25 Dec 2014

நெளிகோட்டுச்சித்திரம்,,,,,

இனிவேண்டாம்இருபது.ரூபாய்பத்தே போதுமானது.இளஞ்சிவப்பில்வண்ணப் படங்கள் காட்டிச்சிரித்த இருபது ரூபாய் வலது கையிலிருந்து இடது கைக்கு மாறிய கணம் அது சடைப் பைக்குள்ளாய் பயணித்து பத்து ரூபாய் தாள் ஒன் றை கையில் எடுக்கிறது.

இளம்மஞ்சளிலும்,அடர் பிஸ்கட்கலரிலுமாய் இருந்த அதுகண்டக்டரின் கை க்கு மாறிய நேரம் இருபது ரூபாய் பைக்குள்ளாய் சென்று தஞ்சம் புகுவதாக/

இளவயதைஉடலில்காட்டிய கண்டருக்குநன்றாயிருந்தால்30குள்ளாய் இருக்க லாம்வயது.ஒடிந்துசிவந்தவராயும்,வளர்ந்துமாய்காணப்படுகிறார்.அவரதுநிறத் திற்கும், உயரத்திற்கும் காக்கிக்கலர் உடை அவரது உடலில் ஒட்டாமல்/

கையிலிருந்த டிக்கெட் இளம் மஞ்சளில், ரோஸில், பச்சையில் எனகலர்காட்டி
செல்கிறது,கூடவே தன் விலை சொல்லியுமாய்.

கட்டணம்கூடத்தான்இங்கிருந்துஇங்குசென்றுவிடுகிறதூரத்திற்குஎனபஸ்க்கட்ட ண உயர்வை எதிர்த்து வீதியில் இறங்கி போராடியும், கருத்துப் பிரச்சாரம் செய்தவர்களின் வேண்டு கோள்களை நிராகரித்து நிர்ணயித்த கட்டணம் காட்டி தாங்கியிருந்தகலர் டிக்கெட்டுகளை தலையெழுத்தே என பஸ்ஸிலி ருந்த அனை வரும் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆண்கள் என எழுதப்பட்டிருந்த வரிசையில் பெண்களும்,பெண்கள் என எழுதப் பட்டிருந்தவரிசையில்ஆண்களும்,முதியோர்கள்எனஎழுதப்பட்டிருந்தவரிசையில் இளைஞ ர்களுமாய் அமர்ந்திருந்தார்கள்.

வரிசைகாட்டிநின்றபஸ்சின் சீட்கள்அமரும் இடம் பச்சையாயும்,முதுகு சாய் கிற மேல்ப்புறம் ப்ரவ்ன் கலர் காட்டியுமாய்.

அடர்பிரவ்ன் கலர் காட்டி பஸ்ஸின் உள் நின்ற கம்பிகள்.பஸ்ஸின் வெளி பிரவ் ன் நிறத்திற்கு சீட்க்கலர் மட்டும் ஒத்துப்போயிருந்தால் சமன் சரியாய் இருந்திருக்கும் என உரத்துச்சொன்னதாய்ப்படுகிறது.

டிக்கெட்கொடுத்துக் கொண்டிருந்த கண்டக்டர்,இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள், நின்று கொண்டிருந்த சிலர் பஸ்சை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் என அனை வரையுமாய் தழுவி பயணித்த பார்வை இவன் பிடித்துக்கொண்டு நின்றகம்பியின்ஆட்டத்தைகவனிக்கமறந்துபோகிறது.கம்பியின்அடிப்புறத்தில் கம்பியைசுற்றிஊனப் பட்டிருந்த ஸ்குருகளில் இரண்டு லூசாக ஆட்டம் காட்டி யவாறு.இவன்அதுதன்னைபோலஇருக்கும்எனநினைத்துக்கொள்கிறான்.

பின்வாசலைஅண்மித்துநின்றஇவன்முன்னால்நின்றநண்பரைஅப்பொழுதுதான் பார்க்கிறான், சப்தம் போட்டு கூப்பிட விருப்பமில்லை.அடுத்தடுத்தாய் நின்றவ ர்கள் மூலமாய் சைகையில் சொல்லிவிட்டு அவரை திரும்பிப்பார்க்கச் செய் கிறான். திரும்பிப் பார்த்தவன் அருகில் வருகிறார் அவர் கூட்டம் பிளந்து/

அவருடன் பஸ்ஸின் வெளிப்புறமாய் ரோட்டில் தெரிந்த சாலையோர மரம் ஒன்று உடன் சேர்ந்து வருவதாக தன் மெல்லிய மலர்கள் உதிர்த்து/கூடவே சாலையில்விரைந்தசைக்கிளும்,பஸ்ஸீம்,இருசக்கரவாகனமும்,சாலையோ ரத்துமனிதர்களையும்அவர்உடன்அழைத்துவருவதுபோலொருபிரமைஉண்டாகிப்
போகிறது.

