9 Feb 2015

எச்சம்,,,,,


ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருப்பவரின் மேல் விழுந்த வெளிச்சப் புள்ளிகள் அவசரமாய் கடந்த கணங்களில் மரநிழலும் அதன் மேல் அமர்ந்திரு க்கிற பறவையும் என் கவனத்தை ஈர்க்கிறது.

அகண்டு பரந்த வெளியெங்கும் தனது சிறகசைப்பாலும், மிதப்பாலும் நிரப்பித் திரியும் காக்கைகளுக்கு சோறு போடுவதற்கும், சோறு வைப்பதற்கும்பெரிய  வித்தியாசம் இருப்பதாய் உணர்கிறேன்.

பேருந்தின்வேகத்தில் காட்சிகள் மாறிவிட காக்கை மட்டும் என் மனதை கொத் தியவாறு.

தனது இருப்பிடத்தில் துயிலெழும் காக்கைகள் சோம்பல் முறித்து காடு மலை கட்டாந்தரை மணல் வெளி எங்கும் பறந்து தனது எண்ணங்களையும் தேவை களையும் பதிவு செய்தவாறேயும், உரைத்தவாறேயும் திரிகிறது.

தோட்டம் காடுகள் விளைச்சளற்று தின்ன ஏதுமற்ற காக்கைகள் நாம் காறி உமிழ்கிற எச்சிலை கொத்தித்தின்னவும் அவற்றை தனது இருப்பிடங்களில் பாதுகாத்து வைக்கவுமாய் பழகிக் கொள்கின்றன.அவையும் காணாத போது ஒட்டிய வயிரும் கிறங்கிய கண்களுமாய் இறகு விரித்து ஊர் நோக்கி வருகி ன்றன தனதுசிறியஅலகுதிறந்தஅழைப்பொலியுடன்.

கரியநிறஉடலும்,தூக்கிப்பறக்கும்இரண்டுஇறக்கைகளும்விரித்துவானத்திலோ வீட்டுகூரைகளின்மீது மிதக்கும் போதோ ஆஜானுபாகுவாய் தெரியாவிட்டா லும் கூட என்னைப்போன்றவர்களை கவரும் விதமாகவே. வேலை நாட்களி ன்மதியம்என்னைபோன்றவகள்வைக்கும் ஒரு கவளம் சோறே அதற்கு தேவா மிர்தமாய்.

அவ்வளவுசின்னூண்டானஉடலைப்பெற்றகாக்கைகளின் வயிறு,இரைப்பை,
இருதயம்,சுவாசக்குழாய்,நரம்புகள்,எலும்புகள் இதர,இதர என சுருங்கிய அதன் சின்னஉறுப்புகளுக்கு சமமாகத்தானோ அதன் சிந்தனையும் செயல்பாடுகளும், மனவிரிபுகளும்.

எங்குசென்றாலும்தத்தித்தத்தியும்,தாவிதிரிந்தும்அமர்கிறஅவைகள் உங்களை யும்,என்னையும்,அவர்களையும்உற்று,உற்றுபார்க்கிறது.கழுத்தை,கழுத்தை சாய்க்கிறது.விழிகளை மூடி,மூடி திறந்து “பொசுக்,பொசுக்கென விழிக்கிறது. டொக்கரியும் கொக்குகளுக்கும்.நோக்கரியும் தங்களுக்குமுள்ள வித்தியாசத் தைஉணர்ந்தும்,தக்கவைத்தும் அது அமர்ந்த இடத்திலிருந்து நாம் நிற்கும் இடம் வரைக்குமான இடைவெளியை கண்களால் அளவெடுத்து கணக்கிட்டு விடுகிறது. இடம் பொருள் காலம்நேரம்என்கிறஎந்தபரிணாமத்திற்குள்ளுமாய் அடங்காத ஆறடிக்கும் அதற்கும் சற்றே குறைவான உயரத்தில் இருக்கும் நம்மைப்பார்த்து பம்மி,பம்மி படமெடுத்து வரும் அது நம் எல்லோரையும் இல்லாவிட்டாலும் கூட வெகுசிலரையாவது அசரடித்து விடுகிறதுதானே?

