18 Jan 2015

உடைசல்,,,,,,

வாங்கியதக்காளியில்இருந்தஅழுகியபழங்கள்இரண்டைதூக்கிஎறியஎத்தனிக் கையில்கடைக்காரர்சொல்கிறார்.”அதஎதுக்குதூக்கிப்போடுறீங்க,இந்தாயெடது ஓரமாகடைநடையஒட்டிஇருக்குபாருங்கஅந்தத்தட்டுலபோடுங்க,யாராவது ஆடு குட்டி வளக்குறவுங்க வந்துமொத்தமாஅள்ளீட்டுப்போவாங்க” என்றார்.
கடைக்காரரின்வார்த்தைக்குக்கட்டுப்பட்டவனாக கையிலிருந்த தக்காளிகள் இரண்டைஅவர்சுட்டிக்காட்டியக்கூடையில்போடும்போதுதான்கவனிக்கிறான். மூங்கில்நாரால்பின்னப்பட்டிருந்தஅந்தக்கூட்டையில்அழுகியதக்காளிகள், உடைந்த தக்காளிகள் சூத்தைக் கத்திரிக்காய் என கலந்து கிடந்தது.
 
இப்போதெல்லாம்இதுமாதிரியானமூங்கில்கூடைகளைப்பார்க்கமுடியவில்லை. நம்அதிர்ஷ்டத்தைப்பொறுத்துபஜாரில்எங்காவதுஅகஸ்த்மாத்தாய் பார்த்தால் தான் உண்டு.பஜார் கடைசியில்இருக்கிறநாட்டுமருந்துக்கடையில் பார்க்கக் கிடைக்கிறது,அதையாராவதுவாங்குவார்களாஇல்லையாதெரியவில்லை.தூசி அடைந்துபோய்இருந்தது,கடைக்காரரிடம்கேட்டால்எங்கசார்இதோடஅருமை யாருக்குப்புரியுதுஎன்றார்.யாராவதுடீவியிலவந்துஇல்லையின்னா பேப்பர்ல இந்தக்கூடையபெழங்குனாஒடம்புக்கு நல்லதுன்னு பேட்டி குடுத்தாஇல்லை பேப்பர்லசெய்திஏதாவதுபோட்டாவிக்கிமோஎன்னவோதெரியலசார்,அப்பிடித் தான ஆகிப்போச்சி இப்ப,நம்ம கையில இருக்குற பொ ருள,இல்லைன்னா நம்மகாட்டுலநம்மதோட்டத்துலவெளையிறதானியம்தவசிகளோடநன்மைய ப்பத்தியாராவதுவந்துசொன்னாவாங்குறாங்கஅது எவ்வளவு கூடுன வெலை யில வித்தாலும் சரின்னு,அது மாதிரிதான் இதுவும்ஆகும்போலத்தெரியுது” என்பார்.
 
ஆனால்தெப்பம்வடக்குப்படித்துறைக்குஎதிர்த்தாற்ப்போல்இருக்கிறவெங்காயக் கடைக்காரர்விற்கிறமூங்கில்கூடைகள்அப்படியாய்இருக்கவில்லை,அவர் அப்படியான தகவல் ஒன்றையும் சொல்லவில்லை. 
