28 Nov 2014

வடைக்காற்று,,,,,



வடையே வடைக்கு வெயிட்டாக ஆகிவிட முடியுமா என்ன,ஆகித்தான் போன
தே அந்த பதினோரு மணி காலை வெயிலில்.

எண்ணை மிணுங்க உளுந்த மாவை அள்ளிச் சுட்ட வடை இப்படி கனக்கிறதே என நினைக்க வேண்டாம் சாப்பிடுங்கள் எத்தனை வேண்டுமானாலும் எடுத்து/ காசுகூடநீங்களாய்கொடுக்கவேண்டாம்,சட்டைப்பையில்கையை விட்டு எடுத் துக் கொள்கிறேன் நானாக. எனக்கென்னஅவ்வுரிமைஇல்லையாஎன்ன,நேற்று இன்றா பழக்கம் உங்களை, எனக்குத்தெரிந்து உங்களை இன்றோடு நான் பார்ப் பது இரு பத்தியோறாவது வருடத்தின்தொடர்ச்சிஎன நினைக்கிறேன்.

நேற்றா,இன்றாஎனத்தெரியவில்லை,நீங்களோஅல்லதுயாரோஒருதோழரோ  இப்பக்கமாய்கிராஸ்ப்பண்ணியதாய்அறிந்தேன்,அறிந்தஅறிதலை வைத்து டீப்  போடுவதைவிடுத்துஎட்டிப்பார்த்தேன்காணவில்லை யாரையும்/

என்ன செய்ய மறுபடியுமாய் டீப்போட ஆரம்பித்து விட்டேன்.ஆற்றிய டீ அப்ப டியே அந்தரத்தில் நின்று கொண்டிருக்க அந்தரத்தில் தொங்குகிற சரடு போல காட்சியளிப்பதாய்/எட்டிப்பிடித்தால்அறுந்து போகாதாசரடு,விட்டுவிடுகிறேன் அப்படியே இருக்கட்டும் என,என்று கடைக்காரர் இவன் போன வேளையில் சொன்னதுடன் உங்களைப்பார்த்தால் அந்தத் தோழரைப்பார்க்கிற ஞாபகமும் அவரைப்பார்கிற போது உங்களது ஞாபகமும் வருவது தவிர்க்க இயலாமல் போவது இயல்பாகவே என்னுள்ளாய் உறைந்தே கிடக்கிறதுதான் தோழரே என்கிறார்/

வாஸ்தவம்தான் பலபேர்அப்படிச்சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான் இவனு மாய்/ அதனால் என்ன இப்பொழுது என இவன் சமாளிக்கிற போதும் கூட அப்ப டியில்லை அது உங்களது எண்ண ஓட்டமும்அதை ஒட்டியஅதன் செய்கை களுமாய் அப்படி ஆகிப்போவதால் அப்படித் தெரிகிறதோ என்னவோ ஒரு வேளை எனடீக்கடைகாரர்இவனிடம்சொல்லிக் கொண்டிருக்கும் போதே தட்டி லிருந்த வடை யை எடுக்கிறான்,

கடையின் முன்புறமாய்யாருக்கும்புடிபடாமல் ஓடியதார்ச் சாலைகுறிப்பிட்ட அளவுஅகலம் காட்டியும், நீளம் காட்டியுமாய்/ஆனால் அந்தச் சாலையைப் பார்க்கிற போதெல்லாம்அல்லதுஅதைகடந்துபயணிக்கிற சமயங்களி லெல் லாம் இவனுடம் அந்தக் கேள்வி மெக சைசாஸாய் உருவெடுத்து நின்றது பற்றி ஆச்சரி யம் ஏதும் இருக்க முடியாதுதான்.ஏன் இப்படியாய் ரோட்டின் நடுவில் போலீஸ் போக்குவரத்தடுப்பைப்போட்டு ரோட்டை மூன்றாய்ப் பிரித் து நட்டு வைத்திருக் கிறார்கள் ரோட்டின் நடுவாக,என கேட்ட போது அப்படியா வந்துவிடப் போகிறது என்றார்கள் சிலர், சிலரான போதும் கூடபரவாயில்லை பலரும்கூடஅப்படித் தான் சொன்னார்கள் சமயாசமயங்களில்/

பரவாயில்லை அதனால் என்ன இப்பொழுது கெட்டு விட்டது எனநினைக்கை யில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் பறப்பதாய்த்தெரியும்,ஐயோ அதிலும் சில பஸ் மற்றும் வாகனங்களைப்பார்க்கிற போது பஸ்ஸின் டயர்க ளைக்கழட்டிவைத்துவிட்டுஇறக்கைக்கட்டிக்கொள்வார்கள்போலும்.அந்தப்பற பறக்கிறத்தான், என்ன செய்ய விதியேஎனநாம்ஒதுங்கி போய்க்கொள்ள வேண் டியது தான்.

