7 Oct 2014

கோடிட்ட இடம்,,,,,,



எல்லோரையும்போலவேஅவருக்கும்இரண்டு கைகள் இருந்தன.மாநிற மேனி யில் நீண்டு தெரிந்த கைகளிரண்டிலும் முளைத்து சிலும்பித்தெரிந்த கருநிற முடிகள் செம்பட்டை பாரித்துத் தெரிந்தன.

நான் அவரைப்பார்த்த வேளை கண்ணுக்கு இதமான மாலை வேளைஎனச் சொல்லலாம்.

மதியம் முடிந்து மாலையை எட்டித்தொடப் போகிற அல்லது அதன் தோளில் கை  போடப் போகிற வேளை.சாப்பிட்டு முடித்த கையோடும் வயிறோடும் வந்திருந்தேன்.

இன்றைக்குஅரைநேரமேஅலுவலகம்.மனதையும்உடலையும்அழுத்துகிறஅவச ரத்துடன்பணியை முடித்துக்கொண்டு நிமிர்வதற்குள்ளாக வந்து விட்டி ருந்த பத்திற்கும்மேற்பட்டபோன் கால்களில் பத்திற்கு பதில் சொல்லி விட்டு இரண் டைமட்டும்காற்றில் கலக்கவிட்டுவிட்டவனாகவும்அலுவலகம் முடிந்த நேரத் தில் அவசர,அவசரமாக சாப்பிட்டு விட்டு வந்தவனாக/

நான் வந்த நேரம் கந்தசாமி ஜீ தொழிலாளர் நலம் பேசிய கோரிக்கை சுமந்த அட்டைகள் சிலவற்றை நீளமான கம்பில்வைத்துதைத்துக்கொண்டிருந்தார். அது சம்பந்தமாகத்தான் அவரை பார்க்க வந்திருந்தேன் நான்.

எனக்கு வந்து நான் பதிலளித்து பேசிய போன்களும் இதைப்பற்றிதான் சொன் னது.

பெரிதாக ஒன்றுமில்லை, “நாளை நடக்கவிருக்கிறமாநாட்டி ற்கும்,ஊர்வலத்தி லு மாய்  பிடித்துச்செல்ல கோரிக்கை தாங்கிய அட்டைகள் 25 வரை தேவைப் படலாம் அதை ஏற்பாடு செய்தால் தேவலாம்” என போனில் மிதந்து வந்த பேச்சை”தந்தி போல பாவித்து செயல் படவும்” என என் மீது சுமத்தப்பட்டிருந்த வேலையை எந்தவித சிராய்ப்புமற்று கந்தசாமிஜீயிடம் அவரது அனுமதியுடன் இறக்கி வைக்கிறவனாகிப் போகிறேன் நான்.

எனக்கு வேறு வழி தெரியவில்லை.அலைந்து பார்த்த அல்லது மனதிற்குள் ளாக அலசிப்பார்த்தபோது தட்டுப்பட்டவராக கந்தசாமி ஜீஇருந்தார்.அவரது முழுப்பெயர் கந்தசாமி,அதை எல்லோருமாய் சுருக்கியும் மரியாதையாகவும் கந்தசாமிஜீ என அழைக்கிறோம் அன்பும்,பண்பும் நட்பு,தோழமையும் மேலிட/

சமரசமற்ற போர் சிந்தனைகள்நிறைந்தஅந்ததொழிற்சங்கஅலுவகத்தில் அவர் அலுவலக மேலாளர்.அங்குஅனைத்தும்அவர்தான்.அலுவகத்தை சுத்தம் செய் வதிலிருந்து முக்கியவிஷயங்களில்ஆலோசனை சொல்வதுவரை அவர்தான். ஆனால்கட்டிடத்தின்அஸ்திவாரம்

போல அவரது செயல் பாடுகள் என யோசித்தவாறே வந்து கொண்டிருந்த வேளையில் இப்படியான காட்சி உருவாய் காட்சிப்படுகிறார் கந்தசாமி ஜீ/