இறக்கை முளைத்த மனிதனாய் மெல்லிய தன் உடலை தூக்கிக்கொண்டு பறந்து போய் அவைகளின் உலகத்தில் இரைதேடியும் கூட்டில் அடைந்தும் பறந்து திரிந்துமான நிகழ்வு இல்லாத போதும் கூட அவற்றினதும்,குட்டி குஞ்சு களினதுமான அகலத்திறந்த வாயில் சிறிதேனுமாவது இரை ஊட்டி விட ஆசை.

மதியமற்றும்,மற்ற வேளைகளிலும் விடுமுறை நாட்களிலுமாய் அவை எங்கு செல்கின்றன.அவைகளின்உணவைநோக்கியபயணம் எங்கு மையப்படுகிறது? சோறு, குழம்பு,வெஞ்சனம் என்கிற அன்றாட சாப்பாட்டின் ஐயிட்டங்கள் அவைகளுக்கு இல்லைதான்.

வெள்ளி, செவ்வாய் சாம்பார்,பருப்பு சனி ஞாயிறு அசைவம் பிற தினங்களில் இன்ன ,இன்ன என வார நாட்களை வசதியாய் பிரித்து உணவு வகைக்குள் அடக்கிவிடுகிற வித்தையெல்லாம் தெரியாது அவைகளுக்கு.கிடைத்த நேரத்தி ல் கிடைத்தது,அல்லாத நேரத்தில் ஏதுமில்லாமலேயே,,,, என்கிற நியதியே அவைகளின் வயிற்றை நிரப்பும் கோட்பாடாய்.

அப்படியான கோட்பாடுடன் வரிசையாகவும்,ஒழுங்காகவும் மின் கம்பங்களில் நிற்கும்காக்கைகள்அதன்உயர் அழுத்ததில் அடிபட்டு கீழே விழுகையில் அதன் எதிர் சாரியில் ஹோட்டல் வைத்துள்ள எனது நண்பன் விரைவான் கையில் தண்ணீர் ஜக்குடன்.

அடிபட்டு விழுந்த சிறிது நேரம் வரை அதன் உயிர் துடிப்பு இருக்குமாம். அந் நேரம் தண்ணீரை வாயில் விட்டால் பிழைத்துக் கொள்ளும் காக்கைகளுக்கு நீர்விட்டு காப்பாற்றுவதற்கென்றே அந்த அலுமினிய ஜக்கை வைத்திருப்பான் போலும்.

ஹோட்டல்கள்தோறும் எது இருக்கிறதோ,இல்லையோ அலுமினிய ஜக்கும், அதில் நீர் கொண்டு பரிமாறும் சர்வர்களும் இல்லாமல் இல்லை.அது மாதிரி வரிசை மனிதர்களில் இடம் பெற்று விட்ட எனது நண்பன் ரோட்டை கடந்து போகும் முன் இறந்து போன காக்கைகளின் எண்ணிக்கையும்,அவன் காப்பா ற்றிய காக்கைகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். இம்மாதிரியானநேரங்களில்அதுசம்மந்மானவருத்தமும்பறவையோபிமானமும் மிகவும் கூடுதலாகவே காணப்படும் அவனிடம்.

“நான் அல்லது என்னை போன்ற அலுவலக உத்தியோகிதர்கள் ,அவர்கள் உணவு வைக்கும் வேளை, அதை ஒட்டிய காக்கைகளின் கூப்பிடு சத்தம் எல்லாம் என்போன்று எச்சில் கையால் காக்கை ஓட்டுபவர்கள் உள்ளவரை அவைகளுக்கு அரசு அலுவலகங்களில் மதிய உணவு சாத்தியம் என்றே தோன்றுகிறது” என்கிற நினைப்போடும்,அசைபோடுதலோடும் அவைகளின் நினைப்பிலிருந்த பொழுதுதான் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தவரி ன் மேல் விழுந்த வெளிச்சப்புள்ளிகள் மறைந்து காக்கைகள் பறந்து செல்கி ன் றன மரத்திலிருந்து.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பான நண்பருக்கு வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் நண்பர் பாராட்டிற்கு உரியவர்
தம +1

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

KILLERGEE Devakottai said...

எமது வாழ்த்துகளும் நண்பரே....
தமிழ் மணம் 3

Kasthuri Rengan said...

அருமை...
சிறகுகள் முளைக்கட்டும்
தம+

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மது அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/