 
”நம்மகிட்டஎப்பயும்போல வித்திக்கிட்டுதான்இருக்குசார்.என்ன மாரியம்மன் கோயில்திருவிழாப்பகூடக்கொஞ்சம்போகும்.மத்ததினங்கள்லஎப்பயும்போல ஒண்ணுரெண்டுன்னு,,,,,,,,,இதவாங்குறதுக்குன்னுஇப்பயும்ஆள்கஇருக்கத்தான் செய்யிறாங்கசார்,இப்பயும்கம்பு,கேப்பைகேட்டுகடைகடையாஏறியெறங்குற ஆள்கஇருக்கத்தான்செய்யிறாங்கசார்,இன்னும்ரோட்டுலஅம்பாஸிடர்கார்ஓடத் தான்செய்யிதுசார்,பிரிண்டிங்லைன்லஇன்னும்ட்ரெடில்,ஸ்கிரீன்பிரிண்டிங்க் இருக்கத்தான்செய்யிதுசார்.அதுபோலபழமை மாறாத சிலது இன்னும் ஓடிக் கிட்டுதான் இருக்கு சார்.என்ன இதெல்லாம் காலத்தின் தேவைக்கு ஏத்தாப் புலமறுஉருவாயிருது.அதுபோலஉணவையும்தேவைக்குஇல்லைன்னாமருந் து மாதிரின்னு சொன்னா மட்டும்சாப்புடுற பழக்கம் வந்துரிச்சி நம்மகிட்ட. இதுகாலத்தோடகட்டாயமா,இல்ல திணிக்கப்பட்ட ஒண்ணான்னு தெரியல, சார்”என்பார் வெங்காயக் கடைகாரர்/
கால்கிலோமட்டும்பழமாகவும்மிச்சம்முக்கால்கிலோவிற்குகால்வெட்டாக போடச்சொல்லியிருந்தான்.இவன்சொல்லாவிட்டாலும்கூடவழக்கமாக அந்த வேலையை செய்து விடுவார்/காய்கறிக்கடைக்காரர்/ இன்று ஏன் இதைச் செய்யவில்லை.
ஆளே ஒரு மாதிரியாய்கம்மென இருந்தார் வழக்கமானகலகலப்பைகழட்டி கீழே வைத்துவிட்டு/
தெப்பத்தை சுற்றியிருந்த கிழக்குச்சுவரோரமாய் அவர் கடை போட்டிருந்த போது அவரது பேச்சுக்காகவே கடையில் ஆட்கள் கூடும்.
“மனசுல என்ன கவல இருந்தாலும் அவரு கடைக்கிப்போயி அவரோட நாலுபேச்சுபேசீட்டோம்ன்னாபோதும்மனசுலேசாயிரும்ல,காயிவாங் காட்டிக் கூடபரவாயில்ல,சும்மாவாவதுஅவரு கடைக்கி போயிட்டு வரணும்” என்பா ர்கள்அவரைப்பற்றிநன்றாகத் தெரிந்தவர்களும்,அவரது கடைக்கு வாடிக்கை யாக போய்வருகிறவர்களும்/
”சரிதான்வுடு,ஒவ்வொருத்தணுக்குள்லயும்ஒருதெறமஇருக்குறமாதிரிஅவனு க்குள்ளஅப்படிஒருதெறம ,என்னதான் பேச்சு பேச்சா இருந்தாலும் காரியத் துலகண்ணா இருப்பான்ல,இல்லைண்ணா இந்த பஜார்ல நின்னு யேவாரம் பண்ணமுடியுமா?ஆளு முழுசா நிக்கையில தலைய மட்டும் தனியா கழட் டிகையில் எடுத்துட்டுப்போயிற மாட்டாங்க. ஏயப்பாஎப்படியாப்பட்டயெடம் அது.அங்கயும் நின்னு யேவாரம் பாத்து ஆள்களப்பழகி சமாளிச்சி ஜெயிச்சு நிக்கிறதுன்னாசும்மாவா,?
”நல்லாவந்துக்கிட்டிருந்தான்.காலையிலயிருந்துராத்திரிஏழுமணி வரைக்கும் யேவாரம்பண்ணுறஅவன் மேல யாரோ கண்ணு பட்ட மாதிரி அவன் பொழ ப்புல மண்ணு விழுந்துருச்சி,ஹைவேஸ் ரைடுன்னு அங்கஇருந்தகடைகள எடுத்தப்ப இவன் கடையும் காலியாகிருச்சி” என்பார்கள் பேச்சினூடாக/
இப்போது மச்சினன் கடைக்கு அருகிலேயே அவரும்கடைவைத்திருந்தார். உயரமான வெடவெடத்த உடலும், ஒட்டிப் போன கறுத்த நிறமும் கட்டம் போட்டகைலியும்வெள்ளை பனியனும் அவருக்கும் நன்றாகவே இருந்தது.