நால் வழிகளை விடுத்து ஒரு வழியிலான பஜார்ப்பக்கமாய் வந்து கொண்டி ருந்த வேளை மணி காலை 11 மணியை நெருக்கி இருக்கலாம்.அந்நேரம் அங் கென்ன சோலி உனக்கு என யாரும் கேட்டு விடக்கூடாது அல்லது இடை மறித்து யெசக்கேடாக ஏதேனும் நினைத்து விடவும் கூடாது.போகிறதுதான் போகிறீர்கள் ஏன் வெறும் கையுடன் திரும்ப வேண்டும் காய்கறி வாங்கி வந்து விடுங்கள்,வீட்டில்சுத்தமாய் ஒன்றும்இல்லை,இங்கேயே போய் நிற்க வேண்டி யிருக்கிறது காய்கறி தேங்காய்ச் சில் இன்னும் இன்னுமான எதற்காக வேண் டியும் கூட என்ற மனைவியை ஏறிட்டுப்பார்த்தபோது மணி காலை 9.45 இருக் கலாம்.

அதற்கு முன்னாய் எழுந்து விட்ட காலை ஆறு மணிக்கு ஒரு இளம் டீகுடித்து விட்டு மற்ற மற்றதான வீட்டு வேலைகளைப்பார்த்துக்கொண்டே குளித்து ரெடியாகிக் கொண்டிருக்கிற வேளையில் மிகச்சரியாக ஒரு எஸ்,எம்,எஸ் வருகிறது நண்பரிடமிருந்து, இன்றே உங்களைப்பார்க்க வேண்டும் மாலை ஆறுமணிக்கு வரலாமா இந்த இடத்திற்கு எனக்கேட்டிருந்தார்,சரி வருகிறேன் என்ன இப்பொழுது என பதில்எஸ், எம்,எஸ் அனுப்பி விட்டு மற்ற ,மற்றதான வேலைகளை ப்பார்த்துக்கொண்டிருந்த நேரம் லேசாக நடுங்க ஆரம்பிக்கிறது உடல்.என்ன ஏது என உடலிடம் விசாரித்து விளக்கம் கேட்டுப்பெறும் முன்பா கவே நடுங்க ஆரம்பித்த உடல் கை கால்களை லேசாக புல்லரிக்கச்செய்து உடலின் முடிகளை நட்டுக்க நிற்கச்செய்து விடுகிறதாய்/

குளிர ஆரம்பித்த உடல் அப்படி அப்படியே லேசு லேசாய் சுட ஆரம்பிக்கிறது. ஆகா இப்படி ஆரம்பித்தால் எப்படி அதுவும் அலுவலகத்திற்கு கிளம்பப்போகிற இந்நேரமாய்ப்போய்/

என்ன இது இப்படி ஒரு ஆழகால சோதனையாய்,இது மதுரைக்கு வந்த சோத னையா அல்லது சாத்தூருக்கு வந்த இனிய சோதனையா,சரி விட்டு விடுவோ ம் ,ஆக வேண்டியதைப்பார்ப்போம், எனஹோமியோபதிடாக்டருக்கு போன் பண்ணி கேட்டபோது அவர் இன்று கிளினிக்கில் இருப்பேன் என்றார், வேறெங் குமாய் கேம்ப ஏதும் போகவில்லை, அப்படியே அவசியம் கருதி எங்கேனுமாய் கிளம்பிபோகவேண்டிவந்தாலும்கூட காத்திருக்கிறேன் தங்களுக்காக/ வாருங் கள் ஒரு போன்பண்ணிவிட்டுஎன்கிறார்.

சரி வந்து விடுகிறேன்.இத்தனை மணிக்குள்ளாய் எனபதில் சொல்லிக் கொண் டிருந்த வேளையிலாய் திரும்பவுமாய் வந்த போன் நண்பனுடையதாய் இருந் தது, சொல்கிறேன் அவரிடம் இப்படியாய். ஆகிப்போனது தங்களது எஸ்,எம், எஸ் வந்து சேர்ந்த அடுத்த சில விநாடிகளிலிருந்து வந்து விட்டது எனக்கு காய்ச்சல் எனச்சொல்லவுமாய் சிரித்து விடுகிறார் வாய் கொள்ளாமல்/

ஆகா இப்படி அல்லவா இருக்க வேண்டும் சிரிப்பு என நினைத்துக் கொண்டி ருக்கிற இனிய வேளையாய் வீட்டிற்கு வெளியிலாய் நின்று போயிருந்த தூறல் திரும்பவுமாய் பூத்துப்பெய்ய ஆரம்பிக்கிறது,என்னதான் செய்ய இதற்கு ,காலை யில் எழுந்திருக்கும் போதே தன் முகம் காட்டி பெய்து கொண்டிருந்த மழையை எதை வைத்து ஸ்டாப் சொல்லி நிறுத்துவது,அல்லது எது சொல்லி கட்டுப் படுத்துவது? எது சொல்லியும் கூட அல்ல,எதுவும் சொல்லாமலும் கூட அல்ல ,ஏன் நிறுத்த வேண்டும் அதை பெய்து விட்டுத்தான் போகட்டுமே அது தன் திசை நோக்கி அல்லதுதன் குறிக்கோளுக்காய் என இருந்து விட்டுப்போக முடியவில்லை. என்ன இப்படித்தான் பெய்து கொண்டிருக்கிறது ஒருவாரமாய் என நினைத்துக்கொண்டிருந்தநன்நேரம் கிளம்புங்கள்சீக்கிரம் அலுவலகத்தி ற்கு விடுப்புசொல்லி விட்டுடாக்டரிமும் அப்படியே காய்கறி வாங்கிவரவுமாய் என ஞாபகப்படுத்தியமனைவியை ஏறிட்டவாறு கிளம்புகிறான் எதோ ஒருவித ஏக்கம் தேக்கி /