மரம்,மனிதர்கள்,பஸ்,பயணிகள்,எல்லாம்கடந்தபார்வைஅருகில்வந்தநண்பனில் நிலைத்த போது ஆரம்ப விசாரிப்பு முடிந்து டிக்கெட் எடுத்து விட்டீர்களா என்கிற உடன் விசாரணையில் வந்து நிலை கொள்கிறதாக/

அவர் சொல்கிறார்,பஸ்சினுள் நுழைகையிலே எதிர்ப்பட்ட கண்டக்டரிடம் உட னே வாங்கி விட்டேன் ஒரே ஒரு டிக்கெட்,அதுவும் எனக்கானது,அப்போதே பார்த்திருப்பேனேயானால் உங்களுக்கும் சேர்ந்து வாங்கியிருக்கக்கூடும் என வார்த்தை வரைந்து முடிக்கிறார்.

இப்பொழுது அவருக்குமாய் சேர்த்து எடுத்த இருபதுரூபாய் நோட்டு சட்டைப் பையினுள்ளாக போய் விட்டு பத்து மட்டும் வெளியே வருகிறதாக/

ஊதாக்கலரில்நீள,நீளமாககோடுகள் இறங்கி ஓடிய சட்டை அது.அணிந்து கொ ள்ள மாற்றுச் சட்டைகள் அவ்வளவாய் இல்லாத வேளையில் அவசரம் சுமந்த மனதுடன் போய் பிஸ்மில்லா ரெமேட்ஸில் எடுத்த சட்டை அது.

மாமா,ஒங்கநெறத்துக்கும்,ஹைட்டுக்கும்இதுதான்சரியாஇருக்கும்எனவேறெதை யும் யோசிக்க விடாமல் கடையின் உரிமையாளர் மடித்துகொடுக்க வாங்கி வந்தசட்டை.என்னசைஸ் 42க்குப்பதில்40எடுத்திருக்கலாம்.இன்னும் கொஞ்சம் பிட்டாகவும்  பார்க்க நன்றாகவும் இருந்திருக்கும்.

அது ஒரு காலம்,அரைக்கை முழுக்கை எதுவான போதிலும் சரி லூசாகத்தான் தைத்துப்போடுவான்.கேட்டால் தனக்குள்ளாகவோஅல்லது கேட்பர்களிடமோ பெரிய  அளவிலாய் ஒன்றும் விவரிக்காமல் பேண்ட் சட்டை போட்ட பின்பாக கண்ணாடி முன் நின்று அழகு பார்த்து நிற்பதில்லை.சட்டையின்முதல் பட்ட னை வீட்டுற்குள்ளாய் மாட்டிக் கொண்டு கடைசி பட்டனை வீட்டின் படியி றங்கும் போதுதான் கைமாட்டும் என்பான்.

தவிர பேண்ட்,சர்ட்டில் லக்கி என எதையும் தனியாய் ஒடுக்கிவைத்ததில்லை. அல்லதுஅப்படிஒதுக்கிவைக்கத்தெரிந்ததில்லை.இவனைப்பொருத்தவரைதன்னி டம்இருந்தமூன்றுசெட் பேண்ட் சர்ட்டுகளையுமே லக்கியாகவே நினைத்துப் பழகிப் போனான்.

ஆனால் இவன் வைத்திருந்த மஞ்சளில் கட்டம் போட்ட சட்டையை மட்டும் விதி விலக்காகக்கருதிஅடிக்கடிஅணிகிறபழக்கம்கொண்டிருந்தவனாக/அந்த சட்டைஅணிகிறநேரமெல்லாம் இவனிடம் கருப்புப்பேண்ட் வந்து உருக்கொள் ளும்.