கூடையில்தக்காளியைபோட்டுவிட்டுநிமிர்ந்தசிறிதுநேரத்தில்கூடையில்கிடந்த தக்காளியையும் கத்திரிக்காய்களையும் ஒருவர்அள்ளிக்கொண்டு போனார். இவரைஎங்கேயோபார்த்ததுபோல்இருக்கிறதே,ஆகாஇவர்அவர் இல்லை, சென்றமூன்றுமாதங்களுக்குமுன்பாய் காய்கறி வாங்கிக்கொண்டிருந்த ஒரு மதியவேளையில்தலை நிறைந்த போதையுடன் அந்த இடத்தையே அலசிக் கொண்டிருந்தவரல்லவாஇவர்.இப்பொழுதுசாந்தசொரூபியாக,,,எப்படிமுடிகிறது இப்படியெல்லாம்இருக்க,,,,ஏயப்பாஇதற்குஒருதனிபயிற்சிவேண்டியதிருக்கும் போலிருக்கிறதே?
ஆனால்அங்கிருக்கிறகடைக்கார்களுக்குஇதுபழகிவிட்டதுபோலும்.அன்றைக்கு
க்கூடகாய்கறிக்கடைக்கார்தான் சொன்னார்.
“சார்சும்மாநில்லுங்கநீங்கபாட்டுக்கு,இந்தாஇருக்குல்லஇந்த எல்லக் கோட்ட த்தாண்டிஅவரு வர மாட்டாரு,சும்மா ஆத்த மாட்டாஎன்னத்தை யோசத்தம் போட்டுக்கிட்டுஇருக்காருபாவம்,என்னபலபேருபேருவார, போறயெடத்துல நின்னுசலம்புறதாலகெட்ட மனுசனா தெரியிறாரு, உண்மையிலே ரொம்ப நல்லவர்சார்அவரு.என்னத்தையோ ஒடம்பு வலிக்கு ஆத்தமாட்டாம வாரத் துலஒருநாஇப்பிடி,,,இன்னும்கொஞ்சநேரத்துலவீட்டுக்குப்போயிருவாரு, வீட்ல கறி வெந்துட்டு இருக்கும்.வெறும் வயித்தோட ரொம்ப நேரம் சத்தம் போட முடியாதுல்லசார்.போன மாசம்ன்னா ஒரு நாஇப்பிடித் தான் சத்தம்  இருந்தவருபடக்குன்னுமயங்கி விழுந்துட்டாரு,என்ன செய்ய பின்ன, பாத்து க் கிட்டும்இருக்கமுடியல,மனசுகேக்கலஅங்கஇருக்குறடீக்கடைக்காரவுங்க நாங்கஎல்லாருமாசேந்துஒருஆட்டோபுடிச்சிவீட்டுக்குஅனுப்பிச்சி வச்சோம்”.
காய்கறிக்காரர் சொன்னஅன்றிலிருந்து மறுமுறையாக அவரைஇன்றுதான் பார்க்கிறான். 
கூடையில்கிடந்தகத்திரிக்காய்களையும்,தக்காளியையும்அவர்கொண்டுவந்தி ருந்தவயர்கூடையில்அள்ளிப்போட்டவர்இவனைநோக்கிவந்துதலைகுனிந்தவ
வராய் அருகில் நின்றார்,
இவனுக்கானால்என்னவெனக்கேட்கபயம்.ஏதாவதுஎசக்கேடாகபேசி விட்டார் என்றால்,,,,,,,,மானம்போய்விடும்,பதிலுக்குப்பேசுவது,சத்தம்போடுவதுஎன்பதெ ல்லாம் ஒரு புறம் இருந்தாலும் கூட,,,,,,, உடனடியாக எதிர் வினை செய்ய வேண்டுமே?அதற்குபேசாமல்இருந்துவிடலாம் அல்லது காய்கறி பொறுக்கு வது போல தலை குனிந்து கொண்டே இருந்து விடலாம். 
எவ்வளவு நேரம்தான் அவரும் பக்கத்தில் நின்று  தலை குனிந்து மௌனி யாகஇருப்பார்?
