18 Nov 2014

டுபுடுபு மோட்டார்,,,,,

          
தோனியது.கிளம்பிவிட்டேன்.அதிகாலைநான்குமணிக்கு வந்து விட்ட விழிப்பு அப்படியானதொருஎண்ணத்தையோ,அதற்கானசூழலையோ உருவாக்கியிருக் கவில்லை. ஆனாலுமாய் கிளம்பிவிடுகிறேன்.கொஞ்சம் மனத்தயக்கத்திற்கு பிறகு/

இந்நேரம்தாத்தாடீக்கடைதிறந்திருக்கவாய்ப்பில்லை,ஆகவேசெல்வோம் இன் னும் சிறிது வேளை கழித்து/

இப்பொழுது எழுவதா இல்லை அப்படியேபடுக்கையில் கிடப்பதா?இருள் சூழ்ந் திருந்த வீடும், ஜன்னல் கிராதிகளின் வழியாய் வெளியிலிருந்து வந்த வெளிச் சமும், சுவரில் பதிந்து உருவம் காட்டுவதாய்/

கம்பிபோட்ட ஜன்னல் இல்லை அது,மாறாக கம்பியை வளைத்து டிசைன் தரித் துபூக்கள்பூக்கசெய்திருந்த ஒன்றாக/அடர்பச்சையும்,வெள்ளை நிறமுமே அந்த க்கம்பிக்களுக்கு அடிக்க ஏற்றது என்கிற பெயிண்டிங் விதிகளை மாற்றி முதன் முதலாககறுப்புக்கலரும்,அரைவெள்ளையுமாய்அடித்துக்கொடுத்தார் பெயிண் டர் மிக்கேல்.பார்த்த மாத்திரமே பளிச்சென சிரித்து தன் முதல் பேச்சிலேயே மனதை கழட்டி வைத்து விடுகிற மனிதர்.

நான்குமணி இந்நேரம் கொஞ்சம் நேரத்தைக்கூட்டிக்காட்டியிருக் கலாம். சிரிய தும், பெரியது மாய் இருக்கிற முட்களின் கூட்டுபிணைப்பில் காட்டிச்செல்கிற நேரம் எவ்வளவு என சரியாக தெரியாவிட்டாலும்கூட இந்நேரம் மணி4.30 அல் ல து 5.00 ஐ எட்டித்தொட்டிருக்கலாம் என்கிற நினைப்பில் எழுந்து லைட்டைப் போட்ட சமயம் கடிகாரம் சொல்லிச்சென்ற மணி 4.25/

அலைபாய்ந்த எண்ணங்கள் நிறைந்து அவிழ்ந்து கிடந்த மனதை அள்ளி முடிய பிரியமில்லாமல்அப்படியேவிட்டவாறுமென்நடைபயின்றுமுகம்கழுவச் செல் கிறான்.முகம் என்றால் முகம் மட்டுமே கழுவுவது அவனது அகராதியில் இல் லை.கை,கால்,உடல் என ஒரு மினி காக்காய் குளிப்பாகவே இருக்கிறது அவனது முகம் கழுவல்/

கையில் தட்டிய ரோமக்கற்றைகள் இன்று ஷேவிங் செய்து விட வேண்டும் கண்டிப்பாக எனச் சொல்லிச்செல்கிறது.மனம்சொன்ன செய்திக்குசெவிமடுக் காமல்எப்படிவிடமுடியும்அலட்சியமாக/

கழற்றிய செவியின் உட்புலன்களை கோரிக்கைக்குக் கொடுத்து விட்டு உடல் துடைத்த வேளை விழிப்படலம் பட்ட துண்டின் கோடுகளும், கட்டங்களும் இப் படி ஒரு டிசைனில் சட்டை இருந்தால் நன்றாக இருக்கும் என்றது.