அப்போதெல்லாம் ரெடிமெட் ஸர்ட்டுகள் அவ்வளவாய் பிரபலமாயிருக்காத நேரமும்,துணிஎடுத்து குறிப்பிட்டடெய்லரிடம்மட்டுமேகொடுத்து தைக்கிற பழக்கத்தை கைக் கொண்டிருந்த வேளையும் ஆகும்.

அந்தமஞ்சள்சட்டையும்துணிஎடுத்து தைத்ததுதான்.கோயம்புத்தூர்ட்ரெய்னிங் போன போது ட்ரெனிங் சென்டர் இருந்த சாலையில் ஒரு பிரபல மில்லினு டைய ஷோரூமில் எடுத்தது . உடன் வந்த ரஹ்மத்தான் சொன்னான். கோயம் புத்தூர் வந்ததற்கு அடையாளமாய் ஏதாவது ஒன்றுஇங்கிருந்து கொண்டுபோக வேண்டும்என/

அப்பொழுதுடீக்குடித்துகொண்டிருந்தகடையில்தோன்றியயோசனைஅது.கடைக் காரர்தான்சொன்னார். எதிர்த்தாற்ப்போல் இருக்கிற ஒரு மில்லின் ஷோ ரூமைக் காட்டி.இங்கு துணிகள் நன்றாக இருக்கும்,விலை குறைவாகவும்/ போய்ப் பாரு ங்கள் .பிடித்தால் எடுத்துக் கொள்ளுங் கள்என. அவர் சொன்னது போலவே அமைந்துபோனது.பின்னே மீட்டர்13ரூபாய்என்றால்,,,,/

ரஹ்மத்தான்சொன்னான்.நாமெல்லாம்அரசு உத்தியோகஸ்தர்கள், போயும், போ யும்13ரூபாய்க்காதுணிஎடுப்பது?மீட்டர்40,50ற்கு எடுக்கவேண்டாமாஎன/ அதை விடுத்து ,,,,என்றவனை ஏறிட்டுவிட்டும்அவனதுபேச்சைபுறந்தள்ளி விட்டுமாய் எடுத்துவந்ததுணியது. இதையெல்லா ம் பார்த்த ரஹ்மத் கடையை வேடிக்கை பார்ப்பது போல பார்வையை மாற்றி கொண்டான். ரஹ்மத் இவனது ட்ரெனிங் மேட் மட்டுமல்ல.ரூம் மேட்டும் கூட/

ட்ரெயினிங்சென்டர்அருகிலேயேரூம்எடுத்துத்தங்கியிருந்தார்கள்.அதுட்ரெய்னி
ங் சென்டருக்குஅருகில் இருந்தது என்பதற்காக மட்டுமல்ல. வாடகை  குறைச் சல் என்கிற உள்ச்சொல் ஒனறும் ஒளிந்து கிடந்தது அதனுள்ளாக/

ஆனால்வாடைகுறைச்சலில்எத்தனைவம்பு வந்து சேரும் என்பது அன்று இரவே ருசுவாகிப் போனது.

அன்று மழையாய் இருந்ததால் ரூம் பாயிடம் சொல்லி நால்வருக்குமாய் டிபன் வாங்கிவரச்சொல்லிசாப்பிட்டுக்கொண்டிருந்தவேளை.இவனும்,ரஹ்மத்தும்தங்கி யிருந்த அறையின் பக்க த்து அறையில்தான்உடன்ட்ரெனிங் வந்த இருவரும் தங்கியிருந்தார்கள்.

பெரும்பாலான நாட்களிலும்,உடல்சோம்பல்அதிகாகிபோனதினங்களிலுமாய் இப்படி டிபன் வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டு விடுகிற பழக்கம் உண்டாகிப் போனது. ஊர்ப்போகிற வரை பசிக்கென ஏதாவது சாப்பிட வேண்டுமே.என்கிற கட்டாயத்தில் சாப்பிடுவதாய்ச் சொன்னான் இவன் சக நண்பர்களிடம். அவர்க ளும்அதையேவும்,,,,,,இன்னும்கூட சேர்த்துச் சொன் னார்கள். அன்றும் அப்படித் தான்வெளியேபெய்துகொண்டிருந்தமழையின்மென்சப்தத்தையும்,மண்வாசனை யையும் நுகர்ந்தவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை போலீஸ்க்காரர் ஒருவருடன் லாட்ஜ் மேனேஜர் வந்தார். இவன்தான் போய் என்னவென கேட் டான். ”இந்த வரிசையில் நான்காவது ரூமிலிருந்தவரின் பணம் காணவில் லை. எங்களிடம் சொல்லிப் பார்த்த அவர் நேரடியாய் போலீஸ் ஸ்டேஷன் போய்விட்டார்,அவர்கள்விசாரணைக்குவந்திருக்கிறார்கள்.இதற்காகவிசாரிக்கப் படுகிறவர்களில் இப்போது நீங்கள் நான்காவது ஆள்” என்றார் லாட்ஜ் மேனே ஜர்.

