27 Jan 2015

சுவடு,,,,,,

தலையிலும்,தோள்களிலும்,மார்மீதும்அள்ளிச்சுமந்ததுவரங்காய்களும்,அதன்
பூக்களை,பிஞ்சுகளை,காய்களை தன்னகத்தே தாங்கிசுமந்ததுவரஞ்செடிகளும் மறந்து போனது கிட்டத்தட்ட/

கிட்டத்தட்ட என்பது கூட பொய்தான் முழுவதுமாக என்பதுவே சரியாக இருக் கும்.

கடையில்வாங்கிய காய்கறிகளை கேரி பேக்கில் போட்டு தோள்பையில் இறக் கிய தருணம் ஒரு வட்டத்தட்டில் (அழகாக பிண்ணப்பட்டிருந்த மூங்கில் தட்டு,யார் கைபட்டு இப்படி உருவெடுத்திருந்தது எனத்தெரியவில்லை. நன்றா க இருந்தது பார்க்க.

பிண்ணியவர்களின் கைவண்ணம் மட்டுமில்லை,அவர்களது வாழ்க்கையும் அந்தசின்னத்தட்டில்பிரதிப்பலிப்பதாக/)குவித்துவைக்கப்பட்டிருந்தபொடிப்பொடி யான நீள, நீள காய்களைப்பார்த்து கேட்கிறேன் இது என்ன என/

என்னைப்பற்றியும்,எனது இளம் பிராயத்து நாட்களைப் பற்றியுமாய் முழுவது மாய்தெரிந்தவரும்,எனதுஅருகாமைஊர்க்காரருமான கடைக்காரர்தான் சொன் னார்.இது தொவரங்கா,இது கூட மறந்து போச்சா,ஒங்களுக்கு என /

அவரின் வார்தைகள் முழுவதுமாக எனது செவிப்பறைகளில் மோதி, மனதிலு ம்,கன்னத்திலுமாய்விழுந்தசெருப்படியாய்வெகுநேரம்வலித்துக்கொண்டிருந்தது. கடையை விட்டு அகன்ற பின்னும் கூட/

அதிலும் “இது கூட மறந்து போச்சா” என்கிற வரிகளை மறக்காமல் மனம் முழு க்க கனத்துடன் வாழ்வின் மிகப்பெரிய அவமானம் சுமந்தவனாய் தலை குனிந் து கொண்டு வந்து கொண்டிருந்தேன்.

என்னுள் குடிகொண்டிருந்த பழைய மென்நினைவுகைளையும்,நான் பொத்தி பாதுகாத்து வந்து கொண்டிருந்த ஞாபகங்களின் புனிதங்களையும் சுத்தமாக மறந்து போனேனா?அல்லது அதை என்னுள் இருந்து துடைத்தெடுத்து எறிகிற அளவுக்குமொன்னைதனம்கூடிப்போனதா என்னுள்/அல்லது பட்டதெல்லாவற் றையும்மறந்துபோனேனா?70களின்முடிவிலும்80 களின்முற்பகுதியிலும் வாய் க்கப்பெற்றிருந்தவிவசாயக்கூலித்தொழிலாளிவாழ்க்கைகற்றுத்தந்ததுஏராளம், ஏராளம்/

உழைப்பிற்குவாக்கப்படிருந்தபிழைப்பின்நேரமாகஅதைக்கொள்ளலாம்.இரண் டரைஆண்டுகாலங்களேஅந்தவேலையைநான்செய்தபோதும்கூடகிட்டத்தட்ட,
பத்தாண்டுகளுக்கும் மேலான உழைப்பின் தடங்கள் ஏனது தழும்பு எனது உடம்பில்/

உழைப்பு,உழைப்பு,உழைப்பு,,,,,,,,,,,,,,,,,,,என எந்நேரமும் உடம்பில் இறக்கையை கட்டி ஓடிக்கொண்டிருந்த எனது உடலில் ஒட்டிய உறுப்பாக எப்போதுமே (தூங்குகிற நேரம் தவிர்த்து)உழைப்பின் கருவிகளான மண்வெட்டி, கடப்பாரை, கோடாலிஇல்லையெனில் ஏர்கலப்பை என ஏதாவது ஒன்று இருந்து கொண் டே இருக்கும்.

