31 Oct 2014

நட்பு மூச்சு,,,,,

 
அதற்கென்னதெரியும்?நல்லதுமில்லாமல்கெட்டதுமற்றுஓடித்திரிகிறதுஅதன் போக்கில்/ 

செக்கு சிவலிங்கம் என்கிற சொல்பதத்தை எல்லாம் தாண்டி சுத்தம்,அசுத்தம் என்கிற பேதமற்ற பொது வெளிகளில் நுழைந்து வெளியேறி தன்னை பதிவு செய்து கொள்கிறது அன்றாடங்களில்.

காலை,மாலை,இரவு மற்றும் மிக முக்கியமாக மதியம் என எந்நேரமும் நான்குஅங்குலத்திற்கும்குறைவான நாக்கை தொங்கவிட்டுக்கொண்டும், நான் கு கால்களால் தெருவளந்து திரிகிறது.

ப்ரெவுன்கலர்மென்முடிகள்போர்த்தியஉடம்பும்,வாய்நுனியில்கறுப்புக்கலர்பூசிக்கொண்டுமாய் வீடுகளின் முன்னும், பின்னும் பரந்திருக்கிற வெளியிலும், தாரும், சிமிண்டும்

போர்த்திக் கொண்ட வீதிகளிலுமாய் நடமாடித்தெரிகிறது அது.

உணவு வேளைக்கு பின்பாக அனேகமாய் எல்லோரும் தூங்கிப்போகிற அல்ல து சற்றே ஓய்வெடுத்துக் கொள்கிற மதிய நேரமாய் தனது கூட்டத்தை தேடி நட்புக்கரம் நீட்டி (இல்லையில்லை நட்பு மூச்சு) ஓடிவிடும்.

எங்கிருந்துதான் அத்தனை வந்து சேரும் எனத்தெரியவில்லை. வெள்ளைக் கலரில்குட்டையாகவும்,கறுப்புக்கலரில்,கால்கள்வேறொன்றுபூசியிருக்கவும், ப்ரெவுன் கலரில்ஒன்றும்எனகலவையாய் உயரமாயும்,குட்டையாயும்,உடல் பருத்தும்,மெலிந்துமாய்பலரகங்களில்காணப்படுகிறஅவைகளோடுவிளையாடி  விட்டும்,வீதிகள் தோறும் படை பரிவாரங்களுடன் சுற்றித்திரிந்து விட்டும், எங்காவது கிடைப்பதை சாப்பிட்டு விட்டுமாய் வருகிறதுதான்.

கறுப்புக்கலரில் வெள்ளைப் புள்ளிகளும், கால்களில் பாதம் ஒட்டி வெள்ளை பூத்திருந்தஅந்த குட்டை நாய் இதற்கு மிகவும் பிடித்துப்போகும்.

அத்தனை கூட்டத்திலும் அது செய்கிற லீலைகளையும்,சேட்டைகளையும் மற்றவைகள் இடைஞ்சல் செய்வதோ,அனுமதி மறுப்பதோ இல்லை.அடுத்த வீதியில் இருக்கிற நான்காவது வீட்டு அம்மாள் வீட்டு நடையில் இடது ஓரமா ய் வைக்கிற பழசும்,புதுசும் கலந்த சோறும் அதன் அருகில் ஈயத்தட்டில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த தண்ணீரும் பெரும்பாலான நேரங்களில் இவை இரண்டுக்குமட்டுமே உதவியிருக்கின்றன.

ஆசைஆசையாகவும்அன்பொழுகவுமாய்வளர்த்தநாயொன்றுஇறந்துபோனதினத்தன்றின்மறு நாளிலிருந்து அவள் இது மாதிரி செய்வதை வழக்கமாக்கிக்கொண்டாள் என சொல்லிச் செல்கின்றன தகவல்கள்.

அதுவீட்டு நாய்கள் வீதி.நாய்கள் என ஓடித்திரிபவைகள் எது சாப்பிட்டாலும் சரியேஎன்பதுஅவளதுகணக்கு.வைத்தசோறும் தண்ணீரும் அப்படியே தீண்டப் படாமல் இருக்கிற நாட்களில்அவள்மனம்சூம்பிகவலைக்குள்ளாகிப்போவாள் என்பது உறுதி என்கிறார்கள் அக்கம் பக்கத்தவர்கள்.

விளையாடி முடித்து விட்டும்,சாப்பிட்டு விட்டும்,தனது பிரியத்தை அங்கேயே விட்டு விட்டுமாய் வருகிற அது குட்டியாய் இருக்கிற ஒருதினத்தின் காலை நேரமாய் கொண்டு வந்தார்கள்.

“பணம் கொடுத்தெல்லாம் வாங்கவில்லை,எங்களது கம்பெனியின் பக்கத்து வீட்டுநாய் போட்டகுட்டிஇது.நான்கைந்துஇருந்ததால் வாங்கி வந்தேன், இரண் டை,இன்னொன்றைஒருவருக்குகொடுத்துவிட்டேன்,இப்படிஒன்றைவளர்ப்பது
ஒருபுண்ணியமே எங்களுக்கு” என்றார் நாயை கொண்டு வந்த எதிர் வீட்டுக்காரர்.

பால்,பிஸ்கட்,மற்றும்,மற்றும்,,,,,,,,,,,,என எதைக்கொடுத்தும் சாப்பிட மறுத்தும், கழுத்தில் கட்டப்பட்டிருந்த பெல்ட்டில் இணைத்திருந்த கயிறை இழுத்தவா றும் ஒரு இரவு முழுவதுமாய் கத்திக்கொண்டிருந்தது.

சிறு குட்டியின் மென் கத்தலாய் இருந்த அது சமயத்தில் மனம் பிளந்து ஊடு ருவி இம்சை பண்ணி விடுவதாய் இருந்தது.அந்த வீதி முழுவதிலுமாய் அன்று இரவு யாரும் தூங்கி விடவில்லை.

தூக்கம் தொலைத்த வீதி என தினசரிகளில் செய்தியாகாத மறுநாளில் நாயை வைத்திருந்த எதிர் வீட்டுக்காரர் “ஒரு ராத்திரிதான் அப்புறம் பழகிப்போகும் சாப்புட ஆரம்பிசுரும் கத்தாது.இப்ப வந்து பாருங்க,குடுத்த பிஸ்கட்டையும், வச்ச பாலையும் குடிச்சிட்டு அது வாட்டுக்கு கெடக்கு” என அவர் காண்பித்த தினத்தன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் அந்த வீதியில் யாரும் தூங்க வில்லை.

இப்படிவீதியிலும்,அக்கம் பக்கத்திலுமாய் எல்லோரது தூக்கத்தையும் தொலை த்த அது தன் கத்தலை நிறுத்திய நான்காம் நாளிலிருந்து வளர்ந்து பெரிதாகி தன் ஆகுருதி காட்டியும், தனது குறைப்பாலும், ஆக்ரமிப்பாலும் இந்த வீதியை யே தன் வசப்படுத்திக் கொண்டு ப்ரவுன் கலர் உடலும்,வாய் நுனியில் கறுப்பு பூசியுமாய்திரிகிறஅதற்குஎன்னதெரியும்?எனநினைக்கிறகணங்களில்“எனக்கும் தெரியும்எல்லாமும்” என காலை,காலை சுற்றி வருகிறது/

6 comments:

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமையான பகிர்வு அண்ணா...
வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Pyaree Priyan said...

super...thank you...

vimalanperali said...

nanRi,,,,