அவர்சொல்லிகொண்டிருந்தவேளையிலேஒழுக்கமாஉண்மையஒத்துகங்க,இல்ல தூக்கி உள்ள வச்சி செதச்சிருவோம்,செதச்சி,,,,, என்றார்.

இவன்தான் சொன்னான்.சார் நாங்கள் காலை போனால் மாலையில் வருகிற வர்கள். தவிர நாங்கள் மாதச்சம்பளம் வாங்குகிற மிடில் கிளாஸ்,எங்களை இப்படி சந்தேகம் கொள்வது காலனுக்கே அடுக்காது என்கிறஇவனது உரை யை புறக்கணித்த போலீஸ்க்காரர் எந்திரிங்கடா எல்லாரும் போலீஸ் ஸ்டேச னுக்கு என்றார்.

இவன்தான்அப்பொழுதும்உள்ளேவிழுந்துபேசித்தடுத்தான்.உண்மையைச்சொல்கி றோம்.பிடித்துக்கொண்டுபோவேன்என்கிறீர்கள்.நாங்களும்சரியெனவருவதாய் ஒத்துக்கொண்டாலும் கூடநாளைபிரச்சனை வேறுமாதிரியாய் போய்விடும் எனச்சொல்லிவிட்டுலாட்ஜிக்குஎதிராய்இருந்தஆட்டோஸ்டாண்ட்போர்டையும், அதற்குஅருகாமையாய்நின்றிருந்தகொடிக்கம்பத்தையும்காட்டிலாட்ஜ் மேனே ஜரிடம் மெதுவானகுரலில்பேசியதும்லாட்ஜ்மேனேஜர்போலீஸ்க் காரரை கூட் டிக்கொண்டுபோய்விட்டார்.போலீஸ்க்காரர்இவனையும்கூடஇருந்தவர்களை யும் முறை த்துக் கொண்டே சென்றார்.

மறுநாள் ட்ரெயினிங் முடிந்து டீக்கடையில் நின்ற வேளை முந்தைய தினம் லாட் ஜிக்கு வந்து மிரட்டிய அதே போலீஸ்க்காரர் ஸ்னேகமாய்ப்பார்த்துச் சிரித்தார். டீக்கடையின்அருகிலிருந்த பூந்தொட்டியில் பூக்கள் தெளிந்து மலர்ந் தது போலானதொரு உணர்வு/ எதற்கும் இருக்கட்டுமே என இவனும் ஒரு மென் சிரிப்பை தந்து விட்டுக்கேட்டான் ஏன் நேற்று அப்படி வந்தீர் கள் என/ இந்தச் சாலையில் இருகிற பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் திருட்டுப் போய் விட்டதாகவும், அதற்கான விசாரணையில் அப்படி நடந்து கொள்ள வேண்டி யதாகிப்போனது உங்களி டம் என வருத்தம் தெரிவித்தார்.மற்றபடி போலீஸ்க் காரர் வந்து போன நாளன்று நான்காவது ரூமில் ரூபாய் காணாமல் போன து ஒரு தற்செயல் ஒற்றுமையே/

இத்தனையும் பேசிய அன்று இரவு எடுத்து வந்ததந்த மஞ்சள்க்கட்டம்போட்ட துணி. நன்றாக இருந்தால் அது தைத்து முடிக்கப்பட்ட நாளிலிருந்து பத்து தடவைதான் போட்டிருப்பான் அந்த சட்டையை.துவைத்த துணிகள் காய்ந்து கொண்டிருந்த குளிர் நாளின் இரவொன்றில் சட்டையின் வலப்புறத்தில் கையோரமாய் எலிகடித்து குதறியிருந்தது,என்ன இது எலி,,,,?ஒரு விவஸ்தை கிடையாதா அதற்கு?இப்படியா புதுச்சட்டையை கடித்துக்குதற வேண்டும்,ஒரு எலியின் நடமாட்டம் வீட்டில் இருக்கிற போதே சொன்னேன், கேட்கவில்லை நீங்கள், இப்பொழுது கூட்டம் சேர்ந்து கும்மாளம் போடுகிறது. ஊர்காரியத் துக்காக அலைகிற உங்களு க்குவீட்டைபற்றிய நினைவும் அக்கறையும் எப்படி இருக்கும் என மனைவி சொன்னநாட்கள் இன்னும்மனதினுள்ளாய் பெரும் உருவெடுத்து.