விளைவித்தவரும்,நூற்றவரும்,பாவு முக்கியவரும், சாயம் கலந்தவரும்,தறி நெய்தவருமாய் ஒரு நிமிடம் தெரிந்து மறைந்தார்கள் துண்டில்/

அலுவலக ட்ரெய்னிங் நிமித்தமாய் ஒரு முறை கோயம் புத்தூர் சென்றிந்த போது எடுத்து வந்த மஞ்சளும்,சிவப்புமாய் கட்டம் கட்டிய துணி மிகவும் நன் றாக இருந்தது.அதில் தைத்த சட்டையை ஒரு வருடம் போட்டிருந்தான். வருடத்தின் முடிவில் கொடியில் தொங்போட்டிருந்த துணியை எலி கடித்துப் போட்டுவிட அன்றிலிருந்து போட விடுபட்டுப்போன கட்டம் போட்ட சட்டை யை இன்றுவரை போடமுடியவில்லை.அது ஏன் எனவும்இன்றுவரை இவனுக் குத் தெரியவில்லை. தெரியவில்லை.ஒரு வேளை அப்படித்துணிகள் ஏதும் கிடைக்கவில்லையா அல்லது இவனது தேடல் குறைந்துபோனதாதெரியவில் லை.

இப்பொழுது பையப்பைய வருகிறது,நேற்று இரு சக்கரவாகனத்தில் இவன் செ ன்று கொண்டி ருந்த வேளை எதிரே வந்த கல்லூரி பேராசிரியர் பெரிது பெரிதாய் கட்டம் கட்டம் கட்டப்பட்டிருந்த சட்டையை அணிந்து இன் பண்ணி யிருந்தார்.பச்சைக்கலரில் ஓடிய தடிமனான கோடுக ளும்,அரை வெள்ளை யிலுமாய் இருந்த சட்டையும்,பிரவ்ன் கலருமாய் இருந்த ஃபேண்டும் பார்க்க நன்றாகவே இருந்தது.பிராண்டட் போலிருக்கிறது.எப்படியும் 1500 ரூபாய்க்கு குறை யாமல் இருக்கலாம்.இவனானால் அந்த விலையில் இரண்டு ஜோடிகள் எடுத்திருப்பான். சரிதான் அவரால் அப்படி யோசிக்க முடிகிறது,இவனால் இப்படி யோசிக்க முடிகிறது.

கட்டியிருக்கிறகட்டங்களும்,ஓடுகிறகோடுகளுமாய்சொல்லிச்செல்கிறவிஷய ங்களும் நிர்ண யிப்புகளும் நிறையவே/அப்படியான நிறையான வைக ளை  சுமந்து கொண்டு டீ சாப்பிட்டு விட்டு,பாத்ரூம் பல்துலக்கல், குளியல்,,,,,,,,,என் கிற படிமங்களை முடித்த வேலை மணி ஆறரை ஆகி விட்டது.

ஆறுமணிக்குள்ளாகவீட்டைவிட்டுகிளம்பவேண்டும்எனநினைத்தவன்இப்பொ ழுது ஆற ரையின் வாசலின் கால்வைத்தவனாய்/

இலக்கற்ற பயணங்கள் மனம் தொடுபவையாகவே/எங்கும் போக வேண்டிய வேலை ஏதும் இருந்திருக்கவில்லை இவனுக்கு அந்த அதிகாலைப்பொழுதில். அரவங்கள் அவ்வளவாய் இல் லாத காலைப் பொழுதில் அப்படியே ஒரு ரவுண்ட் சென்று வந்தால் மனதுக்கும்,உடலுக்கும் இதமாக இருக்கும் என்கிற நினைவில் இவன் சென்ற வழி மேம்பாலத்தின் மேலாய் இருந்தது. சுத்தமான காற்றும் சுகந்தமான வாசமும் வீசிய காலை வேலையில் அடுத்தடுத்தாய் கடந்தஇரண்டுடவுன்பஸ்களும்,இரண்டுலாரிகளும்எவ்வளவுபேரை வைத்துக் கொண்டும், எவ்வ ளவு மூடைகளை அடைத்துக்கொடும் இவ்வளவு வேகம் காட்டுகிறது எனத்தெரியவில்லை.