”சார்அன்னிக்குதண்ணியப்போட்டுட்டு தராதரமில்லாம பேசிட்டேன், மறுநா காய்கறிக்கடைக்காரஅண்ணன்கூடச்சொன்னாரு,நீங்கவருத்தப்பட்டதா,நல்லா உழைக்கிற ஒடல் உழைப்பாளி ஏன் இப்பிடி தண்ணியப்போட்டுட்டு கெட்டு போறாருன்னு,,,,தவிரகெட்டபேருவேறஅதுஎதுக்குன்னு?வாஸ்தவந்தான்னு  தோணுச்சி நீங்கசொன்னது,வருத்தப்பட்டதுஎல்லாமும்/ நாங்கஎன்ன செய்ய ஒடம்புவலிக்குஆத்த மாட்டாம இப்பிடி,,,,,,,,மறக்கணும்ன்னு நெனைச்சாலும் கூடரோட்டோரமாஇருக்குறகடைவந்துகண்ணுலபட்டுருது.பின்னஎன்னசெய்ய நாங்க,,,,பொறங்ககைய நக்குனவன் நெலையா ஆகிப்போகுது எங்க கதை, என்னசெய்யச்சொல்றீங்கஎன்னையுவும்என்னயபோலானவுங்களயும?”
                                                                            ”இப்பிடித்தான்தண்ணியப்போட்டுட்டுரோட்டுலசலம்பிக்கிட்டுத்திரியிறம்.நீங்க சொன்னதுக்கப்பறம்காய்கறிக்கடைக்காரஅண்ணன்கூடசொல்லிவருத்தப்பட்
டாரு,அன்னிக்குச்சொன்னேன்இனிமஇந்தமாதிரிபண்ணமாட்டேன்னுஇதுவரை
க்கும்அதுமாதிரிரோட்டுலசலம்பலரொம்பஆசையாஇருந்தாஞாயித்துக்கெழம வீட்டுக்குஒருகுவார்டர்வாங்கீட்டுப்போயிதண்ணிகலந்து அடிச்சிட்டுபேசாம படுத்துக்கிருவேன்.வீட்ல ஏங் பொண்டாட்டிய தவுர யாருக்கும் தெரியாது இது,புள்ளைங்கபெசல்கிளாஸ்ன்னுபோயிட்டப்பெறகுகாலையிலபத்துமணிக்கு அப்பாலகுடிச்சிட்டுபேசாமபடுத்துருவேன்,அப்பறமா புள்ளைங்க கிளாஸ்ல இருந்துவந்தப்பெறகுஅவுகசாப்புட காத்துக்கிட்டு இருந்துட்டு அவுங்கசாப்புட் டுட்டுபோனபெறகுநானும்ஏங்பொண்டாட்டியுமாசாப்புட்டுட்டுதூக்கம்வராட்டிக் கூடபேசாம படுத்துருவேன்.”
”பெரியவவயசுக்குவந்துநிக்குறா,சின்னவன்எட்டாப்புக்குப்போறான்,பொண்டாட் டிக்குதீராதயெளைப்பு இருக்கு, ஒடம்புக்கு நல்லா இருக்கும் போது பருப்பு மில்லுக்கு வேலைக்குப் போவா, கொஞ்சம் சொனங்குன அன்னைக்கு லீவு போட்டுருவா,மில்லுமொதலாளிகூடசத்தம்போடுவாருஅப்பப்ப,ஒழுங்கா
வேலைக்கு வந்தா வா,இல்லைன்னா வீட்லயே இருந்துருன்னு.,,,அப்புறமா நாந்தான்போயிமில்லுமொதலாளிகிட்டஏதாவதுசொல்லிசமாளிச்சிபேசிசரிக்
கட்ட வேண்டியிருக்கும். இத்தன ஓடிக்கிட்டிருக்கும் போது எனக்கு நித்தம் வேலகெடைக்குமாகெடைக்காதாங்குறகவலவேற/என்னசெய்யஎங்களுக்குன்னு தெரிஞ்சஒரேமாத்துமருந்துஅந்தபாலாப்போனதண்ணிதான்,குடிச்சித்தான்ஆக வேண்டியிருக்கு, குடிக்கிறேன்.மத்தபடி மனசுல ஒண்ணும் இல்லை சார்,” என்றவாறுநகன்றுபோனஅவரைவெகுநேரம்வைத்தகண்வாங்காமல்பார்த்துக் கொண்டிருந்தான்.
கூடையில் தூக்கிப்போட்ட அழுகியதக்காளிகளுக்குப் பதிலாய்  வேறுநல்ல பழங்கள் இரண்டை எடுத்து கையில் கொடுத்தார் கடைக்காரர்/

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பாழாய்ப் போகும் என்று தெரிந்தும் செய்வது தப்பு...