அவள்சொல்லிலும்தப்பில்லை.அவளும்என்னதான்செய்வாள்பாவம்,,,,,,,,,/பச்சா தாபம்மேலிடஅவளிடம்மனம்வருந்துகிறநாட்களில்அதனாலென்ன,,உங்களுக்கு நேரமில்லை பாவம் நீங்க ளும் தான் என்னசெய்வீர்கள் என இவனுக்கும் சேர்த் து வருத்தபட்டுக் கொள்வாள்.

அப்படியாய்அவள்வருத்தம்தெரிவித்தவெயில்க்காலபொழுதொன்றில்இன்னொ ரு சட்டைஒன்று எடுத்துக்கொள்ளுங்கள் புதிதாக எனச்சொல்கிறாள் மனைவி. அமையுமா இனி அந்த மஞ்சள்க் கலர் மாதிரி,,,,,என்கிற எதிர்பார்ப்பைத்தேக்கி போய் எடுத்து வந்த சட்டை ஊதாக் கலரில் நீண்டிறங்கிய கோடுகள் ஓடியக் காண்பித்ததாய்/

கோடுகளை வரைந்த கைகளும்,துணியை நெசவிட்ட மனதும்,அதைதைத்து சட்டையாக்கிய அன்புள்ளமும் யாருக்குச்சொந்தமானதாய் இருந்த போது கூட அதைகொஞ்சமும்நினைத்துப்பார்ப்பதில்லை.அப்படிப்பார்ப்பவர்இங்குஅரிதே/

சட்டைப் பையினுள்புகுந்த இருபதை வலது கை பத்திரப்படுத்திய நேரம் பஸ்சி ற்குள்ளாய் இருந்த வயதான மூதாட்டி தன் பேரன் வயதிருந்த ஒருவனிடம் கைபிதுக்கிஎண்ணியசில்லறைகளைக்கொடுத்துடிக்கெட்வாங்கச்சொல்கிறாள், கண்டக்டர் டிக்கெட்டிற்கு காணாது இது. இன்னும் வேண்டும் இரண்டு ரூபாய் கள் என அவர் சொன்ன வேளை வலது கை பத்திரப்படுத்திய ரூபாயை இடது கை வெளியில் எடுக்கிறது.

16 comments:

yathavan64@gmail.com said...

உணர்வுகளை உள்ளன்போடு சொன்ன கதை!
முடிவில் "வலது கை பத்திரப்படுத்திய ரூபாயை இடது கை வெளியில் எடுக்கிறது"
வரிகள் உணர்வின் உச்சத்தை தொட்ட வரிகள்!
வாழ்துக்கள்! அருமை!
நன்றியுடன்,
புதுவை வேலு

vimalanperali said...

வணக்கம் யாதவன் நம்பி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

உணர்வுகளை வைத்தே கதை பிண்ணும் உக்தி உங்களிடம் மட்டுமே காண முடிகிறது அண்ணா...
அருமை...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

தம 3

Unknown said...

பஸ்ஸில் ஆரம்பித்து எங்கெங்கோ கூட்டிச் சென்று ,கடைசியில் பஸ்சிலேயே கொண்டு வந்து விட்டு ,சட்டைப் பையில் ரூபாயை தேடி எடுத்த ...உங்கள் சித்திரம் மனதுக்குள்ளேயே பதிந்து விட்டது !
த ம +1

vimalanperali said...

வணக்கம் பகவான் ஜி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு சார்./

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,வாக்களிப்பிற்குமாக/

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.

Kasthuri Rengan said...

எடுத்த இடது கைக்கு எனது அன்பு முத்தங்கள் ..

Kasthuri Rengan said...

த ம நான்கு

திண்டுக்கல் தனபாலன் said...

கர்ணன்...!

vimalanperali said...

வணக்கம் மது அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு மது சார்./

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/