பாலத்தின் இறக்கத்தில் வலது புறமாய் செல்கிற சாலையில் கடைசியில் இடமும்,வலமுமாய் மாறி,மாறி காணப்படுகிற மூன்று மில்களுக்கு மூடை சுமந்து கொண்டு போகிறது போலும் லாரிகள். ஊர்ந்து விரைகிற பஸ்கள் கிராமங்களின் வழித்தடங்கள் நோக்கி/

இன்னும் சிறிது நேரத்தில் உழைப்பின் அடையாளம் சுமந்த மனிதர்கள் அதே டவுன் பஸ்ஸில் வந்து மூன்று மில்களுக்குமாய் வேலைக்குச் செல்வார்கள். ஜேம்ஸ்தோழர்கடைஇல்லை,தங்கப்பாண்டித் தோழர்கடையில் தேநீர்அருந்தி கொண்டேகுமாருக்குபோன்செய்கிறான்கண்ணில்பட்டபருப்புவடைகளையும், உளுந்தவடைகளையும் பார்த்தவாறே/

”இன்றையபொழுதின் ஆரம்பத்தில் நம்காலை நேர சந்திப்பு நிகழட்டும். நின்று கொண்டிருக்கிறேன்தோழர்தங்கப்பாண்டி கடையில்.உங்களது சந்திப்பு வேண் டியும் டீ சாப்பிடவுமாய்” எனச்சொல்லிய வார்த்தைகளும்,முளை விட்ட ரும்பிய ஆசையும் எதிர் முனையில் எடுக்கப் படாத போனின் பேச்சற்றலில் கரைந்து போகிறது.

குமார் இல்லையா அல்லது இன்னும் தூக்கத்திலிருந்து எழும்பவில்லையா? கண்ணனுக்குப்பேசினான்.பெரிதாக ஒன்றுமில்ளை நண்பரே இப்பக்கம் வந்தே ன்,கண்ணுக்குள் அரித்தது. வரலாமா உங்களைப்பார்க்க,,,,,?என வார்த்தையில் வரைந்த மனுவை அனுப்பிவிட்டு கிளம்பு கிறான் கண்ணன் இருக்கும் திசை நோக்கியும்,கண்ணனை சந்திக்கவுமாய்/

இவன் வீட்டிலிருந்து கிளம்புகிற வேளை இப்படியெல்லாமுமாக நினைத்திரு க்கவில்லை.வாய்ப்பிருந்தால்சந்தித்துவிட்டுவரலாம்என்கிறஎண்ணம்மேலோ ங்க சென்றதுதான்.

இலக்கிலாமல் பயணிப்பதும்,பின்நண்பர்களிடம்பேசுவதும் அவர்களை சந்திக் கச் செல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது.

13 comments:

UmayalGayathri said...

நண்பர்களிடம்பேசுவதும் அவர்களை சந்திக் கச் செல்வதும் நன்றாகத்தான்//

ஆம் அது ஒரு தனி ஆனந்தம் தான்.

Yaathoramani.blogspot.com said...

இலக்கற்று பயணிப்பது
என முடிவெடுத்துப் பயணிப்பதே
ஒரு இலக்குக்கான பயணம்தான் இல்லையோ ?
ரசித்துப் படித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இப்படியான சூழ் நிலைகள் மகிழ்ச்சிதான் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

என்பக்கம் சிறுகதையாகவாருங்கள். அன்புடன்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை):
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்துப் படித்தேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

தளம் மறுபடியும் .in என்று மாற்றி உள்ளது...

Thulasidharan V Thillaiakathu said...

இலக்கற்ற பயணங்கள் மனம் தொடுபவையாகவே// ஆம்! மனம் தொடுபவைதான்...

இலக்கிலாமல் பயணிப்பதும்,பின்நண்பர்களிடம்பேசுவதும் அவர்களை சந்திக் கச் செல்வதும்// உண்மையே மிகவும் மகிழ்ச்சிதரும் ஒன்றுதான்....மிகவும் ரசித்து வாசித்தோம் நண்பரே!

vimalanperali said...

வணக்கம் உமையாள் காயத்திரி மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சார்,in ஐ காம் ஆக
மாற்றித்தர இயலுமா,கூடவே தமிழ் மணமும்./

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

yathavan64@gmail.com said...

கனவில் வந்த காந்தி

மிக்க நன்றி!
திரு பி.ஜம்புலிங்கம்
திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

புதுவைவேலு/யாதவன் நம்பி
http://www.kuzhalinnisai.blogspot.fr

("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

vimalanperali said...

வணக்கம் யாதவன் நம்பி சார்,நன்றி வருகைக்கு./