு கிறார்.மெலிந்ததேகம்.சிவந்தமேனி.வளர்ந்துதெரிந்தார்.ஒட்டவெட்டிய முடியைஇழுத்துபடியவாரிஇருந்தார்.அதுவும்பார்க்கஒரு புது விதமா ன ஹேர் ஸ்டைலாக அல்லாமல் நன்றாகவே இருந்தது. சற்றே லூசாக காணப்பட்ட முழுக்கைசட்டையும்,கட்டம் போட்டகைலியி லும் நன்றாகவே சிரித்துதெரிந்தார்.

டீக்கடைக்கு பக்கத்தில் வலது புறமாய் இருக்கிற லாரி ஆபீஸ்,அங்கு எந்நேரமும்குழுமிஇருக்கிறவெளியூர்டிரைவர்கள்கிளீனர்களைக்காண லாம்.அவர்களின்பேச்சும்,மொழியும்,நடப்பும்ஆளுக்குஆள்சற்றேகூட  அல்லாமல் நன்றாகவே வித்தியாசப் பட்டுத் தெரியும்.

ஓருவர் கேரளா என்றால்,மற்றொருவர் ஆந்திரா.இன்னமும் ஒருவர் ஹிந்தி பேசுவார். இன்னமும் ஒருவர் வேறொரு பாஷையில் மூழ்கி இருப்பார்.எட்டுக்கு எட்டே அளவு கொண்ட அந்த சின்னோண்டான லாரி ஆபீஸில் அனைத்து மாநில மொழி பேசுகிற டிரைவர்களையும் எளிதாகக் காணலாம். அவர்களின் பழக்க வழக்கமும் அங்கே சிதறிக் கிடப்பது கண்கூடு.

வெற்றிலை,பாக்குகளிலிருந்து,பீடிசிகரெட்வரைஎல்லாவற்றிலுமாய் அவர்களின்தனிப்பட்டடேஸ்ட்களைபார்க்கக்கிடைக்கும்.அள்ளிசிதறி ய ரங்கோலியாய் ஏ பலே, பலே, பலே,,,,,,,,,,,, என பஞ்சாபி சிந்து பாடிச் சிரிக்கும்.

கடையின் வலப்புறம் இப்படி என்றால் இடதுபக்கமாய் அமைந்துள்ள பார்சல்சர்வீஸ்அலுவலகத்திலிருந்துவரும்உழைப்பின்மக்கள்அப்பொ ழுதான்வந்திறங்கியபார்சல் லோடை இறக்கிவைத்து விட்டு உழைப் பின் வேகம்ஆறுவதற்குமுன்பாய்சூடாய்ஒரு டீசாப்பிடவருவார்கள்.

சட்டையில்லாதவெற்றுமேனியில்தொங்கவிடப்பட்டதுண்டின்முனை
உடலின்வேர்வையில் பட்டு நனைந்திருக்க அதை அள்ளி எடுத்து வேர்வைதுடைத்துக் கொண்டு வருவார்கள் உடல் மிகுந்த வியர்வை வாசத்துடன்.

துண்டால்துடைத்தால்வியர்வைபோய்விடுகிறது.ஆனால்அவர்கள் உடல்அப்பியஅலுப்பைபோக்கஎதைக்கொண்டுதுடைப்பார்கள்.இப்படித்
தா ன் டீக்கடையில் தஞ்சம் அடைகிறார்கள்.

டீக்கடையில் போடப்பட்டிருக்கிற பெஞ்சும் ,அங்கு அடுக்கி வைக்கப் பட்டிருக்கிறவடையும்,பாட்டில்களில் அடைபட்டுகிடக்கிற முறுக்கு, கடலை மிட்டாய் ரகங்களும் அவர்கள் கைகளிலும் அவர்களது வாயி லுமாக/

அரைபடுகிறநேரங்கள்தவிர்த்து தன்னை யாரும் கைக்கொள்ளாமல், அல்லது கைப்பற்றாமல் பார்த்துக் கொள்கிற கடைக்காரர்களுக்கு அதுகள்சொல்லும் நன்றி தனியாமே,அப்படியா? எனக்கேட்கிற பால்க் காரர் இவர்கள் அனைவருடனுமாய் பேசுகிறார், சிரிக்கிறார். வாக்கு வாதம் செய்கிறார்.