வீடு ,வீடு கடந்து வீதி,வீதி கடந்து ரோடு ,ரோட்டில் போய்க்கொண்டிருக்கிற போது நட்டு வைத்திருந்த பூ மரங்களாய் விழிபடர்ந்து தட்டுப்படுகின்ற தலை மைத்தபால்நிலையம்,அரசு மருத்துவமனை,அரசு உயர் நிலைப்பள்ளி என அது கடந்துஅது கடந்து இவன்போய்அடைந்தஇடம்எம்ஜி யார் சிலையருகில் இருக் கிற ஆஸ்பத்திரியாய் இருந்தது,

இவன் போன்ப் பண்ணிக்கேட்டதும் டாக்டர்வரச்சொன்னதும் இந்த இடம் அன்றி வேறொன்றாய் இல்லை சத்தியமாக. அப்படி எனும் போது ஏன் கவலை கொள்ள வேண்டும் அனாவசியமாக/

அவர் வரச்சொன்ன இடம் போய் பார்த்த போது பூட்டியிருக்கிறது கிளினிக்,சரி இப்பொழுது என்ன அதனால்?இருக்கவே இருக்கிறது நமக்கென டீக்கடை, அங்கு போய் சிறிது நேரம் அப்படியேஉறைந்துபோய்அல்ல,ஒருகையில் டீயும் மற்றொருகையில்வடையுமாய்இருக்கலாம்,ரோட்டைபெறாக்குப்பார்த்தவாறு என நினைத்துஅங்கு போய் நின்ற நேரம்தான் தென் படுகிறது கடையில் வடை களைஅடைகாத்து வைத்திருந்த அலுமினியத்தட்டு. வடை மட்டும் அல்ல, சோ மாஸ் மற்றும் அதிரசம் இருந்தது.அந்தத்தட்டில் இருந்த வடைகள் ஒன்றின் அருகில் ஒன்றாய் அடுக்கப்பட்டும்,அதன் அருகிலாய் கொஞ்சம் கிழிக்கப் பட்டி ருந்த பேப்பர்கள் வைக்கப்பட்டுமாய்.

சதுரமாய் கிழித்து வைக்கப் பட்டிருந்த பேப்பர்களில்தட்டிலிருக்கிற வடைகளி ன் எண்ணைக்கறை படிந்திருக்க அவை தப்பித்தவறி கூட காற்றில் பறந்து விடாமல் இருக்க வடையைத்தூக்கி வைக்கிறார்,எண்ணைகறை படிந்த பேப் பரின் மீதாய்/இவன் வடையைப்பிய்த்துசாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே/ 

10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
தேநீர் கடை தொடர்பான பதிவு என்றாலே
எழுத்தில் மெருகு கூடிக் கொண்டே செல்கின்றது
நன்றி நண்பரே

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமர் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் ரசனையே தனி...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
எல்லொரிலும் இருக்கும் ரசனைதான் என்னிலும்,
நான் அப்படி ஒன்றும் சிறப்பாய் ரசித்து விடவில்லை/

”தளிர் சுரேஷ்” said...

ரசனையான பகிர்வு! நன்றி!

கோமதி அரசு said...

நின்று போயிருந்த தூறல் திரும்பவுமாய் பூத்துப்பெய்ய ஆரம்பிக்கிறது,என்னதான் செய்ய இதற்கு ,காலை யில் எழுந்திருக்கும் போதே தன் முகம் காட்டி பெய்து கொண்டிருந்த மழையை எதை வைத்து ஸ்டாப் சொல்லி நிறுத்துவது,அல்லது எது சொல்லி கட்டுப் படுத்துவது? எது சொல்லியும் கூட அல்ல,எதுவும் சொல்லாமலும் கூட அல்ல ,ஏன் நிறுத்த வேண்டும் அதை பெய்து விட்டுத்தான் போகட்டுமே அது தன் திசை நோக்கி அல்லதுதன் குறிக்கோளுக்காய் என இருந்து விட்டுப்போக முடியவில்ல.//
மழை தொடர்ந்து பெய்தாலும் கஷ்டம் தான்.
மழை நேரத்தில் சூடான டீயும், வடையும் நல்ல பொருத்தம்.

vimalanperali said...

வணக்கம் கோமதி அரசு மேடம்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தளிர சுரேஷ் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவ்வாறான ஒரு தலைப்பில் மிகவும் வித்தியமாகவும் ரசனையாகவும் எழுதியுள்ள தங்களின் பாணி பாராட்டத்தக்கது.

vimalanperali said...

வணக்கம் பி ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/