இப்படி மாறி,மாறி எனது உடலில் ஒட்டிக்கொண்டிருக்கிற அந்தக் கருவிகளின் அடிமையானநான்அவைதவிர்த்துஆடு,மாடுகள் மீதும் அக்கறை கொள்பவனா கவும்,பிரியம்கொண்டவனாகவும்,அவைகளுக்குமிகவும்பரிச்சயம்உள்ளவனாக
வும் ஆகிப் போகிறேன்.

தினசரிகளிலான எனது காலை எழுச்சியே மாட்டுத்தொழுவத்தை ஒட்டி நான் போட்டுப் படுத்திருக்கிற கயிற்றுக்கட்டிலின் பின்னல்களின் மீதிருந்துதான்.
அதிகாலை ஐந்து மணிக்குள்ளான எனது விழிப்பின் நீட்சி மொழு,மொழு கடை யில் போய் மையம் கொள்ளும்.

பின்என்னடீ,பேச்சு,உழைப்பிற்கானஓட்டம்,,,,,,எனநாளின்ஆரம்பம்சுழியிட்டும், கால் பாவியும் என்னில் ஆழ ஊன்றியுமாய்/

உழைப்பின் கருவிகளான மண்வெட்டி வெட்டிய மண்ணிலிருந்தும், கோடாலி கள்பிளந்தமரங்களிலிருந்தும்,கடப்பாரைபுரட்டிப்போட்டபாறைகளிலிருந்தும், ஏர்கலப்பைஉழுதுபோட்ட மண்ணிலிருந்தும் வருகிற வாசனையையும், அதை நுகர்ந்தும் உண்டும் அதை சுற்றிலுமாய் இருந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்,முதியவர்களும் எப்போதுமே என் மனம் கவர்ந்தவர்களாகவே/
தோட்டம்,காடு,வயல்,களம்,,,,,,,இதுஎதுவாகஇருந்தபோதும்அவர்களை சுற்றி படர்ந்தும்,அவர்களதுநினைவுகளைசூழ்கொண்டுமேஎனதுநினைவுகள்/

அப்படி பற்றிப்படர்ந்த நாட்களில் காடுகளில் அறுத்து, கழுத்து வலிக்க சுமந்து தலைமீதும்,மார்மீதும்,தோள் மீதுமாய் சுமந்து அதை களம் வரை கொண்டு வந்து அடுக்கி படப்புகூட்டி வைத்து மறுநாள்,,,மறுநாள்,,,,மறுநாளைக்குமாக அதை காய வைத்து அடித்து எடுத்து உதிர்த்து உருட்டி அழகுகாட்டும் விழிக ளாக உள்ள துவரம் பருப்புகளை மூடை கட்டி வீட்டிற்கு கொண்டு வருகிற வரை அதன் வாசனையையும்,தூசியையும் உடலில் குத்தி உரசும் அதன் உருவ த்தையும் பார்த்து,நுகர்ந்து கூட்டி அள்ளித்திரிந்த வியர்வை நாட்களின் நினை வுகள்என்னில்இருந்துகழன்றுபோனதா,அல்லது அவ்வளவு தூரத்திற்கு ஞாபக மறதிக்காரனாயும், மொன்னைத்தனம் வாய்ந்தவனாயும் ஆகிப்போனேனா?

ஆடு,மாடுகளின்அருகாமை,அவற்றின்சாண,கோமியவாசம்,கயிற்றுக்கட்டில் உறக்கம்,கண்மாய்,கரை,ஓடை,காடு,வயல்,தோட்டம் பயிர்கள் என எல்லாம் சுமந்து சூழ்கொண்டுஇருந்த அந்த உழைப்பின் நாட்களிலிருந்து விலகி,மின் விசிறிகாற்றிலும்,ட்யூப்லைட்வெளிச்சத்திலும்,மத்தியதரவாழ்க்கைசுகத்திலும் உடலும்மனமும்லியிக்ககனத்து,மரத்துப்போனேனா?,,,,,,,,நான்மறந்து போனது தலைமீது,தோள்மீது,மார்மீதும்அள்ளிசுமந்ததுவரங்காயைமட்டும்தானா,அல்லது அது சார்ந்த எனது பழைய வாழ்வின் நினைவுகளையா,,,,,,,,,,,,?

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நினைத்து நினைத்து சந்தோசப்பட வேண்டியது தான்...