“இல்லசார்,நீங்கவர்றதுக்குமுன்னாடிஒங்கதலைவருஎனக்குபோன்பண்ணி
சொல்லீட்டாரு,நானும்எங்கசங்கப்பொறுப்பாளர்கள்கிட்டபேசீட்டேன்.அவுங்க
ளும்ஒப்புதல்குடுத்துட்டாங்க.அதுக்கப்புறம்தான் இந்த வேலய ஆரம்பிச்சேன். நேத்து நைட்டேஆரம்பிச் சிட் டேன். அந்த ஸ்டாக் ரூம்லயிருந்த அட்டைகளப் பூராம் எடுத்து தூசி தட்டி ஒண்ணு போல அடுக்கி தொடச்சியெடுத்து பேப்பர் ஒட்டிவச்சேன். காலையில ஒரு பத்து மணி போல எழுத ஆரம்பிச்சி இப்படித் தான் அரை மணி நேரத்துக்குமுன்னாடிஎழுதி முடிச்சேன்.இப்ப அதுகள இந்த கம்புல வச்சி தச்சிக்கிட்டு இருக்கேன்.நீங்கவந்துட்டீங்க /வாங்கசார்,இப்ப ஒண்ணுமில்ல பெருசா,,,,,,,இதெல்லாம் ஏங் வேல நான் முடிச்சிப்புடுவேன். ஒரு அரை மணிநேரத்திலயோ, ஒருமணிநேரத்திலயோ. 

சுத்திகிட்டேயிருக் கணும் சார். சுழல்கிறவரைதானேசக்கரம்ன்னு சொல்லீருக் காங்க/ 

அதுமாதிரிவேலசெஞ்சிக்கிட்டேஇருக்குறவரைக்கும்தான்கந்தசாமிஜி.ஒண்ணு மில்ல சார், இப்ப பாத்ரூம்கள கழுவிவிடரெண்டு பினாயில் பாட்டில் வாங்க ணும்சார்.அத கழுவி விட்டா இந்தா வாளியில வச்சிருக்கேன் பாருங்க துணிக, அத அலசி போடணும்.இங்க பாருங்கஎன என் தோள் தொட்டுதிருப்பி இந்த வெளியெல்லாம் கூட்டீட்டு சாப்புடணும்.

அப்பிடியேசாப்புட்டுட்டுகொஞ்சநேரம்தலசாய்க்கணூம்.அப்பத்தான்நாளவிடிஞ்
செஞ்திரிச்சி சக்கரம் சுத்தும்.இப்ப நீங்க வந்த வேல முடிஞ்சிருச்சி. நாளைக்கு காலையில இந்த கோரிக் கைஅட்டைகபூராரெடியாஉயிரோடஎந்திரிச்சிநின்னு ஒங்கள வரவேற்கும்பாருங்க”/ என எழுந்து நின்றுஎனதுஇருகைகளையும் இறுகப் பற்றிவிடைவிடைகொடுத்துஅனுப்பியவரை ஆழ்ந்து கவனிக்கிறேன்.

விரைத்துநீண்டிருந்தஅவரதுஇடதுகையில்விரல்கள்இருக்கவேண்டியஇடம்
மொன்னையாகி வெற்றிடம் பூசித்தெரிந்தது.

விடைகொடுக்கநீட்டிய அவரது இரு கரங்களையும் நீண்ட நேரம் பற்றியிருந் தவனாய் அவரிடம் ஏதும் சொல்லாமல் கிளம்புகிறேன்.

8 comments:

J.Jeyaseelan said...

உங்கள் சொல்சித்திரம் மீண்டும் அருமை சார், ரசித்துப் படித்தேன்...

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... அருமை அண்ணா...
கடைசியில் விரலில்லாத கை... வலி சொன்னாலும் அருமை...

அருணா செல்வம் said...

மனத்தில் இல்லையே ஊனம்......

அருமையான படைப்பு விமலன் ஐயா.

அருணா செல்வம் said...

படமும் மிக அருமை.

vimalanperali said...

வணக்கம் அருணா செல்வம் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் அருணா செல்வம் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சே குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/