அனைவருடனும் அனைவராய் ஒரு சூடான டீயை நாவின் சுவைய றும்புகளுக்குஅறிமுகமும்செய்விக்கிறார்.அப்படியேயானஇருஇனிய அறிமுகத்துடன் பேசி முடித்து கிளம்பியும் போய் விடுகிறார். அவர் அந்தடீக்கடைக்கும்,இன்னும் இதைப்போல சில கடைகளுக்கும் பால் ஊற்றுகிறார் என்பது மட்டும் தெரியும் எனக்கு. மற்றபடி அவர் யார் என்ன,அவருடைய பழக்க வழக்கம் என்ன என்பதுபோன்றஆராய்ச்சி இருந்த தில்லை என்னிடம்/

நான் அந்த டீக்கடைக்கு போக நேர்கிற அனோக நாட்களில் அவரை அங்குபார்த்துவிடுவதுண்டு,இப்படித்தான்,தொள,தொளப்பானஉடையு டனும்,ஒட்டவெட்டிய முடியை படிய சீவிவாறுமாய் காணப்படுகி றார். அங்குஇருப்பவர்களுடன்பேசிகொண்டும் வாதிட்டுக் கொண்டு ம் சிரித்துக்கொண்டுமாய்/

ஒருநாள்அவர்அங்குகாணக்கிடைக்காவிட்டால்பலமாநிலமொழிபேசக் கூடிய டிரைவர்களும், பார்சல் சர்வீஸில் வேலை பார்க்கிற லோடு மேன்களும்அவரைப்பார்க்கா விட்டால் அவர்களின் பொழுது வீண் பொழுதாகித்தான்போகும் என்பதுபோலல்லவா இருக்கிறது. என்கிற நினைப்புடன் குடித்த டீக்கு காசு கொடுத்துவிட்டு கிளம்புகையில் எதிர்ப்பட்ட தோழர்களும், நண்பர்களுமாய் நிறைந்து நின்ற மனதில் அவரும்குடி கொண்டிருக்கிறார்,

9 comments:

J.Jeyaseelan said...

டீக்கடையில் தான் சார் அதிக நேரம் இருப்பீர்களோ.. ஹா ஹா சும்ம தமாஸுக்கு கேட்டேன், நல்லதொரு அனுபவப் பகிர்வு சார்...

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
டீக்கடையிலும் இருப்பதுண்டு,எங்கிருந்தாலும்
கவனிப்பும்,மனிதமன வாஞ்சையும்
முக்கியம் எனப்படுகிறது/

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாழ்க...
பால்காரர்!

'பரிவை' சே.குமார் said...

மனிதர்களை கவனிக்கும் தங்கள் கூர்மை சிறப்பு...
டீக்கடை மனிதர்களை டீயுடன் உறிஞ்சி எழுதுகிறீர்கள்...
சுவை அதிகம்... அருமை அண்ணா...

vimalanperali said...

வணக்கம் நிஜாமுத்தின் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Thulasidharan V Thillaiakathu said...

டீக்கடையில் தான் அன்றாடம் காய்ச்சிகளைப் படிக்கக் கூடிய அனுபவம் கிடைக்கும். அதுவும் கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்ட டீக்கடை அல்ல....தெருவோர டீக்கடைகள் தான்....பல அனுபவங்கள் பகிரப்படும், ஊர்க்கதைகள் பேசப்படும், இப்படியாகப் பல ருசியான, ரசிக்கும்படியான அனுபவங்கல் கிடைக்கும். தாங்கள் நன்றாகவே கூர்ந்து கவனித்து இருக்கின்றீர்கள்! நல்ல அனுபவ விவரணம்.

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் யாதவன் நம்பி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/